
வேறு தலைப்புக்கள் சொல்லுங்களேன்.
1. அன்னியர்கள் - தமிழோவியம்
2. கற்கோவில்கள் - திண்ணை
1. உறவுகள் SK
2. உறவுகள் நிர்மல்
3. பொன்னியின் செல்லம்மா ...! (சிறுகதை) கோவி.கண்ணன்நன்றி: புள்ளியியல் ஆசிரியர் மற்றும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ் எல்.
ஒரு ஊர்ல ஒரு இளையராஜா
'ஆதி'க்கு ஆஸ்க்கர்
வெட்டுடா...தூக்குடா
இனிமை, எளிமை நா. முத்துக்குமார்
பட்டியல்
புதுப்பேட்டை
ஐயா நீர் கவிஞர்
கெடா - சிறுகதை
கிருஷ்ணரின் காதல் கவிதை
விடுதலை
கீதாஞ்சலி - பூ
... கூத்தாட்டுவானாகி...
ஆ..ஆ..ஆ அச்ச்ச்சூசூசூ...சிக்காகோ தாவரவியல் பூங்கா - IV
கவிதைகள்
காதல் தெய்வம்
காதலர் தினம்
டுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்
ஆன்மீகம்
புனிதராவது எப்படி?
ஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்
எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்
கடவுள் நம்பிக்கை
கடவுள் 100 கி.மீ
அரசியல்/சமூகம்
ஈராக்குக்கு ஷொட்டு ஈரானுக்கு கொட்டு
"அம்மா, இந்த ஸ்பைடர்மேனப் பாரேன்..."
ஓட்டுப்பெட்டி ஜனநாயகம்
ஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில்
குளிர்கால ஒலிம்பிக்ஸ் - கண்ணோட்டம்
தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும்
இலக்கு என்ன?
தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் -II
யரலவழல
நிர்வாணா
782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்(தொடர்ந்து) நல்ல பின்னூட்டம் வழங்கும் நண்பர்களைப் பெறுவதைப்போல
வேறெந்த கடினமான செயலும் இல்லை? தனிநபர் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்க வேறென்ன வழி?
அறிவுசீவி பதிவர்களின் நட்பு வளர் பிறை; மற்றவர்களின் நட்பு தேய்பிறை.
783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பதிவுகளைப் படிக்கப் படிக்க வெறுப்பு வளர்வது போல பின்னூட்டம் இட இட நட்பு சுகம்
தரும்.
784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
எப்பவுமே 'சூப்பர் சார்', 'கலக்கல் பதிவு', 'பின்னிட்டீங்க' மற்றும் :) போடாம
அப்பப்ப 'என்னடா பதிக்கிற', 'சோம்பேறி', 'கஸ்மாலம்' :( போன்ற பின்னூட்டங்களும்
இடுவதே நல்ல நட்பு.
785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
வலைப்பதிவர் சந்திப்பு, ஜிகர்தண்டட பகிர்வு, எல்லாம் தேவையில்ல சும்மா இணையத்திலே
பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட்டாலே பொதும் நட்பு தானா வளரும்.
786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
சும்மா :) - ஸ்மைலி- போட்டுக்கிட்டு அலையிறது நட்பில்ல உள்ளத்துல இருக்குறத
வார்த்தையில எழுதுவதே நட்பு. (கவனிக்கவும் - பாய்ஸ் படப் பாடலிலிருந்து ஐயன் காப்பி
செய்துள்ளார்)
787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
சகிக்க முடியாம பதிவு போட்டுக்கொண்டு பின்னூட்டமே பெறாத ஒரு பதிவரை நல்ல பதிவு
போடுவதற்கு 784ல் சொன்னமாதிரி பின்னூட்டம் போட்டு வழிநடத்துவதே நட்பு
788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
பின்னூடமெனும் ஆடையிழந்த பதிவருக்கு கைகொடுத்து பின்னூட்டமிடுவதே நல்ல நட்பாகும்.
789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
நட்சத்திரமாய் மின்னும்போது மட்டுமில்லாமல் தேன்கூடு போட்டியில் தோற்று
வருந்தும்போதும் ஒரே மாதிரி பின்னூட்டங்கள் போடுவதே நட்பு.
790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
இவர் என் குழு, அவர் என் ஊர் எனப் பேசினனலும், பல பட்டங்கள் கட்டினாலும்,
எப்போதும் தங்கள் நட்பப பற்றியே பேருமமயாகப் பேசிக்கொண்டாலும், அந்த நட்பு இழிவாகவே
கருதப்படும். (இனையர் = இணையர்; இணையம் + அவர்)
இந்தப் பாவம் போக்க ஐயன் சிலையை ஐம்பது முறை வலம்
வருவதுதான் பரிகாரம் என தீட்சிதர்கள் எனக்குத் தனிமடல் (தமிழில்தான்)
அனுப்பியுள்ளனர்ர்
சிறில் அலெக்ஸ்