.

Wednesday, September 27, 2006

பாக்கிஸ்த்தானில் புஷ் பின்லாடன்

பர்வேஷ் முஷ்ராஃப் ஜான் ஸ்டேவர்ட்டின் டெய்லி ஷோவில் சிறப்பு விருந்தினராய் நேற்று (9/26/2006) தோன்றினார்.

ஜான் ஸ்டிவர்ட்டின் டெய்லி ஷோ தினசரி செய்திகளை நகைச்சுவையோடு விவாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. Fake செய்தி விவரணைகளும், செய்திப்படங்களும் சுவாரஸ்யமாகத் தருவார்கள். ஜார்ஜ் புஷ்தான் இவர்களின் ஹீரோ. ஹீரோன்னா பாட்ஷா ரஜினிமாதிரியில்ல இம்சை அரசன் வடிவேலுமாதிரி.

பாக்கிஸ்தான் வழக்கப்படி (?) தேனீர் கொடுத்து வரவேற்றார் ஜான் ஸ்டிவர்ட்.

முதல் கேள்வியே பின் லாடன் எங்கே இருக்கிறாரரென்றுதான்.

அடுத்து பர்வேஷ் முஷ்ரஃபின் சுய சரிதையான 'In the line of Fire' பற்றிய விவாதம்.

9/11 முடிந்ததும் அமெரிக்கா பாக்கிஸ்த்தானை, தங்களோடு செராவிட்டால் பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுக்கப்படும் என மிரட்டியிருந்ததைப் பற்றி பேச்சு தொடர்ந்தது.

கடைசியில் ஜான் ஸ்டிவர்ட் ஒரு கேள்வி கேட்டார்.

"பாக்கிஸ்த்தானில் ஒரு தேர்தலில் புஷ்ஷும் பின் லேடனும் எதிரெதிர் போட்டியிட்டால் யார் ஜெயிப்பார்கள்?"

முஷ்ரப் சிரித்தபடியே,"இருவருமே படுதோல்வியடைவார்கள்." ("They will both lose miserabily").

உரையாடலைக் காண

சிஃபி செய்தி

No comments:

சிறில் அலெக்ஸ்