Wednesday, March 14, 2007
இயேசுவின் கல்லறை
இயேசுவின் காலத்தில் இறந்தவர் உடலை முதலில் ஒரு கல்லறையில் வைத்துவிட்டு ஒரு வருடம் கழித்து மிச்சமிருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் போட்டு குடும்ப கல்லறைகளில் வைப்பது வழக்கமாம். இப்படிப் பட்ட கல்லறையின்றில் கண்டெடுக்கப்பட்ட பெட்டிகள்தான் ஆவணப்படத்தின் அடிப்படை ஆதாரம்.
டிஸ்கவரி துவக்கத்திலேயே ஒரு பெரிய டிஸ்க்ளெய்மரோடு (Disclaimer ) ஆரம்பிக்கிறது.
ஆவணப் படத்தின் இயக்குனரோடும், இன்னொரு முக்கிய ஆலோசகரோடும், அகழ்வாராய்ச்சி துறையினரும், அறிவியல் வல்லுநர்களும் இன்னும் கிறீத்துவ இறையியலாளர்களும் உரையாடிய ஒரு கலந்துரையாடலைக் காண்பித்தனர். தான் ஒளிபரப்பும் ஒரு நிகழ்ச்சிபற்றி நேர், எதிர் கருத்துக்களை விவாதிக்கச் செய்த டிஸ்கவரியை வியக்காமல் இருக்கமுடியாது. இதை வழிநடத்திய அனுபவமிக்க ஊடகவியலாளர் டெட் காப்பல் தன் அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார்.
பொதுவாகக் கருதப்படுவதுபோலல்லாமல் இந்தக் குடும்பக் கல்லறையை கண்டு பிடித்து 27 வருடங்கள் ஆகின்றன, இப்போதையக் கண்டுபிடிப்பல்ல. இந்த ஆவணப்படம் எடுக்க ஆன காலகட்டம் 3 வருடங்கள். 24 வருடங்களாக அந்தக் குடும்பக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பெட்டிகள் ஜெருசலெம் அருங்காட்சியகத்தின் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பெட்டிகளை அருங்காட்சியகம் ஆவணப்படுத்துவதிலிருந்தே குழப்பங்கள் துவங்குகின்றன. இவை அவசரமாக ஆவணப்படுத்தப்பட்டு சேமிக்கப் பட்டுள்ளன என்கிறார் இஸ்ரயேல் அருங்காட்சியகத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவர். இவையெல்லாம் ஒரே நாளில் அல்லது ஒரே காலகட்டத்தில் சேர்க்கப்பட்டவையா என உறுதியாக அறிய இயலவில்லை.
இந்தக் கல்லறை இயேசுவின் குடும்பக் கல்லறை எனப் பெட்டிகளின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்களை வைத்து சொல்ல முயல்கிரார்கள். இந்தப் பெயர்கள் மிகத் தெளிவாக தெரியவில்லை என்பதும் உணரப்பட்டுள்ளது. இவை அரமைக் எனும் இயேசுவின் தாய் மொழியில்பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட மொத்தம் 10 பெட்டிகளில் 6ல் பெயர்கள் உள்ளன. ஜோசப்பின் மகன் இயேசு எனும் பெயருள்ள ஒரு பெட்டி, மரியா என ஒன்று மரியம்னெ எனப் பெயருள்ள ஒரு பெட்டி யூதா எனும் பெயருள்ள இன்னொரு பெட்டி, இன்னும் பெயருள்ள இரண்டு பெட்டிகள். இந்தப் பெயர்கள் முதலாம் நூற்றாண்டில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஆவணப்படம் தெரிவிக்கிறது. (Use stats) இதற்குமுன் பல கல்லறைகளில் இயேசு எனும் பெயர்பொறிக்கப்பட்ட பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஆவணப்படம் வியாபார நோக்கோடு, பரபரப்பை உண்டாக்க எடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சில வல்லுநர்கள். அகழ்வாராய்ச்சியாளர் ஒருவர் இதை அகழ்வாராய்ச்சியின் ஆபாசத் திரைப்படம்(Archeological pornography) என்கிறார்.
அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் பொருள்சார்ந்த அறிவியலையும்(Material Scinece), எண்ணிக்கை சர்ந்த அறிவியலையும் கொண்டே முடிவுகளை செய்ய இயல்கிறது. இதில் பொருள்சார்ந்த் ஆதாரங்கள் அதிகமிருப்பின் முடிவுகளின் மேல் அதிக நம்பிக்கை உருவாகும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாய் பரிணாம வளர்ச்சிக் கொள்கை.மரபணு சோதனை ஒரு பொருள்சார்ந்த அறிவியல். இந்த ஆவணப்படம் குறைந்த பட்ச மரபணு சோதனையையே செய்துள்ளது. புள்ளியியல்(Statistics) ஒரு அறிவுசார்ந்த அறிவியல் இதை அதிகமாகப் பயன்படுத்தி முடிவுகளைச் சொல்கிறார்கள் ஆவணப் படத்தில்.
புள்ளியியல் அனுமானங்களை ஏற்படுத்தவும், தோராயமான முடிவுகளைப் பெறவுமே பயன்படுகிறது. புள்ளியியல் அடிப்படையில் இயேசுவின் காலத்தில் இருந்த மக்கள் தொகையில் எத்தனைபேருக்கு இயேசு எனப் பெயர் இருந்திருக்கும் எனும் தோராயக் கணக்கில் துவங்கி எத்தனைபேருக்கு மரியாள் , ஜோசப் எனும் தாய் தந்தை இருந்திருப்பர் எனும் அனுமானங்களினூடாகப் பயணிக்கிறது 'ஆய்வு'.
ஆவணப் படம் தொட்டுச்ச் செல்லும் இன்னொரு கருத்து இயேசுவுக்கும் மரிய மதலேனாளுக்கும் திருமணமாயிருந்தது எனும் கூற்று. இதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளது. டா வின்சி கோடின் பரபரப்பு தொத்திக்கொள்கிறது.
இதில் இருக்கும் பெரிய ஓட்டை என்னவென்றால், மரியம்னே எனும் பெயருள்ள பெட்டியில் இருக்கும் பெண்ணின் மரபணுவுக்கும், இயேசு எனப் பெயரிட்ட பெட்டியிலுள்ள் மரபணுவுக்கும் இரத்த சம்பந்தம் இல்லை என சோதனை தெரிவிக்கிறது. இரத்த சம்பந்தம் இல்லையென்பதாலேயே இருவரும் மணமானவர்கள் எனும் முடிவுக்கு வருகின்றார்கள். எல்லா பெட்டிகளில் உள்ள மரபணுக்களும் சோதிக்கப்பட்டிருக்கின்றனவா எனும் விவரம் இல்லை. பெயரில்லாத மீதம் 4 பெட்டிகளில் உள்ளவர்களுக்கும் மரிமனெவுக்கும் தொடர்பிருக்கிறதா? தெரியவில்லை. ஆவணப் படம் தரும் வாதப் படி பார்த்தால் மரியம்னெவுக்கும் அந்தக் கல்லறையிலிருக்கும் யாருக்கும் வேண்டுமானாலும் திருமணம் நடந்திருக்கலாம், பெண்களைத் தவிர்த்து. So much for science.
மரிய மதலேனாளுக்கும் இயேசுவுக்குமான மரபுவழிக் கதைகளைக் கொண்ட டாவின்சி கோடின் அனுமானங்களைக் கொண்டு, சாதகமான அறிவியல் சோதனைகளோடு முடிவுகள் சொல்லப்படுகின்றன.
'மரியம்னெ' எனும் பெயர் இன்னும் முக்கியத்துவம் பெறக் காரணம் என்னவென்றால் பிலிப்பின் நற்செய்தி(Gospel of Philip) மரியம்னெ எனும் பெயரில் மரிய மதலேனாளை குறிக்கிறது. ஆனால் பிலிப்பின் நற்செய்தி 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது மரிய மதலேனாள் வாழ்ந்ததோ முதலாம் நூற்றாண்டு. முதலாம் நூற்றாண்டில் மரியம்னெ எனும் பெயர் பரவலானதாக இல்லை. இதை ஆவணப் படக் குழுவும் விவாதத்தின்போது ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஆவணப் படத்தில் தங்கள் வாதத்தை பலவீனம் செய்யும் கருத்துக்களை குறைவாகவே சொல்கிறார்கள்.
400 ஆண்டுகள் கழிந்தபின் மரிய மதலேனாளுக்கு கிடைத்த மரியம்னெ எனும் பெயர் அவர் இறந்து ஒருவருடத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட சவப் பெட்டியில் பொறிக்கப்பட்டிருக்கிறதென்பது, தமிழ் திரைப்படங்களில் பாம்பு தட்டச்சு செய்து எச்சி போட்டு கடிதம் ஒட்டி அஞ்சல் செய்கிற கற்பனையின் ஓட்டையை விட பெரியதாயுள்ளது.
வாதங்களுக்குப் பின் வாதங்களாகத் தொடர்புகள் ஏற்படுத்தப் பட்டிருப்பினும், ஒவ்வொரு வாதங்களும் பெரும் சந்தேகங்களுடன் கூடிய அனுமானங்களோடு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதால் தொடர்புள்ள வாதங்களின் தனிப் பகுதிகள் வலுவிழந்து போகின்றன, எனவே மொத்த வாதமும் வலுவிழக்கிறது.
ஆவணப்படம் சொல்லவரும் விஷயங்களையும் ஒழுங்கற்ற சம்பாஷணைகளின் மூலமே பொதுவாகச் சொல்கிறது. முக்கியமான கட்டங்கள் வாதங்களாகவே (உரையாடல்) செல்கின்றன. டீக் கடை பெஞ்சில் சதாம் உசைனுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் என்ன சந்ம்பந்தம் என்பதுபோன்ற உரையாடல்கள்.ஆவணப் படத்தில் பங்குபெற்ற 'அறிவியல்' வல்லுனர்கள் பலரும் தங்கள் முடிவுகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருப்பதாக 'டிஸ்கவரிக்கு' தெரியப்படுத்தியுள்ளனர். புள்ளியியல் முடிவுகளைச் சொன்ன டொராண்டோ பல்கலையின் பேராசிரியர் ஆண்ட்ரே, அகழ்வாராய்ச்சித் துறையிலோ, பைபிள், கிறீத்துவ வரலாற்றின் ஆராய்ச்சியிலோ எள்ளவும் அனுபவமில்லாதவர். அவரின் முடிவின்படி இந்தக் கல்லறையில் உள்ள பெயர்கள் இயேசுவின் குடும்பமாக இருக்க அறுநூற்றில் ஒரு சாத்தியம் இருக்கிறது. (1 in 600 probability). இந்த சாத்தியமும் மரியம்னெ எனும் பெயர் மரிய மதலேனாளின் பெயர் என்பது உண்மை என எடுத்துக்கொள்வதால் வருவது. அந்த வாதம் பொய்த்துப் போவதால் 600ல் ஒன்று எனும் சாத்தியம் இல்லாமல் போகிறது.
மரியமதலேனாளின் உடல் இயேசுவின் உடலோடு கண்டுபிடிக்கப் பட்டிருப்பதைவிட இயேசுவின் உடல்(எலும்புகள்) கண்டுபிடிக்கப்பட்டது என்பதே கிறீத்துவர்களின் பெருங்கவலையாக இருக்கும். இயேசு உடலோடு பரலோகத்துக்குச் சென்றார் என்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை.
இந்த ஆவணப் படம் வியாபார நோக்கில், பரபரப்புக்காகவே எடுக்கப்பட்டிருப்பதை பல பத்திரிகைகளும், டிஸ்கவரியின் வல்லுநர் குழுவுமே சொல்கின்றன. டாவின்சி கோட் நாவல் ஏற்படுத்திய பரபரப்பு அலையில் சறுக்கி விளையாடும் அவசரம் தெரிகிறது.
டைம் இதை 'அவசர, விளையாட்டுத் தனமான அறிவியல்' என்கிறது. இதுபோன்ற அவசர அறிவியல்கள் சொன்ன பல கருத்துக்களும் குழப்பத்தை ஏற்படுத்தவே தவிர வேறொன்றுமில்லை.
கடவுளை நம்ப அறிவியல் தேவயில்லை. கடவுள் நம்பிக்கைக்கு அறிவியல் மாற்று இல்லை என்பதை புரிந்துகொண்டிருக்கும் வரையில் இதுபோன்ற வெற்றுத் தகவல்கள் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தும். கடவுள் இல்லாத வாழ்க்கையை மனித இனம் பரவலாகத் தேர்ந்தெடுக்கும் நாள் வரலாம். அப்போது கல்லறைகளைத் தோண்டும் அவசியங்கள் இருக்காது. (அதுவரைக்கும் ஆயிரம் கல்லறைகளைத் தோண்டினாலும் நம்பிக்கைகளை அசைக்க முடியாது)
நன்றி: தமிழோவியம்
Monday, February 12, 2007
செய்திகள் வாசிப்பது ... - 2
அலசலில் இன்று...
1. தேன்கூடு கல்யாண் - ஒன்றுபடுவோம், செயல்படுவோம்
2. கர்நாடக பந்த் ஆங்காங்கே கலவரங்களோடு நிறைவுற்றது
3. உலகக் கோப்பைக்கான இந்திய டீம் அறிவிக்கப்பட்டுள்ளது
4. அமிதாப் குடியரசு தலைவராக பரிந்துரைக்கப்படலாம்
5. ஜல்லிக்கட்டில் இருவர் பலி
6. ஹெல்மட் கட்டாயமாக்கும் சட்டம் வரையப்பட இருக்கிறது
7. சர்வேசனின் பாட்டுக்குப் பாட்டு தொடர்ச்சி
Tuesday, February 06, 2007
செய்திகள் வாசிப்பது சிறில் அலெக்ஸ்
உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும் (எழுத்தில் ஹி ஹி)
Friday, January 05, 2007
3000
'மாஸ்டர்' ப்ளான்?
நன்றி : http://www.cagle.com/
Saturday, December 30, 2006
Sad'AM' News
ஒருவிரல் உன்னைச் சுட்டும்போது மற்ற மூன்றும்?
தூக்கிலிடப்பட்டவர்கள்
அமைதியான உலகம்?
நீயும் நானுமா?
விளையாடு. வேட்டையாடு.
வேட்டைக்கார நண்பா?
நன்றி: http://www.cagle.com/main.asp
Thursday, December 14, 2006
சிரி சிரி கிறீஸ்மஸ்
வால் நட்சத்திரமா? சேல்(Sale) நட்சத்திரமா?

இரண்டு ராஜாக்களும் ஒரு வாடிக்கையாளரும்

மீட்பு விற்பனைக்கு

எல்லோரும் கொண்டாடுவோம்

Away in a Parking lot...

வாழ்(க்கை)த்து அட்டைகள்

Tuesday, November 07, 2006
2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்கள்
1. குடும்ப இஸ்திரி
சூடான இஸ்திரி பெட்டியை துணிகளின்மேல் வைத்துவிட்டு போய் ராங் கால் அழைப்பை துண்டித்துவிட்டு வருமுன் அது எரிந்து போனதால் வரும் பயங்கர விளைவுகளை (நன்றி தமிழ் சினிமாக்கள்) இனி தவிர்க்கலாம். இந்த இஸ்திரி பெட்டியை துணிமேல் வைத்துவிட்டு கையை எடுத்துவிட்டீர்களென்றால் இதற்கு கால்கள் முளைத்துவிடும்.
மேல் விவரம்: oliso.com விலை: $90
நன்மை: குடும்ப இஸ்திரிகளுக்கு இனி கொண்டாட்டம்தான்.
தீமை:மாமியார்கள் சண்டைபிடிக்க வேறு காரணத்தை தேட வேண்டியுள்ளது.
பிடி வரி (அதாங்க catch phrase) : 'சொந்தக் காலில் நிற்கும் ஸ்திரிகளுக்கு சொந்தக்காலில் நிற்கும் இஸ்திரி'.
2. உன்னைத் தேடி
பொருட்கள் காணாமல் வீட்டில் நடக்கும் சண்டைகளின் விளைவாக ஊர்க் கலவரங்கள் துவங்கி சர்வாதிகாரிகள் உருவாவதுவரை பல கதைகள் இருக்கின்றன (இருக்கலாம்!). இனிமேல் அந்தக் கவலை வேண்டாம். ரேடியோ அலைகளை வெளியிடும் ஸ்டிக்கர்களை முக்கியமான பொருட்களில் ஒட்டிவைத்து அடையாளப் படுத்திக் கொண்டால் இந்தக் கருவிமூலம் அவை காணாமல் போனால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இந்தக் கருவியே காணாமப் போனா?
மேலும் விவரம்: loc8tor.com விலை: $190
நன்மை: பொருட்களத் தேடுற நேரத்துக்கு கூகிள்ல நாலு தேடல் போட்டு ஒரு பதிவப் போடலாம்.
தீமை: சில பொருட்கள தேடும்போது தொடர்பில்லாத முக்கியமான பல பொருட்கள் கிடைக்கும். இனி அது கிடையாது.
பிடி வரி : 'தேடாமலேயே கிடைக்கும்' (as against தேடினாலும் கிடைக்ககது).
3. குடைக்காலம்
சென்னையில் மழைக்காலம். மழைக்காலமெல்லம் குடைக்காலம். மழையில் நனைந்த குடையை மடக்கி வச்சா வீடெல்லாம் தண்ணியாகுதா? இந்தக் குடையில் தண்ணி ஒட்டுறதில்லை. தாமரை இலையப் பாத்துவந்த இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரு இதக் கண்டு பிடிச்சவர். அடுத்த வீட்டு தாமரையப் பார்த்து இன்ஸ்பிரேஷன்ல கவிதையா எழுதினவுங்களுக்கு அஞ்சலி.
மேலும் விவரம்: proidee.co.uk விலை: $95 (அடேங்கப்பா)
நன்மை: குடைக்குள் மழை இனி இருக்காது.
தீமை: ஏற்கனவெ வெள்ளப் பெருக்குல தெருத்தண்ணி வீட்டுல வந்துடுச்சே.
பிடி வரி: குடைய மட்டும் வீட்டுக்குள்ள கொண்டுபோங்க. மழை வெளியே பெய்யட்டும்.
4. அச்சூசூசூ இல்ல மியாவ்
பூனைகள்னா சிலருக்கு அலர்ஜி. கறுப்பு பூன குறுக்கவந்தா விலகி ஒட்டுறது மட்டுமில்லங்க நிஜமான உடல் ரீதியான அலர்ஜி. இப்போ புதிதாய் அலர்ஜி கொடுக்காத பூனைகள் விற்பனைக்கு வந்திருக்குதுங்க. ஜெனட்டிக் மாற்றமில்லாம இனக்கலப்பு மூலமா இத செய்யுறாங்க. என்ன இப்பவே டிமாண்ட் அதிகமாகி 15 மாசம் வெயிட்டிங் லிஸ்ட் வந்துடுச்சு.
மேலும் விவரம்: allerca.com விலை: $3,950
நன்மை: தும்மல் போட்டு சகுனத்தையெல்லாம் அபசகுனப் படுத்துறது குறையும்.
தீமை: இந்த விலைக்கு இந்தியாவுல பூனை என்ன ஒரு அரசியல்வாதியையே பெட்டா வச்சுக்கலாம். (என்னது? அரசியல்வாதின்னா அலர்ஜியா?)
பிடி வரி: பூனை வளர்ப்பீர் பயன்பெறுவீர்.
5. வாயுவிலிருந்து திரவம்
வெறும் காத்துல என்ன செய்யமுடியும்? குடிநீர் எடுக்க முடியும்னு நிருபிச்சிருக்காங்க. அட மூலிகப் பெட்ரோல் மாதிரியில்லீங்க. நிஜமாவே. காற்றில் இருக்கும் ஈரப்பதத்த குடிநீரா மாத்துற தொழில்நுட்பம். போர்களங்களிலோ பேரழிவு நிகழ்ந்த இடங்களிலோ பயன்படுத்தலாம். என்ன மெஷின் கொஞ்சம் பெருசு, குட்டி ரூம் அளவுக்கு.
மேலும் விவரம்: aquasciences.com விலை: $300,000
நன்மை: காசு இருந்தா தண்ணி கிடைக்குண்றது போயி இப்ப காத்து இருந்தா தண்ணி கிடைக்கும்
தீமை: கோலா கம்பெனிங்க தாமிரபரணில தண்ணி எடுத்ததே பிரச்சனையில கெடக்குதே?
பிடி வரி: சுவாசத்துக்கும் தாகத்துக்கும் பயன்படுத்துவீர் காத்து...காத்து .. காத்து.
6. மரம் வெட்டி
மரம் வெட்டும்போது கைய வெட்டிக்கிறது ரெம்ப சகஜம். இந்த எந்திரம் ச்தையப் போல எது தொட்டாலும் நேனோ நொடிகளுக்குள்ளால நின்று போகுமாம். இது மாதிரி நகம் (மட்டும்) வெட்ட ஏதாவது இருக்குதா?
மேலும் விவரம்: sawstop.com விலை: $2,799
நன்மை: கை இருந்தா இன்னும் நாலு மரம் வெட்டலாம்
தீமை: கை வெட்ட இந்த மெஷின பயன்படுத்த முடியாது
பிடி வரி: உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
7. ரோபோ வீரன்
போர்க்களத்தில் காயப்பட்டுக் கிடக்கும் வீரர்களை தூக்கிவர இந்த ரோபோ உதவுகிறது. தொலை கட்டுப்பாடில் இயங்குகிறது. சுமார் 200 கிலோவுக்கு மேல் தூக்கும் திறன் உள்ளது. சட்டசபைக்கு 'குடித்துவிட்டு' வருபவர்களை தூக்கிச்செல்ல உதவுமா?
மேலும் விவரம்: vecna.com/robotics விலை: தரப்படவில்லை
நன்மை: காயப் பட்டவர தூக்கப்போயி இன்னும் காயப்படவேண்டாம்
தீமை: இந்த ரோபோவே சண்ட போடுற மாதிரி செஞ்சா யாரும் காயப் படவேண்டாமே?
பிடி வரி: தெருச்சண்டையா? சாதிக்கலவரமா? குண்டுவெடிப்பா? ஆமாய்யா ஆமா...
8. கட்டிபுடி வைத்தியம்
டெலிபோன்ல முத்தம் குடுக்கலாம் கட்டிப்புடிக்க முடியுமா? இந்த சட்டைய போட்டுக்கிட்டு தொலைபேசில குறிப்பிட்ட குறியீட்டத் தந்தா அலைபேசி அத ப்ளூ டூத் வழியா சட்டைக்கு சொல்லிடுது. சட்டையும் அப்படியே ஒருத்தர் கட்டிப்புடிச்சா எப்படி இருக்குமோ அந்த உணர்வத் தருது.
மேலும் விவரம்: cutecircuit.com விலை: தரப்படவில்லை
நன்மை: அனானிமஸா யாரவேண்ணா கட்டிபுடிக்கலாம். 'சாரி ராங் நம்பர்'-னு சொன்னா போதும்.
தீமை: அனானிமஸா யார்வேண்ணா கட்டிபுடிக்கலாம். 'சாரி ராங் நம்ப்பர்'-னு சொல்லிடுவாங்க.
பிடி வரி: கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா காணாமலே கட்டிபுடிடா.
Friday, October 06, 2006
மரணதண்டனைப் பதிவுகள்
ஜெயபாலின் கவிதை - மரணம் தண்டனையா?
கொஞ்சம் லைட் ரீடிங் - எளிய வாசகத்திற்காக. பெரிய விஷ்யத்தை சின்னதா கவிதையில் சொல்கிறார்.
மரணம் தண்டனையா
யாருக்குத் தண்டனை
தவறு செய்தோர்க்கா
அவனைச் சார்ந்தோர்க்கா
அளிக்குஞ் சான்றோர்க்கா
சாகடிக்குஞ் சேவகர்க்கா
அவர் வைக்கும் கேள்விகள்
அபு மூகையின் ஆதரவு - பொதுவாக இஸ்லாமியப் பதிவர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக பதிவிடுவதில்லை எனும் எண்ணத்தை மாற்றும் பதிவு. தேச பக்தியும் வெளிப்படுகிறது இவரின் வார்த்தைகளில்.
ஒரு குற்றவாளியை, குற்றவாளியாத்தான் பார்க்க வேண்டும். அதனால் எந்த
நாட்டின் நட்பு போய்விடுமோ என்று கருதினால் தெரிந்து கொண்டே குற்றங்களுக்கு துணை போகிறோம்! பாராளுமன்றம் இந்திய அரசுக்குச் சொந்தமான இடம். பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் இந்திய நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள். பாராளும் மன்றத்தை தகர்க்கவும், ஆட்சியாளர்களைக் கொல்லவும் துணிந்தவர்கள் தேசத் துரோகிகள் எனும் போது அதற்கு உடந்தையாக இருந்தவனும் தேசத் துரோகியே!
ஆணித்தரமாகச் சொல்கிறார்.
நுனிப்புல் உஷாவின் எண்ணம் - மரண தண்டனைக்கு எதிராக சில கருத்துக்களை வைக்கிறார். எதையும் வாதமாக தீர்மானமாகச் சொல்லாமல் சில காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.
நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க
யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?
சிந்திக்கப்படவேண்டிய கேள்வி.
பிரபு ராஜதுரையின் அலசல் - பிரபு ராஜதுரை எனும் வழக்கறிஞர் அப்சலுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்த விஷயத்தை அலசுபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு.
ஆனால் தண்டனைக்கான் காரணங்களை முன் வைக்கும் உச்சநீதிமன்றம் முதலாவதாக கூறுவதான, ‘குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதின் மூலமே சமுதாயத்தின் பொதுவான மனநிலையினை திருப்திப்படுத்த இயலும் (the collective conscience of the society will only be satisfied if the capital punishment is awarded to the offender)’ என்பது அபாயகரமான ஒரு போக்கு என்பது எனது பணிவான கருத்து. இரண்டாவதாக கூறும் ‘சதியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை அளிப்பதே, நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலுக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் (The challenge to the unity, integrity and sovereignty of India by these acts of terrorists and conspirators, can only be compensated by giving the maximum punishment)’ என்பதும் தகுந்த காரணமில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் இறுதியில் அளித்துள்ள ‘ஏற்கனவே சரணடைந்துள்ள ஒரு போராளி மீண்டும் நாட்டுக்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபடுவதினால், சமுதாயத்தினை சீர்குலைக்கும் ஒரு சக்தியாக கருதி அவர் வாழ்வு முடிக்கப்படவேண்டும்’ என்ற காரணமே சரியானதாக இருக்க இயலும் என எண்ணுகிறேன். எனெனில்
முதலிரண்டு காரணங்களிலும் பழிவாங்குதலே வெளிப்படுகிறது. மூன்றாவது காரணமே தடுத்தல் மற்றும் எச்சரித்தல் வகையில் வருகிறது. திருத்துதலுக்கு மரண தண்டனையில் வாய்ப்பில்லை!
பொதுவாக குற்றம் ஐயமின்றி நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளி
என்று தீர்க்க முடியும். ஆயினும், சில சமயங்களில் மனதிற்குள் சின்னதாக ஒரு ஐயப்பாடு இருக்க வாய்ப்புண்டு. அவ்விதமான நிலைகளில் மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பழிவாங்குதல் மற்றும் தண்டனை அல்லாமல் தடுத்தல் அல்லது எச்சரித்தல் போன்ற காரணங்களுக்காவே மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். இல்லை, அனைவரையும் போட்டுத் தள்ள வேண்டுமென்றால், வருமான வரி ஏய்ப்பு, பத்திர பதிவில்
சொத்து மதிப்பினை குறைத்துக் காட்டி முத்திரைக் கட்டண ஏய்ப்பு போன்ற வெள்ளை காலர் குற்றங்களுக்கும் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். வரி கட்டுபவர்கள் ஒழுங்காக அதை கட்டி அரசிடம் போதுமான பணமிருந்திருந்தால், எல்லையில் பாதுகாப்பினை பலப்படுத்தியிருக்கலாம். அப்சல் அந்தப்பக்கம் உள்ள காஷ்மீரத்துக்கு ஓடிச்சென்று பயிற்சி எடுத்து பின்னர் திரும்புவதை தடுத்திருக்கலாம் அல்லது தில்லியில் கொசு மருந்தாவது கூட கொஞ்சம் அடித்திருக்கலாம்...ஆக வெள்ளை காலர் குற்றங்களாலும் மரணங்கள் நிகழ்கின்றன, ஏன் பின்னர் பாகுபாடு?
நீதி வழங்கலை முன்வைத்து அருமையான அலசல். (இவரின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன - கவனிக்கத்தக்க பதிவர்)
நல்லடியாரின் எதிர்வாதம் - அப்சலின் கேசை விவரிக்கும் பதிவு அபு மூகையின் பதிவுக்கு நேரெதிர் எனச் சொல்லலாம். பிரபு ராஜதுரை சொல்லும் சில தகவல்கலை இவரும் சொல்கிறார். அவரைப் போலவே வேறொரு குற்றத்தைக் காட்டி அவர்களுக்கு தண்டனை எப்போது எனக் கேட்கிறார்.
இது ஒருபக்கம் இருக்க பா.ஜ.க. போன்ற மதவாத அரசியல் கட்சிகள் வழக்கம்
போல் இப்பிரச்சினையில் அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர். குற்றவாளி அப்ஷல் தூக்கிலிடப்பட வேண்டும்; நாட்டின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
சில வருடங்களுக்கு முன் தனஞ்சய் சட்டர்ஜி என்ற காமக் கொடூரனுக்கு
மரண தண்டனை உறுதி செய்யப்பட்டபோது,மனித உரிமை அமைப்புகள் குற்றங்களுக்கு மரண தண்டனை தேவையில்லை; அதிகபட்சம் ஆயுள் தண்டனையே போதும் என்று குரலெழுப்பினார்கள். ஆனால், அப்ஷல் விசயத்தில் அவர்கள் மெளனம் காப்பதாகவே அறிய முடிகிறது. இதில் யாரெல்லாம்
குற்றவாளிக்கு ஆதரவாகவோ அல்லது நியாயமாகவோ குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் தேசத் துரோகப் பட்டம் வழங்கப்படும் என்பதால் அனேகமாக மெளனம் காக்கிறார்கள்.
சில நியாயமான கேள்விகள்.
செல்வனின் சாடல் - செல்வன் வழக்கமான உணர்ச்ச்சிவசத்துடன் அப்சலின் தண்டனை நிறைவெற்றப் படவேண்டுமென்கிறார். பிறநாடுகளின் நிலமை இந்தியாவில் இல்லையாதலால் மரணதண்டனை இங்கே செயல்படுத்தப்படவேண்டும் என்பது இவரின் வாதம்.
இந்த மாதிரி சமூகத்தில் மரண தண்டனை தேவையில்லை. அவன் கால் மேல் கால் போட்டு கொண்டு புனித பிம்ப வேசம் கட்டி உலகத்துக்கு "மரணதண்டனை தப்பு" என உபதேசம் செய்வான். லிஸ்பனில் தினமும் 10 குண்டு வெடிக்கும் சூழ்நிலை இருந்தால் அவன் மரணதண்டனை மட்டுமல்ல, சித்ரவதையையே கூட கொண்டுவருவான்."ஐரோப்பாவை பார்" என முழக்கமிடும் அறிவுசீவிகள் அங்கிருக்கும் சூழலுக்கும் இங்கிருக்கும் சூழலுக்கும் வித்யாசம் தெரியாதவர்களல்ல . இங்கே மரண தண்டனை ரத்து செய்தால் அடுத்த வினாடி என்ன நடக்கும்? ஒரு நாலு வருஷம் இந்த அப்சல் ஜெயிலில் இருப்பான். அப்புறம் தீவிரவாதிகள் ஒரு விமானத்தை கடத்துவார்கள். உடனே இந்த அறிவுசீவிகள் "தீவிரவாதியை விடுதலை செய்" என ஒப்பாரி வைப்பார்கள்.
அதிகபடியான உணர்ச்சிவசம்.
பிரபு ராஜதுரையின் கருத்துக்கள் மிகவும் நியாயமானதாகப் படுகிறது. மரணதண்டனையே வேண்டாம் என்பது என் வாதமல்ல. சில கேடுகட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவே வேண்டும். அதேசமயம் சட்டம் எல்லோருக்கும் சமமானதாய் செயல்படவும் வேண்டும். சட்டத்தின் கடமை பழிவாங்குவதல்ல.
பின்சேற்கைகள்
பாபா தந்த சில சுட்டிகள்
1. மெய்கீர்த்தி: அப்சலை தூக்கில் போடுவது தான் சரி
2. E-Tamil : Points to ponder against Capital Punishment
3. கண்ணோட்டம்- KANNOTTAM: மரண தண்டனையா, மன்னிப்பா ?
5. முத்து(தமிழினி) - அப்சலை தூக்கில போடுங்கடா
6. கோவி.கண்ணன்(GK) - மரண தண்டனை, கோட்சே, இஸ்லாம், ஒரிசா பாதிரியார்!
7. அஃப்சல் மரண தண்டனை --- சில எண்ணங்கள் - என்றென்றும் அன்புடன் பாலா
8. அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்! - நா. ஜெயசங்கர்
9. குழலி - நாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்
10. லக்கிலுக் - 1
11. லக்கிலுக் - 2
12. we the people
13. பெனாத்தல் சுரேஷ்
15. சிந்தாநதி
16. வலை
17. யெஸ். பாலபாரதி
Wednesday, September 27, 2006
பாக்கிஸ்த்தானில் புஷ் பின்லாடன்
பர்வேஷ் முஷ்ராஃப் ஜான் ஸ்டேவர்ட்டின் டெய்லி ஷோவில் சிறப்பு விருந்தினராய் நேற்று (9/26/2006) தோன்றினார்.
ஜான் ஸ்டிவர்ட்டின் டெய்லி ஷோ தினசரி செய்திகளை நகைச்சுவையோடு விவாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. Fake செய்தி விவரணைகளும், செய்திப்படங்களும் சுவாரஸ்யமாகத் தருவார்கள். ஜார்ஜ் புஷ்தான் இவர்களின் ஹீரோ. ஹீரோன்னா பாட்ஷா ரஜினிமாதிரியில்ல இம்சை அரசன் வடிவேலுமாதிரி.
பாக்கிஸ்தான் வழக்கப்படி (?) தேனீர் கொடுத்து வரவேற்றார் ஜான் ஸ்டிவர்ட்.
முதல் கேள்வியே பின் லாடன் எங்கே இருக்கிறாரரென்றுதான்.
அடுத்து பர்வேஷ் முஷ்ரஃபின் சுய சரிதையான 'In the line of Fire' பற்றிய விவாதம்.
9/11 முடிந்ததும் அமெரிக்கா பாக்கிஸ்த்தானை, தங்களோடு செராவிட்டால் பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுக்கப்படும் என மிரட்டியிருந்ததைப் பற்றி பேச்சு தொடர்ந்தது.
கடைசியில் ஜான் ஸ்டிவர்ட் ஒரு கேள்வி கேட்டார்.
"பாக்கிஸ்த்தானில் ஒரு தேர்தலில் புஷ்ஷும் பின் லேடனும் எதிரெதிர் போட்டியிட்டால் யார் ஜெயிப்பார்கள்?"
முஷ்ரப் சிரித்தபடியே,"இருவருமே படுதோல்வியடைவார்கள்." ("They will both lose miserabily").
Wednesday, September 20, 2006
போப் Vs. இஸ்லாம்
Friday, August 11, 2006
பாக்'கிஸ்'தானுக்கு நன்றி
தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுத்த நம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நன்றி. பக்கத்துவீடுன்னா போட்டி, பொறாம, சாக்கடச் சண்ட, வேலிச் சண்ட எல்லாம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் ....
மேலும் விபரங்களுக்கு அணுகவும் SK.
Friday, July 28, 2006
யரலவழல
தமிழ் வளர்ப்பில் எத்துணை முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். இதனால் அரசு இழக்கும் பணத்தைக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புக்களை உருவாக்க முயன்றிருக்கலாம், அல்லது தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்வண்ணமோ, வாசகர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலோ ஈடுபட்டிருக்கலாம்.
குறைந்த பட்சம் தமிழில் பெயரில்லாத படங்களுக்கு அதிக வரி என விதித்திருக்கலாம்.
இலவச அரசியலில், பண்ணையார்களுக்கு கடன் தள்ளுபடியும், தண்ணீர் விற்பனைக்கு இலவச மின்சாரமும் தந்துதவ யாரிடம் வசூலிக்கப்போகிறார்கள்? ஆட்சியாளர்கள் நடத்தும் வியாபரங்களிலுருந்தும், வெளிநாட்டு நிறுவனங்கள் தரும் பங்குகளை விற்றும் பண உதவி செய்வார்களோ என்னவோ.
தமிழில் பெயரை மாற்றிக்கொள்பவர்கள் கெசட்டில் அறிவிக்க கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது (440லிருந்து ரூ. 50 ஆக). தன் சொந்தப் பெயரை தமிழில் ஒருவர் மாற்றிவைத்துக் கொள்வாரானால் அவருக்கு அரசு ரூ. 50 வழங்கவேண்டும். அதுதான் தமிழ் வளர்க்கும் வழியாயிருக்கும். (நான்கூட என் பெயரை கலைஞர் தாசன் என மாற்றிக்கொள்வேன்.... இல்லை ரூ.50க்காக பெயரை மாற்ற முடியாது).
திரைப் படங்களுக்குச் சலுகை வழங்குவதைப் போலவே
வியாபாரக்கூடங்களுக்கும் வழங்கலாமே. 'நாடார் அண்ட் சன்ஸ்' மாற்றி 'நாடாரும் மகன்களும்' என வைக்கவும் 'நாயுடு ஹால்' 'நாயுடு (தமிழா?) அரங்கமாகவும்' மாறும். இதன் மூலம் சன் டி.வி கூட பெரிய பலனை அடையும்.
தமிழில் சினிமா பெயர் வைப்பதால் என்ன சாதிக்கப் போகிறார்கள்?
இந்தியாவில் 28 மாநிலங்கள் இருக்கின்றன 1652 தாய்மொழிகள் இருக்கின்றன எதை வளர்ப்பது எதை விடுப்பது. 'தமிழ் நாட்டில் புழக்கத்திலுள்ள எல்லா மொழிகளும் அதன் இலக்கியங்களும் பாதுகாக்கப்படும்', என்பதுதான் சனநாயகம்.
தமிழை வைத்து அரசியல் செய்துகொண்டு தமிழைக் காக்கிறோம் எனும் மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிரூக்கிறோமோ எனத் தோன்றுகிறது.
அடுத்தது என்ன மம்மி டாடி எனச் சொல்லாமல் அம்மா அப்பா எனக் கூறும் பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் இலவசமா?
சூப்பர் ஸ்டார், சூப்பர் ஆக்டர், சுப்ரீம் ஸ்டார்கள் எனப்படும் நடிகர்களுக்குத் தடை வந்தாலும் வரும்.
தலைப்பு? அடுத்து வரப்போகும் படத்தின் பெயர்தான்.
<<<<<<<<<<<உள்ளலின் பதிவு.>>>>>>>>
Wednesday, July 26, 2006
தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து
இப்பொதெல்லாம் கணிணியில் ஏற்றி மின்னணு வடிவில் மருந்துச்சீட்டை நீங்கள் விரும்பிய கடைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
நம்ம ஊரில் நிலமை எப்படியோ?
வலைப்பதிவு டாக்டர்கள் யாரேனும் ஏன் டாக்டர்கள் 'விக்சைக் கூட சுத்தி சுத்தி எழுதுகிறார்கள்' (நன்றி:விவேக்) எனச் சொல்ல முடியுமா?
Tuesday, July 25, 2006
மேலும் மேலும் தவறிழைக்கும் இஸ்ரேல்
நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும், புஷ் பாணியில்,தீவிரவாதிகளை கொல்கிறேன் பேர்வழி என்று கொன்று குவிக்கிறது,இஸ்ரேல். இப்போது ஐ.நா சபை அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பது பிரச்சனையில் இஸ்ரேலின் பக்கத்தை கொஞ்சம் வலுவிழக்கச் செய்திருக்கிறது.
கோஃபி ஆனன் இதை வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக்குதல் என்றிருக்கிறார்(Attack "apparently deliberate," U.N. head says-CNN). இஸ்ரேல் இதை மறுத்துள்ளது (Israel's U.S. envoy outraged by Annan comment - CNN).
அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இஸ்ரேல், ஐ.நாவெல்லாம் இவர்களுக்கு ஒரு பெரிய விஷயமா?
Tuesday, February 07, 2006
ஓட்டுப்பெட்டி ஜனநாயகம்
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பதை ஜனநாயகத்தை உருவாக்கும் போராகமாற்றியமைத்துள்ளது அமெரிக்கா.
ஜனநாயகம் மட்டுமே தனிமனித, சமுக விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது இவர்களின் பிரச்சாரம். சோரம்போன, ஜனநாயகத்தின்பேரில் மக்களை வெறும் ஓட்டுப் போடும் பொருட்களாக உபயோகித்துவிட்டு, அமெரிக்காவுக்கு ஜால்ராபோடும் சில இராணுவ ஆட்சிகள் ஜனநாயகமாக இவர்கள் கண்களுக்குத் தெரிகிறது.
ஜனநாயகம் என்பது வெறும் ஓட்டுப்போடும் உரிமைபெற்ற மக்கள் கூட்டம் என்பதுதான் அமெரிக்காவின் நிலையாகப்படுகிறது. ஈராக்கில் ஒவ்வொரு ஓட்டெடுப்பின் போதும் அமெரிக்க ஊடகங்களில் வெற்றி ஆரவாரம் கேட்கமுடிகிறது, ஆனாலும் ஈராக்கில் யுத்தம் ஓய்ந்தபாடில்லை.
அமெரிக்காவில் சில காலங்களுக்கு முன்னிருந்த தனிமனித சுதந்திரங்கள் இபோது பறிக்கப்பட்டுள்ளன. மூன்றம் தர முறைகளை தன் மக்கள் மீதே பயன் படுத்துகிறது அமெரிக்கா. மக்களின் தொலைத்தொடர்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. தன் சொந்த மக்களை பயம் காட்டி, அவர்களின் உரிமைகளை பறிக்கும் அமெரிக்கா தன்னை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக உயர்த்திக்காட்டுவது வேடிக்கை.
உலகப் போலீசாகத் தன்னை அறிமுகப்படுத்தும் அமெரிக்காவின் தகுதிகள் என்னென்ன? மனித வரலாற்றில் இந்த நாட்டின் பங்குதான் என்ன? எல்லா இயற்கை வளங்களும் நிரந்த ஒரு பூமிப் பரப்பை செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து அவர்களின் மரபுகளையும் ஏன் வம்சத்தையுமே அழித்து ஆட்கொண்டனர். ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்று கறுப்பின மனிதர்களை விலங்குகள் போல வேட்டையாடி அடிமையாக்கிக் கொண்டனர். தனி நாடாகவேண்டி தம் சொந்த சகோதரர்களான ஆங்கிலேயருடன் போரிட்டனர், போரில் வெற்றிபெற சில கீழ்த்தரமான யுக்திகளை கையாண்டனர். ஜப்பானென்ற ஒரு குட்டி நாட்டை எதிர்க்கத் துணிவில்லாமல் அணுஆயுதம் கொண்டு தரைமட்டமாக்கினர். தாங்கள் விரும்பாத அரசங்கங்களை அழிக்க இவர்கள் வங்கிக்கொடுத்த துப்பாக்கிகளும் சொல்லிக்கொடுத்த யுக்திகளும்தான் இன்று இவர்களைக் குறிபார்க்கின்றன.
அமெரிக்கா தன்னை சிறந்த வழிகாட்டியாக நடத்திக்கொண்ட நேரங்கள் இருந்தது ஆனால் அவற்றிலெல்லாம் செற்றை வாரி இறைக்கின்ற காலம் இது. மக்களின் ஓட்டை பெற்றுவிட்ட ஒரு அடக்குமுறை அரசாங்கமே இங்கு செயல்படுகிறது.
கட்சிக்கு காசளிக்கும் கம்பெனிகள் பெறும் சலுகைகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது. இயற்கையின் சீற்றங்களின்போது மக்களை அரசு புறக்கணிக்கிறது. எங்கோ உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் மறைந்துபோகும் ஒர் ஆப்ரிக்க நாட்டில் நடக்கும் அநியாயங்களை இந்த அரசு சாதாரணமாகச் செய்துவருகிறது என்பதே உண்மை.
உலகெல்லாம் ஜனநாயகத்தை உருவாக்க இவர்கள் செய்த அடக்குமுறை பிரச்சாரத்தால் தீவிரவாத அமைப்பான ஹமாஸ் பாலஸ்தீனத்தில் மக்களின் அங்கீகாரத்தோடு ஆட்சிக்கு வந்துளளது. இவர்கள் தந்த மருந்து இவர்களுக்கே விஷமாகிப் போனது. இப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அமெரிக்காவின் சொல்படி நடக்கவேண்டுமென ஆசைப்படிகிறது. உங்கள் ஓட்டு செல்லாது என பாலஸ்தீனியர்களுக்குச் சொல்லாதவரை நல்லது என நினைக்கிறேன்.
மக்களால் ஓட்டுப் போட முடிந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என நினைக்கிரார் புஷ். இந்தியர்களான நமக்குத்தெரியும் ஓட்டுப் போடுவதற்கும் உண்மையில் ஜனநாயகத்திற்கும் என்ன தொடர்புள்ளதென்பது.
'சுதந்திரம்' என்கிற பேரில் இவர்கள் துவங்கிய போர் இவர்களுக்கே எமனாக முடிந்திருக்கிறது. சர்வ வல்லமையும், இன்றைய தொழில் நுட்பங்களும் கொண்டியங்கும் ஒரு ராணுவத்தை நேற்று துப்பாக்கி ஏந்திப் பழகிய சில தீவிரவாதிகள் அடக்கிப்போடுகிறார்கள் என்பது நம்பத்தகுந்ததாயில்லை. 'அமெரிக்காவின் வலிமை இவ்வளவுதானா?' எனும் கேலிதான் எழுகிறது. போரை நீட்டுவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தன் பிரசன்னத்தை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் எடுத்திருக்கும் ராணுவ முயற்சி.
மாபெரும் பொருளிழப்பையும் உயிரிழப்பையும் ஏர்படுத்தியிருக்கிற ஈராக் போர் தவறான தகவல்களின் பேரில் துவங்கப்பட்டது என்பதை அமெரிக்க அரசே மிகச் சாதாரணமாக ஒத்துக்கொள்கிறதான் மாபெரும் விந்தை. ஒர் சில ஆண்டுகளுக்கு ஒருமுரை போர் செய்தால்தான் அமெரிக்க பொருளாதாரம் நிலைப்படும் எனும் நம்பிக்கையும் பலரிடமுள்ளது.
இந்தப் போரை எதிர்க்கும் அமெரிக்கர்களே அதிகம். இந்த அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மக்களிடம் 30% போலவே அங்கீகாரம் உள்ளதாக பல தகவல்கள் சொல்கின்றன. ஆட்சிக்கு வரும் முன் அண்டை நாடான கனடா வரையிலும்கூடப் போயிராத ஒருவர்தான் தன்னை பன்னாட்டுக் காவலராக உயர்த்திக்காட்டுகிற புஷ்.
ஜனநாயகம் என்ற பேரில் இந்தியாவைப்பிரித்த வடு என்றும் ஆறாத புண்ணாய் மாறியுள்ளது, இதே நிலைதான் இன்று ஈராக்கிலும் காணப்படுகிறது. கையில் நீல மை போடும் ஒரு சம்பவத்திற்காக ஈரக் மக்கள் தங்கள் சொந்தச் சகோதரர்களோடு சண்டை போட தூண்டப்பட்டுள்ளனர். யுத்தகளத்தில் தொலைந்துபோன எறும்புகள்போல இவர்கள் நசுக்கப்படுகிரார்களென்பதே உண்மை.
(டைமில் வந்திருந்த ஒரு தலையங்கத்தின் பாதிப்பில் எழுதியுள்ளேன்)
நான் இந்தப்பதிவை தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டுப் போய் பார்த்தால் Boston Bala ஒரு பதிவை போட்டுவைத்துள்ளார்(சுட்டி கீழே). விரைவில் இருவரும் ஊர் வந்து சேரும் நிலை வந்தாலும் வரலாம் :)
http://etamil.blogspot.com/2006/02/blog-post_07.html
Thursday, February 02, 2006
"அம்மா, இந்த ஸ்பைடர்மேனப் பாரேன்..."
ஒரு அம்மாவும் அவர் மகளை கையில் வைத்துக்கொண்டு கணிணி விளையாட்டுக்கள் எப்படி பள்ளியில் விவாதிக்கப்பட்டு வீட்டில் கெஞ்சலோ கூச்சலோ போட்டு வாங்கப்பட்டு விளையாடப்படுகின்றன என்றும், இதை விளையாடுவதால் வரும் அறிவு வளர்ச்சி பற்றியும் பேட்டி கொடுத்தார்.
ஒரு தலமை ஆசிரியையும் இதைப்பற்றி உயர்வாகப் பேசினார்.
தொகுப்பாளர், 'இனிமேல் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லாமல் வீட்டிலேயே பொழுது போக்கவைக்கலாம்' என ஏதோ 'அப்படியே சாப்பிடலாம்' தொனியில் பேசினார்.
மாறனின் மலிவு விலை கணிணி திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
கணிணிவிளையாட்டுக்கள் மூளை/அறிவு வளர்ச்சிக்கு சிறந்ததா? பெரிய கேள்வி.
இந்த சுட்டியில் இது பற்றிய ஆராய்ச்சியின் முடிவுகளை ஆங்கிலத்தில் பார்க்கலாம். இதற்குப் பதிலடியும் அதிலேயே இடுக்கிறது
என்ன சொல்கிறது ஆராய்ச்சி - அதீத கணிணி விளையாட்டுப் பழக்கம் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்று.
எனக்குத்தெரிந்த சில தகவல்கள் கீழே,
கணிணி விளையாட்டுப் பழக்கமுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில் அதிக விருப்பம் காட்டுவதில்லை, இரவு தூங்க நேரம் எடுத்துக்கொள்கிரார்கள், இவை உடல் நலனை பாதிக்கிரது.
பெற்றோருக்கும் குழந்தைகளூக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.
பொதுநல எண்ணங்கள் போய் தான் தனது என்ற மனநிலை வந்துவிடுகிறது குழந்தைகளுக்கு.
உலகைப்பற்றிய அறிவை வெறும் ஒளிப்புள்ளிகளை(Pixel?) பார்த்தே தெரிந்துகொல்கிறார்கள். சிங்கத்தை பார்த்து லயன் கிங் என்கிறான், கொரில்லாவை கிங் காங் என்கிறார்கள். ஒரு மாய உலகத்தையே மென் விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்துகின்றன.
குறைந்த பட்ச நண்பர்களையே கொண்டுள்ளனர்.
வெளியே, ஊருக்கோ, சுர்றிப்பார்க்கவோ போக மறுக்கிறார்கள். இதை சில பெற்றோர்கள் நல்லதுதான், நாம தனியா என்ஜாய் பண்னலாம் என நினைக்கிரார்கள். என் ஜாய் மட்டுமே முக்கியம் ஒன் ஜாய்க்கு கம்புயூட்டர் இருக்குதே என்பது தான் இவர்களின் போக்கு.
கம்பூட்டர் கேம்ஸ் - நம் வாழ்க்கைகளை ஊடுறுவப்போவது உறுதிதான். ஆனால் இவற்றை தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியம். எல்லா விளையாட்டுக்களும் எல்லாருக்கும் உகந்தல்ல. இதற்கென வார இறுதிகளில் நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். பெற்றோரும் சேர்ந்து விளையாடலாம். குறைந்தபட்சம் ஒரு கண்காணிப்பு போன்ற ஈடுபாடாவது தேவை. அவர்கள் விளையாடும்போது அந்த அறையிலிருந்தபடி நீங்கள் ஏதாவது படித்துக் கொண்டிருக்கல்லாம்.
அறிவு வளர்ச்சிக்கான, கணிதம் மற்றும் மொழி பாடங்களின் அடிப்படையில் சில மென் விளையாட்டுக்களுளன இவை அறிவு வளர்ச்சிக்கு கொஞ்சம் உதவலாம். ஆனால் படிப்பறிவு மட்டும் ஒரு முழுமனிதனை உருவாக்க முடியாதே.
சன் டி.வி எதற்கு திடீரென இப்படி ஒரு தொகுப்பைத் தரவேண்டுமென்பதற்கு உள் அர்த்தமிருக்கலாம். இப்பெல்லாம் இவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தமிருக்கிறது. இதே தொகுப்பில் கணிணி விளையாட்டுக்களால் வரும் தீங்கையும் அதை சரிசெய்யும் முறைகளையும், கவனமாயிருக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறியிருந்தால் தொகுப்பு முழுமையானதாயிருக்கும்.
பிள்ளைகள் விளையாட இடமில்லாதபடி ஊரமைப்பும், பள்ளிகளும் இருக்கின்றன என்பது மறுக்க முடியாதது. பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டுக்கு ஓடிவந்து கம்பூட்டர் கேம்ஸ் ஆடிக்கொண்டிருகின்றனர் பிள்ளைகள். குழந்தைகள் பலர் ஊரிலிருந்துவரும் நம் சொந்தக்காரர்கள்கூடப் பழகவே தயங்குகிறார்கள்.
முன்பெல்லாம்,"அம்மா சுப்ரமணியன் என்ன கிள்ளிட்டான் என அழுது வரும் பிள்ளைகள் இனி,"அம்மா, சூப்பர்மேன் என்ன சுட்டுட்டான்னு" வந்து நிக்குமோ என்னவோ?
More Links on CGshttp://www.timesonline.co.uk/article/0,,2-1976339,00.html
http://news.bbc.co.uk/2/hi/technology/3485918.stm
http://news.bbc.co.uk/2/hi/health/4594376.stm
மிச்சத்தத கூகிளில் தெடுங்களேன்...:)
Wednesday, January 18, 2006
மீதி 67பேர்??
1000 ஆண்களுக்கு 933 பெண்களே இந்தியாவில் உள்ளனர்.
இந்த வார 'டைம்'ல் வந்துள்ளன மேற்கூறிய தகவல்கள். (Time January 23. 2006)
மீதி 67பேர் எங்க போனாங்கன்னே தெரியல?
Tuesday, January 17, 2006
ஒரு ஊர்ல ஒரு இளையராஜா
பாரதிராஜா வந்து ஏன் இளையராஜா கர்வம்பிடித்தவராக இருகிறார் என்பதற்கு விளக்கம் அளித்துச்சென்றார். இந்த நிகழ்சிக்கும் அவர் கூறியதற்கும் சம்மந்தமில்லயோ எனத்தோன்றியது.
கமல் ஓரிரு வரிகளாவது பாடியிருக்கலாம்.
ஷ்ரேயா கோஷல், சாதனா சர்க்கம் குரல்கள் அபாரம். சாதனா சர்கம் போனபிறவியில் தமிழச்சியாயிருந்திருக்கணும், இந்த பிறவியில் தமிழ்பாடும் பல தமிழச்சிகளுக்கு பாடம். அருமையான தமிழ் உச்சரிப்பு.
ஷ்ரேயா , "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தோடுதே" எனப் பாடினார், நம்ம ரசிகர்கள் வழக்கம்போல கைதட்டி சரியாப் பாடச் சொன்னார்கள்.
எஸ்.பி.பி வழக்கம்போல மெருகேற்றிக்கொண்டிருந்தார். இந்த சின்னக்குயில் சித்ரா ஏந்தான் இப்படி அனியாயத்துக்கு பெர்பெக்டா பாடுறாங்கண்ணே தெரியல.. மேடைப்பாடகர்களின் மீதான நம் எதிர்பார்ப்பு இவர்களால் அதிகமாகிறது.
இன்றய பாடகர்களில் கார்திக் அபாரமாகப் பாடினார். பல வருடங்களுக்குப் பிறகு 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' கேட்டது சுகம்.
இருபது ஆண்டுகளாய் இளையராஜா தமிழ் மக்களின் இசை ரசிப்பையே நிர்ணயித்திருக்கிறார். வெறும் சோறு சாபிட்றவங்களுக்கு சப்பாத்தி எப்படி வெறுக்குதோ அதுபோலத்தான் ராஜாவைக் கேட்டவர்களுக்கும் மற்றவை கசக்குது.
தன் காம்பட்டீஷனை அவர் குறைத்து பேசுவதும், "எங்க காலத்துல,," எனத்துவங்கி அவர் பேசும் கருத்துகளும் புலம்பலாகத்தான் படுகின்றன.
ரஹ்மான் காலத்தில் ராஜா இசை மீண்டும் எழுச்சியடைந்திருக்கிறதப் பார்த்தால் இவருக்கு 70, 80களில் போட்டி இருந்திருந்தா இன்னும் கலக்கியிருப்பார்னு தோணுது.
கச்சேரியில் பார்த்திபனின் நச்சரிப்பு தாங்கமுடியல. தமிழ் மக்கள் சார்பில் ஒத்துக்கிறோம் நீங்க கிரியேட்டிவான ஆள்தான் அதுக்காக இப்படியா? கச்சேரியில அடக்கி வாசிப்பதும் ஒரு அழகுதான் பார்த்திபன். இவர் பேச்சை குறைத்திருந்தால் இன்னும் சில பாடல்கள் கேட்டிருக்கலாம்போல.
ஜெயாவில், தொகுப்பில் தொலைந்து போனவையோ என்னவோ, இளையராஜாவின் பல பழைய சூப்பர்ஹிட்கள் மிஸ்ஸிங்.
எஸ். பி. முத்துராமன் ராஜா எப்படி தன்முயற்சிக்கு உதாரணம் எனக்கூறினார். மேடையிலிருந்த இசைக்கலைஞர்களுக்காக கைதட்டச் சொன்னார். எவ்வளவு பணிவாக இருக்கிறர் இவர். எத்தனை சூப்பர்ஹிட் படங்கள் தந்திருக்கிறர். கமல், ரஜினியின் அடையாளங்களாக விளங்கும் சில படங்களைத் தந்திருக்கிறார். இவரும் எளிய துவக்கமே கொண்டிருந்தவர் என்பதை மறக்கமுடியுமா?
பவதாரிணி ஏனோ மேடையில் பாடும்போது நல்லா பாடுறதில்லை. சித்ரா போன்றவர்கள் ஏன் இத்தனை வருஷம் பீல்டுல இருக்காங்கன்னு இப்பத்தான் புரியுது.
மொத்ததில் அருமயான ஒரு நிகழ்ச்சி. வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிஸ் பண்ணாதீங்க. இணையத்திலோ சி.டி களிலோ கிடைக்கலாம்.
பழைய ஞாபகங்கள் சில வந்து போவது நிச்சயம்.
சிறில் அலெக்ஸ்
























சுசிலாவைக் கேளுங்கள்...