.

Saturday, March 31, 2007

Hello சென்னை

ஒருவழியா சென்னை வந்து சேந்துட்டேன். தொலைபேசி எண் 9444846025. இப்போதைக்கு இன்கம்மிங் மடுந்தான் :)

Tuesday, March 27, 2007

புஷ் Vs. புஷ்

அமெரிக்க அதிபர் தன்னைத் தானே கிண்டல் செய்து காமெடி பண்ணிய வீடியோ. White house Press Dinnerன் போது நடந்தது.


Monday, March 26, 2007

கிரிக்கமெண்ட்ஸ் = கிரிக்கெட் + கமெண்ட்ஸ்

உலகக் கோப்பை பற்றிய கசப்பான நினைவுகளுக்கு கொஞ்சம் ஆறுதலாய் போட்டிகள் நடந்துகொண்டிருக்கும்போதே நம் பதிவர்காள் தொடர்ந்து 'சற்றுமுன்னில்' விட்டுக்கொண்டு வந்த பின்னூட்டங்களில் சுவாரஸ்யமானவை சிலவற்றை கீழே தொகுத்துள்ளேன். சற்றுமுன் குழு இதை சிறப்பாக செய்திருந்தது. ஏதோ பதிவர்கள் எல்லாருமே சேர்ந்து மேட்ச் பாத்ததுபோல அமைந்திருந்தது. Over to கிரிக்கமெண்ட்ஸ்.

sksanu said...
191க்கு இந்தியா ஆல் அவுட்!என்னத்தெ சொல்றது.இவங்களையெல்லாம் சக்கரைத் தண்ணியத் தெளிச்சு எறும்புப் புத்திலெ தூக்கிப்போடணும்.

ஜோ / Joe said...
கிரிக்கெட் கடவுள் 26 பந்துகளில் 7 ரன் ,பங்களாதேஷுக்கு எதிரே .ஹும்.பொதுவா இந்தியா செத்த பாம்பை நல்லா அடிப்பாங்க .ஆனா இங்கே பங்களாதேஷ் செத்த பாம்பு இல்லை போலிருக்கு.

தம்பி said...
நம்ம பொழப்புதான் சிரிப்பா சிரிக்குதுன்னா அங்க பாகிஸ்தான் பொழப்பு குய்யோ முறையோ அழுவுது. என்ன நடக்குதுன்னே தெரில

bangalorean said...
வருத்தமான செய்தி : பெங்களூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சிவாஜிநகர் பக்கம் அதிகமான போக்குவரத்து நெருக்கடி. பங்களாதேஷ் ஒவ்வொரு விக்கெட் எடுக்கும்போதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இருக்கிறோமா என்றே சந்தேகம் :(

ஆன்லைன் ஆவிகள் said...
ஆவியிலக வாசிகளின் கணிப்புப் படி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறும் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

தென்றல் said...
பங்களாதேஷ்: 60/1/(11 ஓவர்;5.45RR)/ஆவியிலக வாசிகளின் கணிப்புப் படி 12 ரன்கள் .../ஏங்க... இருக்கிற tension பத்தாது-னு....

சிறில் அலெக்ஸ் said...
Bangladesh 54-1 these guys are playing great. hitting easy boundries. Sixes, yes I said sixes.Pathetic.We will face Pakistan's fate against West Indies, only it is Bangladesh.

icarus prakash said...
தமீம் நாலும் ஆறுமாக விளாசுகிறார். CRR : 5.5. சான்ஸே இல்லை... எல்லாரும் டீவியை ஆஃப் பண்ணிட்டுப் போய் படுங்க,.

தம்பி said...
Patel to Iqbal, THATS OUT!! Caught!!

icarus prakash said...
இருந்தாலும் டவுட்டுதான்..... அடுத்த அஞ்சு ஓவருக்குள்ளே இன்னும் ரெண்டு மூணு விக்கெட் எடுத்தா சான்ஸ் இருக்கு

icarus prakash said...
ச்சேஎ... கேவலமான டிராப்..., தோனி கொஞ்சம் ஒழுங்கா விளையாடுப்பா

cricket said...
prakash: what do you think abt paki innings

icarus prakash said...
i was shocked , to say the least

cricket said...
impossible : victory is far away. current runrate is about 5+ runs a over and bangladesh looks very possitive

cricket said...
gonna sleep now. there is no point in watching the match. waste of time

தம்பி said...
//பங்களாதேஷ் இந்தியாவிற்கு நல்லதொரு சுண்ணாம்பு தடவி வீட்டிற்கு அனுப்ப பார்க்கறாங்க...//யோவ் அனானி யாரு யாருக்கு சுண்ணாம்பு தடவ போறாங்கன்னு பொருத்திருந்து பாருமய்யா!

Anonymous said...
// தம்பி யோவ் அனானி யாரு யாருக்கு சுண்ணாம்பு தடவ போறாங்கன்னு பொருத்திருந்து பாருமய்யா!//உண்மைய சொன்னா ஏன் கோபப்படுறீங்கனு புரியல...

bangalorean said...
Holy crap :( i stay near muslims area. lots of crackers :( when ever 4 was hit by bangladesh ashamed

தம்பி said...
நாளைக்கு தினத்தந்தி நியூஸ்.பயந்து பம்மிய இந்தியாபாய்ந்து குதறிய பங்களாதேஷ்

Vicky said...
// kadavuLE ipadiye pochunna chance irukku

Dravid: இன்னுமா இவங்க நம்மள நம்பறாங்க
Zaheer: அது அவங்க தலைவிதி தல

சிறில் அலெக்ஸ் said...
Another good boundry..Who is the underdog hereoh make it two.Bangladesh Sure to win.:)India is the new Bangladesh.

Radha Sriram said...
how cruel can you get??! (no smiley!)

Anonymous said...
saga pora nerathula sankara sankara ... oru wicket pochchu

சிறில் அலெக்ஸ் said...
17 from 46 balls. 5 wickets down.Is there hope?

Anonymous said...
ungalukku paiththiyama ? hopes ?? :))

Anonymous said...
tai kannadi potta kunda ippo santhoshama??? :(

(மேலுள்ள கமெண்ட் எனக்கு - :))

"வற்றாயிருப்பு" சுந்தர் said...
இந்த வாணவேடிக்கையை பங்களாதேஷ்கிட்ட காட்டிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்!யுவா விக்கெட் விழுந்த அடுத்த பந்துல டெண்டுல்கள் ஒரு 4. அப்றம் 1. 396 ஆயிடுச்சு. 400 உறுதி.

சிறில் அலெக்ஸ் said...
இன்றைக்கு மழை வரப் போவுதுங்க.இந்தியா சூப்பர் 8 போறது ரெம்ப சந்தேகம்.. என்னை நீங்க சபிச்சாலும் பரவாயில்ல.ஒரு பெட்டிங் வச்சுக்கலாமா?:)

மணிகண்டன் said...
ரெண்டு முறை LBW ஆகி, மூன்றாவதாக பேட் செய்ய கிடைத்த வாய்ப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஜெயசூரியா. நல்லாயிருங்க அம்பையர்ஸ்.

சிவபாலன் said...
சிறில்என்ன இப்படி டென்சன் ஏத்திறீங்க.. நம்ம ஆளுங்க இன்னை தோத்துட்டா .. அவ்வளவுதான்.. :)

மணிகண்டன் said...
எனக்கென்னவோ அப்பையர்களையும் சேர்த்து இலங்கைக்கு 13 பேர் ஆடறாங்களோன்னு தோனுது.அம்பையர் ஹார்ப்பர் டவுன் டவுன்!

சிறில் அலெக்ஸ் said...
அங்க பெவிலியன்ல நம்ம க்ரெக் சாப்பல் கழுத்த தடவிகிட்டு உக்காந்துகிட்டிருக்காராம்.:))

மணிகண்டன் said...
//சிபா,என்ன கேள்வி இது. பங்களாதேஷ் கிட்ட அந்த அடி அடிச்சிட்டு அடுத்த மேட்சல இப்படி யாராவது தடவுவாங்களா? ஆனாலும் நீங்க ரொம்ப அப்பாவிங்க சி.பா //

சந்தோஷ்,
நீங்க சொல்றது படி பார்த்தா ஒரு அணி தடவிகிட்டே தான் இருக்கனும், இல்லை அடிச்சிகிட்டே தான் இருக்கனும். எந்த டீமும் ஒரு நாள் ஆடின மாதிரி இன்னொரு நாளும் ஆட முடியாது. அப்படி ஆடினா அவங்க வின்னிங் % 100 இருக்கனும். ஆஸ்திரேலியாவொட வின்னிங் % கூட கிட்டத்தட்ட 63% கிட்ட தான். இன்னைக்கு மேட்ச் ஃபிக்ஸ் ஆயிடுச்சு, இந்தியா ஜெயிக்கும்னு தெரிஞ்சா எதுக்கு உக்காந்து மேட்சை பார்க்கறீங்க? (உங்களைன்னு சொல்லலை பொதுவா ஃபிக்ஸிங்னு சொல்ற எல்லாருக்கும் சொல்றேன்)

சிறில் அலெக்ஸ் said...
//இன்னைக்கு மேட்ச் ஃபிக்ஸ் ஆயிடுச்சு, இந்தியா ஜெயிக்கும்னு தெரிஞ்சா எதுக்கு உக்காந்து மேட்சை பார்க்கறீங்க? //க்ரெக் சசப்பலின் நிலமை என்னவாகும்ணு தெரியவேண்டாமா?க்ரிக்கெட்ட பொறுத்தவரைக்கும் நீங்க தீவிர பக்தர் நான் நாத்திகன் ஆயிட்டேன்.:)

VSK said...
Dravid's gamble with Ganguly paid off!!Sanggakara out caugt Patel bowled BT[Bengal Tiger]:))

சிறில் அலெக்ஸ் said...
//Dravid's gamble with Ganguly paid off!!//some one agrees it is all Gamble.:)

Boston Bala said...
---இந்தியாவிற்க்கு முதல் மாட்ச் அவுஸ்திரேலியாவோ, தென்னாபிரிக்காவோதான். ---இந்த மேட்சையே பிக்ஸ் செய்யறப்போ, அடுத்த ஆட்டத்தையும் 'வாங்கிடலாமே' ;))

Anonymous said...
எப்படியும் இலங்கையைத் தோற்கடித்து இலங்கைக்கு அனுப்பி வைக்கவும்.தமிழனைக் கொல்லும் நாடு வெற்றியடையக் கூடாது.ஒரு இலங்கைத் தமிழன்

VSK said...
இங்கே இருக்கறவங்க[பின்னூட்டம் போடறவங்க] எல்லாரும் இது மேட்ச் ஃபிக்ஸிங்னு முடிவு பண்ணிகிட்டு பின்னூட்டம் போடற மாதிரி இருக்கு.இது நல்லால்லே!சொல்லிட்டேன்!இந்தியா மேலியும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கப்பா!தெறம இல்லாமியா இத்தினி நாளு தாக்கு பிடிக்கறாங்க!:))

Boston Bala said...
---தெறம இல்லாமியா இத்தினி நாளு தாக்கு பிடிக்கறாங்க!---அதானே.. நானும் இதையேத்தான் சொல்றேன் :Pஎன்ன திறமை என்பதில்தான் இரு அணியினரும் வேறுபடறாங்க ;)

சந்தோஷ் aka Santhosh said...
//Depending on spinners at the 47th over??What the hell is Dravid thinking?bad.... very baaaad!//டென்ஷன் ஆகாதிங்க SK. அவங்களும் எம்முட்டு நேரம் தான் நல்லா விளையாடாத மாதிரி நடிக்க முடியும் சொல்லிங்க. அவங்களை அடிங்கடா அடிங்கடான்னு சொல்லி நம்ம ஆளுங்க பவுலிங் போட்டா அவங்க என்ன பண்ணுவாங்க சொல்லுங்க.

Boston Bala said...
---Depending on spinners at the 47th over??What the hell is Dravid thinking?---அதே... அதே! அகர்கர் எதற்கு இருக்கிறார்?அவர்தானே ரன் தானம் தரவேண்டும் ;)

மணிகண்டன் said...
Good competitive score. chances are 50-50. For match fixers 100-0 in favour of India :)

தமிழ்பித்தன் said...
//இம்முட்டு அடிச்சா அப்புறம் இந்தியா எப்படி ஜெயிக்கிறது. ஒரு வேளை அவ்வுளவு அடிச்சா bermuda bowlers வந்து பவுலிங்க் போடுவாங்களோ?//நானும் இதைத்தான் நினைத்தேன் அவர் கேட்டுட்டார் ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம் இலங்கையரின் பந்தா அல்லது இந்தியரின் பட்டா என்று?

அவந்திகா said...
:-)))..காலையில இருந்து 3 தடவை trial toss போட்டு பார்த்து வின் பண்ணேன்so கண்டிப்பா நாம தான் ஜெயிக்கிறோம்

icarus prakash said...
அப்படிப் பார்த்தா டாஸ் கூட நாமதான் கெலிச்சோம்... சூப்பர் எட்டுக்கு நேராப் போய்டலாமா? :-)

மணிகண்டன் said...
Looks like good solid start by India..keep up the good work India!

மணிகண்டன் said...
கமெண்ட் போட்ட நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன்..உத்தப்பா அவுட்.

Boston Bala said...
ஏன் இந்தியா கெலிக்கும்1. வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள். ராகு காலத்திலோ எம கண்டத்திலோ துர்கா சன்னதியில் கூட்டம் அள்ளும். அவ்வளவு கடாட்சமும் இந்தியா மேல் படுவதால்...2. சேவாக் 5000 ஓட்டங்களைத் தாண்டுவதால்...3. இந்த வருடம் இளவேனிற் பருவம் பிறந்த பிறகு இந்தியா தோற்கவே இல்லை என்பதால்...

Boston Bala said...
---நம்ம அணியை கொஞ்ச நேரம் விளையாட விடுங்க..---சித்து சொன்னது: 'விக்கெட் என்பது வீட்டுக்கரசியைப் போல; எப்போது எப்படி திரும்பும் என்று சொல்லவே முடியாது'

சந்தோஷ் aka Santhosh said...
ஆட்டம் அங்க சூடு குறையுது. பாபா இங்க பட்டையை கிளப்புறாரு. :)).

சிறில் அலெக்ஸ் said...
மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல..:)

சந்தோஷ் aka Santhosh said...
//மேட்ச் ஃபிக்சிங் சரியா செய்யல..:)//அலெக்ஸ் அவங்களும் எம்முட்டுடோ டிரை பண்றாங்க பவுலிங்கை சுமாரா போட முடியலை அவங்களுக்கு நல்லா போட்டே பழக்கமாயிடிச்சி.


சிவபாலன் said...
சாப்பலின் கழுத்து காலி.. டிராவிட்டின் கடைசி போட்டி..கேப்டனாக..அட போங்கப்பா..இன்ன நோ கமன்ட்ஸ்.. இந்தியா ஜெயித்தா வருவேன்..


சிறில் அலெக்ஸ் said...
சற்றுமுன்(போலி)செய்தி: சேப்பல் ஓட்டம். விமானத்தின் இறக்கையை பிடித்துக்கொண்டு பறந்தார்.


சிறில் அலெக்ஸ் said...
குங்குமம் இந்த வாரம்: சேப்பலின் கழுத்து தப்புமா? கேட்கிறார் மேட்ச் ஃபிக்ஸ் செய்பவர்.சச்சினுக்கு முட்டை பிடிக்கும். ஸ்கோர் கீப்பர் சுவாஇயான பேட்டி.பெர்முடாவிடம் ஜெயித்தது எப்படி? கணிக்கிறார் ஜோதிடத்திலகம் சுந்தரம்


-L-L-D-a-s-u said...
கை அரிக்குது .. அடுத்து எங்கே பின் ஊட்டம் இடுறது ..மணிகண்டா, போஸ்ட மாத்து


சந்தோஷ் aka Santhosh said...
Commentator "Terrific batsman Shewag".shewag "இப்படி ஏத்தி விட்டு உடம்பை ரணகளம் ஆக்குறதே இவனுங்களுக்கு வேலையாப்போச்சி"காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:1. மணிகண்டன்.2. SK3.Icarus prakash


ரவிசங்கர் said...
44 comments..பட்டைய கிளப்பும் போல இருக்கே சற்றுமுன் updates ! live commentary மாதிரி மக்கள் பின்னூட்டத்தில் பூந்து விளையாடுகிறார்கள் !!


-L-L-D-a-s-u said...
குரங்கு ராதாவுக்கு தூக்க மாத்திரை கொடுக்க ஐ.சி.சி பரிந்துரை


சிறில் அலெக்ஸ் said...
டி. ராஜேந்தர் திடீர் பேட்டி

என்னடா ஆடுறான் கிரிக்கெட்டு
சட சடன்னு விழுது விக்கெட்டு.
தூக்கி அடிச்சாத்தான் சிக்சரு
என்ன செய்யுறான் மேட்ச் ஃபிக்சரு?
சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை

தங்கச்சி அழாதம்மா..அடுத்த உலகக்கோப்பைல எல்லா லீக் மேச்சும் பெர்முடாகூட ஆடுறமாதிரி செஞ்சுரலாம்.

பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?

மணிகண்டன் said...
எப்பா யாராவது ஷேவாக்குக்கு பேட்டை கீழே வச்சுகிட்டே ஓட கத்துக்குடுங்கப்பா


மணிகண்டன் said...
//how can we watch this match live? //why do you want to watch this match live?


சிறில் அலெக்ஸ் said...
//மக்களே மனசை தளர விடாதிங்க. நமக்கு இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு. bermuda வந்து பங்களாதேஷை தோற்கடிச்சா நமக்கு கொஞ்சம் சான்ஸ் இருக்கும். //சந்தோஷ்.. என்னது இது.. நம்பிக்கை நாயகமா நீங்க..சைட் பெட்டிங் இந்தியா 200 தாண்டாது..


சிறில் அலெக்ஸ் said...
//Amit is not flustered. "There is hope. No more wickets till we reach 200 and all will be good.Have faith. India will win.from cricinfo //Amit is a match fixer from Mumbaifrom satrumun(fake) news.


சிறில் அலெக்ஸ் said...
கவுண்டமணி: டேய் என்னடா டி.வி முன்னால உக்காந்துகிட்டு அழுதுட்டிருக்கீங்க. காந்தி செத்து பல வருசம் ஆவுதேடா?வடிவேலு: அண்ணே வேணாம் சிரிச்சுருவேன்.. வேணாம்.


சந்தோஷ் aka Santhosh said...
தோனி "ஏற்கனவே விட்டை ஒடச்சிட்டாங்க இப்ப என்ன உடைக்கப்போறாங்களோ தெரியலையே?"அப்படிங்கிற கவலையோட போறாரு.


சிறில் அலெக்ஸ் said...
சற்றுமுன்(Faking news) தோனி வீடு காலி செய்யப்பட்டது.. காலின்னா 'காலி'


சந்தோஷ் aka Santhosh said...
இந்த கமெண்டேட்டருங்க அடிக்கிற காமெடிக்கு ஒரு அளவே இல்ல. போன drinks breakல போயி டிராவிட்டே துணியெல்லாம் pack பண்ணி எடுத்து வெச்சிட்டாரு. இந்த commentators ஜெயிச்சிடுவாங்கன்னு இன்னும் செல்லிட்டு இருக்காங்க.


சந்தோஷ் aka Santhosh said...
எனக்கு தெரிஞ்சி உத்தப்பாவோட பேரை மாத்தினா சரியாப்போயிடும்மு நினைக்கிறேன். எல்லாரும் அவரோட பேரை ஊத்தப்பா ஊத்தப்பான்னு சொல்றாங்க அதனால அவரு விளையாடுற மேட்சு எல்லாம் ஊத்திகிதோ? பேரை மாத்து பேரை மாத்து.


அவந்திகா said...
''அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்'''இது என்னமோ அம்மா சொல்லீட்டு சிரிச்சாங்க..எழுதி வாங்கீட்டு வந்து டைப் பன்ணி இருக்கேன்..உங்களுக்கு புரிஞ்சா சிரிங்கஇப்ப இதுக்கு meaning கேட்டா அடிக்க வந்துடுவாங்க


சந்தோஷ் aka Santhosh said...
//நாமக்கட்டி விலை குறையும்//-- தினமலர் செய்தி.இதுக்கும் மேட்சுக்கு எந்த சம்மந்தமும் இல்ல சாமி.


சிறில் அலெக்ஸ் said...
சற்றுமுன்(Faking news) சச்சினின் டூத் ப்ரஷ் காணவில்லை. வீட்டுக்கு பொருட்களை அடுக்கி வைக்கும்போதூ தேடினார். 'ஊத்த'ப்பாவை சந்தேகிக்கிறார்கள்.


அவந்திகா said...
Anna even if India looses..SATRUMUN has won...everyday it strikes a centuryCONGRAAAAAAAATS SATRUMUN..:--)))....


சிறில் அலெக்ஸ் said...
பஞ்ச் லைன்ஸ்:

ரஜினி: நான் ஒரு ரன் எடுத்தா நூறு ரன் எடுத்தது மாதிரி.
கமல்: அவன நிறுத்தச் சொல்லு.. சும்மா விக்கட் எடுத்துகிட்டே இருக்கானே அவன நிறூத்தச் சொல்லு.
விஜயகாந்த்: தெருவுல வெளயாடிட்டு டீமுக்கு வர்றவனுக்குத்தான் தெரியும் சும்மா ரெக்கமெண்டேசன்ல வந்தவனுக்கெல்லாம் இப்படிதான்.
சத்யராஜ்: அட கிரிக்கட்டையே புரிஞ்சிக்கமாட்டீங்குறீங்களே.. அவுட்டு அவுட்டு(தகடு தகடு ஸ்டைல்ல).
வடிவேலு: இத்தன விக்கட் விழுந்தும் நின்னு 4 அடிக்கிறாரே இவரு எவ்வளோ நல்லவருடா.:))

கவிதா said...
Boost is the secret of our Energy !!!


Anonymous said...
இந்திய புக்கிகள் யாரக் கொல்லுவாங்க ?



சற்றுமுன்னின் முயற்சியில் பங்கெடுத்த பதிவர்களுக்கும் அனானிகளுக்கும் நன்றி . இந்த முயற்சியை துவக்கியவர் சற்றுமுன் உறுப்பினர் பதிவர் சிந்தாநதி. பாராட்டுக்கள்.

அப்டியே போய் நம்ம மனிகண்டன் விரக்தில ஒரு பதிவு போட்டு கலாஞ்சிருக்காரு படியுங்க.
அப்படி என்ன தாண்டா பேசுவீங்க?

.

Thursday, March 22, 2007

கவி தந்த விதை -5: உன்னைப் பார்த்த பின்பு

உன்னைப் பார்த்தபின்பு...

உன்னைப் பார்த்தபின்பு,
அத்தைப் பெண்கள் ராட்சஷியாயினர்.

முத்தச் சத்தம் மந்திரமானது
அப்பா திட்ட சிரிப்பு வந்தது
அம்மாவின் கோலம் கிறுக்கலானது
அண்ணியும் அண்ணனும் அன்னியராயினர்.
நண்பனின் கேலி வாழ்த்தாய்ப் போனது
நண்பிகளெல்லாம் தங்கைகளாயினர்.
அறத்துப்பாலும் 'இன்பம்' தந்தது
திறந்த விழிகளில் கனவுகள் தோன்றின
காக்கைச் சத்தம் பாடலானது
காகித மலர்களும் தேனைச் சொறிந்தன
கட்டில், மெத்தை கல்லறையானது
கனவும் நினைவும் ஒன்றாய்ப் போயின
கவிதைப் புத்தகம் நிரம்பி வழிந்தது
ஆயிரம் பென்சில்கள் உயிரை இழந்தன
குளியலறையில் சீட்டியடிக்கிறேன்
விடியும் பொழுதுதான் உறங்கப் போகிறேன்

அலையும் விழிகள் உனையேத் தேடும்
கலையும், பாட்டும் அற்பமாய்த் தோன்றும்
நிலவும் சிறுக்கும், இரவை வெறுக்கும்
உயிரை உனது உருவம் உறுத்தும்.

விதைத்தவர்: வைரமுத்து
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்

ஒலிFM ல் ஷைலஜா அவர்கள் கடந்த காதலர் தினமன்று வாசித்து வழங்கிய கவிதை.

Monday, March 19, 2007

நான் ரெம்ப நெஇர்ட்(weird)

தலைப்ப பாத்தாலே தெரியலியா நான் ரெம்ப weirdனு(தமிழ்ல என்ன?)

நம்ம அணில்-குட்டி-கவிதா (எப்டி வேணா படிச்சுக்குங்க) என்னோட 5 weird குணங்கள எழுதச் சொல்லியிருக்காங்க. Weirdக்கா பஞ்சம் செஞ்சுருவோம்.

1. எத எடுத்தாலும் ஏதாவது வித்யாசமா செய்யணும்னு நினைக்கிறது. சாதாரண விஷயங்களில்கூடா ஏதேனும் அறிவியலையோ அல்லது தத்துவங்களையோ அப்ளை பண்ணலாமான்னு பாப்பேன். வேடிக்க என்னண்னா பல நேரங்கள்ல வொர்க் அவுட் ஆயிருக்குது. Weird.

2. ஜோக் ஒண்ணு தோணுச்சுன்னா, யாரு, எந்த இடம், என்ன நடக்குதுன்னு எதுவுமே பாக்காம சொல்லிவிடுவது. இதுவும் பல நேரங்கள்ள ஒர்க் அவுட் ஆயிருக்குது சில நேரங்கள்ல என்ன ஒர்க்லேந்து அவுட் பண்ற லெவலுக்கு போயிருக்குது. Weird.

3. என்னப் பத்தி யாராவது பெருமையா பேசுனா தலகால் புரியாமப் போயி ஆனந்தக் கண்ணீர் வருமளவுக்குப் போயிரும். குறிப்பா, பேசும்போது என் ஜோக்க யாராவது ரசிச்சு விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னு வையுங்க... (அதுக்கப்புறம் கடி பின்னிருவேன்). Weird.

4. அறிமுகமில்லாத நபர்களிடம் எளிதில் பழகுறது. (weird also means that which is not common) என் நெருங்கிய நண்பர்களுகூட கேப்பாங்க 'எப்படீடான்னு'. ஒரு சின்ன ஸ்மைல்தான் முதலீடு. வாட்ச்மேன், ட்ரைவர், பால்காரர், இன்னும் யாராயிருந்தாலும் முடிந்தவரை நட்பு பாராட்டுவேன்.

5. மேல சொன்ன பாயிண்ட்டுக்கு தொடர்ச்சியா ஒரு பாயிண்ட்...புது எடத்துக்குப் போனா பழைய நண்பர்களை எளிதில் மறந்துடுவேன். ஆனா பாத்தா அடையாளம் கண்டு பிடிச்சுருவேன். ஆனா முயற்சி எடுத்து நட்ப தக்கவச்சிக்க முயல மாட்டேன். (சில நெருங்ங்ங்ங்கிய நண்பர்கள் இதற்கு விலக்கு) எல்லாரும் அப்படித்தானோ? I find it weird.

இண்டர்வீயுவுல கேப்பாங்க Tell me about your weeknessனு பல வருஷமா தப்பிச்சு வந்துட்டேன் இப்ப சொல்லிட்டேன். அடுத்து weired Mimiக்கு நான் அழைப்பது..

1. அரவிந்தன் நீலகண்டன்
2. ஜி.ரா
3. சர்வேசன்
4. மணிகண்டன்
5. நிர்மலா

Thursday, March 15, 2007

300

வீரவரலாறுகளுக்கு உலக கலாச்சாரங்களில் பஞ்சமேயில்லை. அதிலும் பலமிழந்தவன் பலசாலியை வீழ்த்தும் கதைகள். ஹாலிவுட்டிற்கு பிடித்தமான கதைவகைகளில் முதன்மையானது இதுதான்.

2,50,000 பேர் கொண்ட பெர்ஷியர்களின்(இந்தக்கால ஈரான் பகுதி) படையை வெறும் 300பேர் மூன்று நாட்கள் தடுத்து நிறுத்தி பின்னடையச் செய்தார்கள் என்றால் நம்பமுடிகிறதா?

இது கிரேக்க வரலாறு. கிரேக்க புராணக்கதையல்ல.

ஸ்பார்ட்டா கிரேக்க நாட்டின் தெற்கிலுள்ள ஒரு நகரம். இங்கு பிறக்கும் ஆண்மகவின் உடல் போருக்குகந்ததா என பிறந்த சூட்டோடேயே பார்க்கப்படுகிறது. குழந்தையின் உடற்கூறு ஒவ்வாததாயிருப்பின் கீழே எலும்புக் கூடுகளோடு எலும்புக்கூடாய்ப்போக வீசி எறியப்படும்.

இப்படி ஒரு காட்சியோடு துவங்குகிறது 300 திரைப்படம். ஸ்பார்டன்களின் தீவிர இராணுவப் பயிற்சியை, ஒருபோதும் தளராமல், உயிர்போகும்வரை போராடும் குணத்தை உருவாக்கும் விதத்தை ஒரு அழகுள்ள ஆவணப் பாடமாய் காண்பிக்கிறது. அந்தக் குழந்தை வளர்ந்து ஸ்பார்ட்டாவின் அரசனாகிறான்.

லியோனிடா. ஹெர்குலிசின் சந்ததி என நம்பப்படுகிறவன். வீரமும் ஈரமும் கொண்ட ராஜன். கடிந்துகொள்ளவும், காதலிக்கவும் தெரிந்தவன். கட்டிலிலும் ஆடைகளின்றி காதலே செய்கிறான், காமமல்ல.

வல்லமைபொருந்திய எதிரியை தடுக்க வெறும் 300 பேரோடு செல்கிறான். அடிமைகளைக் கொண்ட பெரும்படையை வீழ்த்த உணர்வுள்ள 300பேர் போதுமே?

தலைகள் உருள்கின்றன, யானைகள் மலை உச்சிகளிலிருந்து கடல்நோக்கி விழுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட நடனமாய் ஸ்பார்டன்களின் போர்த்திறம் அழகுற கண்முன் விரிகிறது. வானம் இருண்டிட வரும் அம்புக்குவியல்கள், 10 அடிக்கும் மேல் உயரமான அசுரர்கள். உயிர் பயமில்லாத எதிரிகளை வெட்டிச் சாய்க்கிறது ஸ்பார்ட்டன்களின் குறும்படை.

நடனம் தொடர்கிறது. இரத்தம், திட்டமிடப்பட்டு தெளிக்கப்படும் ஓவிய வண்ணமாய் திரையெங்கும் தெரிகிறது. வரப்புகளில் துள்ளிவரும் அழகிகளைவிடவும் மெதுவாய் ஆனால் அதே அழகோடு வெட்டப்பட்ட தலை தரையில் விழுகிறது, பின்தொடர்ந்து பாடலுடன் ஓடிவரும் நாயகனைப்போல உடல் சரிகிறது. நடனம் தொடர்கிறது.

ஏனோ வீரனைச் சரிக்க வீரன் வருவதில்லை காப்பியங்களில். துரோகமே பெரும் ஆயுதமாகிப் போகிறது. சாதித்துவிட்ட திருப்தியோடு 300பேரும் உயிரைவிடுகின்றனர். இவர்களின் கதையை கேள்விப்பட்டபின் ஸ்பார்ட்டா கொதித்தெழுக்றது. பெர்ஷியாவின் படை விரட்டியடிக்கப்படுகிறது.

பொதுவாகப் போர்களில் அரசர்களே வெற்றி பெறுகின்றனர். அவர்களைத் தெய்வங்களெனப் பாடலில் வைப்பார்கள். ஆனால் மாண்டுபோகும் வீரனின் உயிருக்கு மதிப்பிருக்காது.

300 படம் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் க்ராஃபிக்சில் எடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர்களைத் தவிர்த்து மற்றவை எல்லாம் (எல்லாம்) கணினியில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் ஒரே ஒரு காட்சி மட்டுமே வெளியில் எடுக்கப்பட்டிருக்கிறது, அந்தக் காட்சியில் குதிரைகள் வருவதால்.

ஒரு காட்சியில் ஒரு பெண் காற்றில் ஆடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. நிஜத்தில் அந்தப்பெண் நீர்த்தொட்டி ஒன்றில் ஆடியதை படம் பிடித்து அப்படிச் செய்திருக்கிறார்கள். 60 நாள் படப் பிடிப்பு ஒரு வருட தயாரிப்பு.

கால்கள் துண்டிக்கப்பட்டு காற்றில் பறப்பதாயிருக்கட்டும், பிணங்களைக் கலவையாக்கி கட்டப்பட்ட சுவராயிருக்கட்டும், கட்டிலில் முலை தெரியப் பகிரும் அன்பாயிருக்கட்டும், காட்சிகள் அழகுற விரிகின்றன.

இரத்தம் ஆறாய் ஓட, தலைகளும் தசைகளும் சிதற, ஓலங்களும் கூச்சல்களும் எங்கும் நிறைய, காற்றும் நிலமும் சிவப்பாக, நுனிகளில் இரத்தமும் சதையும்தோய்ந்த ஆயுதங்கள் பழக, தூரத்தில் நரிகளும் வானத்தில் வல்லூறுகளும் நாக்கைச் சப்பிக்கொண்டிருக்க, உறுப்பிழந்த உடல்களும் உடலிழந்த உறுப்புக்களும் துடிதுடிக்க கிடக்கின்ற போர்க்காட்சியொன்றை இவ்வளவு அழகாகக் காண்பிக்கத்தான் வேண்டுமா?

Wednesday, March 14, 2007

இயேசுவின் கல்லறை

The lost tomb of Jesus எனும் ஆவணப் படம் போன ஞாயிறன்று டிஸ்கவரி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. இயேசுவின் குடும்பக் கல்லறை என நம்பப்படுகிற கல்லறை ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற (சவப்)பெட்டிகள், அவற்றின்பேரில் நிகழ்ந்த ஆய்வுகளை ஆவணப்படம் முன்வைக்கிறது.

இயேசுவின் காலத்தில் இறந்தவர் உடலை முதலில் ஒரு கல்லறையில் வைத்துவிட்டு ஒரு வருடம் கழித்து மிச்சமிருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் போட்டு குடும்ப கல்லறைகளில் வைப்பது வழக்கமாம். இப்படிப் பட்ட கல்லறையின்றில் கண்டெடுக்கப்பட்ட பெட்டிகள்தான் ஆவணப்படத்தின் அடிப்படை ஆதாரம்.

டிஸ்கவரி துவக்கத்திலேயே ஒரு பெரிய டிஸ்க்ளெய்மரோடு (Disclaimer ) ஆரம்பிக்கிறது.

ஆவணப் படத்தின் இயக்குனரோடும், இன்னொரு முக்கிய ஆலோசகரோடும், அகழ்வாராய்ச்சி துறையினரும், அறிவியல் வல்லுநர்களும் இன்னும் கிறீத்துவ இறையியலாளர்களும் உரையாடிய ஒரு கலந்துரையாடலைக் காண்பித்தனர். தான் ஒளிபரப்பும் ஒரு நிகழ்ச்சிபற்றி நேர், எதிர் கருத்துக்களை விவாதிக்கச் செய்த டிஸ்கவரியை வியக்காமல் இருக்கமுடியாது. இதை வழிநடத்திய அனுபவமிக்க ஊடகவியலாளர் டெட் காப்பல் தன் அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார்.

பொதுவாகக் கருதப்படுவதுபோலல்லாமல் இந்தக் குடும்பக் கல்லறையை கண்டு பிடித்து 27 வருடங்கள் ஆகின்றன, இப்போதையக் கண்டுபிடிப்பல்ல. இந்த ஆவணப்படம் எடுக்க ஆன காலகட்டம் 3 வருடங்கள். 24 வருடங்களாக அந்தக் குடும்பக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பெட்டிகள் ஜெருசலெம் அருங்காட்சியகத்தின் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பெட்டிகளை அருங்காட்சியகம் ஆவணப்படுத்துவதிலிருந்தே குழப்பங்கள் துவங்குகின்றன. இவை அவசரமாக ஆவணப்படுத்தப்பட்டு சேமிக்கப் பட்டுள்ளன என்கிறார் இஸ்ரயேல் அருங்காட்சியகத்தில் அப்போது ஆய்வாளராக இருந்தவர். இவையெல்லாம் ஒரே நாளில் அல்லது ஒரே காலகட்டத்தில் சேர்க்கப்பட்டவையா என உறுதியாக அறிய இயலவில்லை.

இந்தக் கல்லறை இயேசுவின் குடும்பக் கல்லறை எனப் பெட்டிகளின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்களை வைத்து சொல்ல முயல்கிரார்கள். இந்தப் பெயர்கள் மிகத் தெளிவாக தெரியவில்லை என்பதும் உணரப்பட்டுள்ளது. இவை அரமைக் எனும் இயேசுவின் தாய் மொழியில்பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட மொத்தம் 10 பெட்டிகளில் 6ல் பெயர்கள் உள்ளன. ஜோசப்பின் மகன் இயேசு எனும் பெயருள்ள ஒரு பெட்டி, மரியா என ஒன்று மரியம்னெ எனப் பெயருள்ள ஒரு பெட்டி யூதா எனும் பெயருள்ள இன்னொரு பெட்டி, இன்னும் பெயருள்ள இரண்டு பெட்டிகள். இந்தப் பெயர்கள் முதலாம் நூற்றாண்டில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஆவணப்படம் தெரிவிக்கிறது. (Use stats) இதற்குமுன் பல கல்லறைகளில் இயேசு எனும் பெயர்பொறிக்கப்பட்ட பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆவணப்படம் வியாபார நோக்கோடு, பரபரப்பை உண்டாக்க எடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சில வல்லுநர்கள். அகழ்வாராய்ச்சியாளர் ஒருவர் இதை அகழ்வாராய்ச்சியின் ஆபாசத் திரைப்படம்(Archeological pornography) என்கிறார்.

அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் பொருள்சார்ந்த அறிவியலையும்(Material Scinece), எண்ணிக்கை சர்ந்த அறிவியலையும் கொண்டே முடிவுகளை செய்ய இயல்கிறது. இதில் பொருள்சார்ந்த் ஆதாரங்கள் அதிகமிருப்பின் முடிவுகளின் மேல் அதிக நம்பிக்கை உருவாகும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாய் பரிணாம வளர்ச்சிக் கொள்கை.மரபணு சோதனை ஒரு பொருள்சார்ந்த அறிவியல். இந்த ஆவணப்படம் குறைந்த பட்ச மரபணு சோதனையையே செய்துள்ளது. புள்ளியியல்(Statistics) ஒரு அறிவுசார்ந்த அறிவியல் இதை அதிகமாகப் பயன்படுத்தி முடிவுகளைச் சொல்கிறார்கள் ஆவணப் படத்தில்.

புள்ளியியல் அனுமானங்களை ஏற்படுத்தவும், தோராயமான முடிவுகளைப் பெறவுமே பயன்படுகிறது. புள்ளியியல் அடிப்படையில் இயேசுவின் காலத்தில் இருந்த மக்கள் தொகையில் எத்தனைபேருக்கு இயேசு எனப் பெயர் இருந்திருக்கும் எனும் தோராயக் கணக்கில் துவங்கி எத்தனைபேருக்கு மரியாள் , ஜோசப் எனும் தாய் தந்தை இருந்திருப்பர் எனும் அனுமானங்களினூடாகப் பயணிக்கிறது 'ஆய்வு'.

ஆவணப் படம் தொட்டுச்ச் செல்லும் இன்னொரு கருத்து இயேசுவுக்கும் மரிய மதலேனாளுக்கும் திருமணமாயிருந்தது எனும் கூற்று. இதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளது. டா வின்சி கோடின் பரபரப்பு தொத்திக்கொள்கிறது.

இதில் இருக்கும் பெரிய ஓட்டை என்னவென்றால், மரியம்னே எனும் பெயருள்ள பெட்டியில் இருக்கும் பெண்ணின் மரபணுவுக்கும், இயேசு எனப் பெயரிட்ட பெட்டியிலுள்ள் மரபணுவுக்கும் இரத்த சம்பந்தம் இல்லை என சோதனை தெரிவிக்கிறது. இரத்த சம்பந்தம் இல்லையென்பதாலேயே இருவரும் மணமானவர்கள் எனும் முடிவுக்கு வருகின்றார்கள். எல்லா பெட்டிகளில் உள்ள மரபணுக்களும் சோதிக்கப்பட்டிருக்கின்றனவா எனும் விவரம் இல்லை. பெயரில்லாத மீதம் 4 பெட்டிகளில் உள்ளவர்களுக்கும் மரிமனெவுக்கும் தொடர்பிருக்கிறதா? தெரியவில்லை. ஆவணப் படம் தரும் வாதப் படி பார்த்தால் மரியம்னெவுக்கும் அந்தக் கல்லறையிலிருக்கும் யாருக்கும் வேண்டுமானாலும் திருமணம் நடந்திருக்கலாம், பெண்களைத் தவிர்த்து. So much for science.

மரிய மதலேனாளுக்கும் இயேசுவுக்குமான மரபுவழிக் கதைகளைக் கொண்ட டாவின்சி கோடின் அனுமானங்களைக் கொண்டு, சாதகமான அறிவியல் சோதனைகளோடு முடிவுகள் சொல்லப்படுகின்றன.

'மரியம்னெ' எனும் பெயர் இன்னும் முக்கியத்துவம் பெறக் காரணம் என்னவென்றால் பிலிப்பின் நற்செய்தி(Gospel of Philip) மரியம்னெ எனும் பெயரில் மரிய மதலேனாளை குறிக்கிறது. ஆனால் பிலிப்பின் நற்செய்தி 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது மரிய மதலேனாள் வாழ்ந்ததோ முதலாம் நூற்றாண்டு. முதலாம் நூற்றாண்டில் மரியம்னெ எனும் பெயர் பரவலானதாக இல்லை. இதை ஆவணப் படக் குழுவும் விவாதத்தின்போது ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஆவணப் படத்தில் தங்கள் வாதத்தை பலவீனம் செய்யும் கருத்துக்களை குறைவாகவே சொல்கிறார்கள்.

400 ஆண்டுகள் கழிந்தபின் மரிய மதலேனாளுக்கு கிடைத்த மரியம்னெ எனும் பெயர் அவர் இறந்து ஒருவருடத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட சவப் பெட்டியில் பொறிக்கப்பட்டிருக்கிறதென்பது, தமிழ் திரைப்படங்களில் பாம்பு தட்டச்சு செய்து எச்சி போட்டு கடிதம் ஒட்டி அஞ்சல் செய்கிற கற்பனையின் ஓட்டையை விட பெரியதாயுள்ளது.
வாதங்களுக்குப் பின் வாதங்களாகத் தொடர்புகள் ஏற்படுத்தப் பட்டிருப்பினும், ஒவ்வொரு வாதங்களும் பெரும் சந்தேகங்களுடன் கூடிய அனுமானங்களோடு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதால் தொடர்புள்ள வாதங்களின் தனிப் பகுதிகள் வலுவிழந்து போகின்றன, எனவே மொத்த வாதமும் வலுவிழக்கிறது.

ஆவணப்படம் சொல்லவரும் விஷயங்களையும் ஒழுங்கற்ற சம்பாஷணைகளின் மூலமே பொதுவாகச் சொல்கிறது. முக்கியமான கட்டங்கள் வாதங்களாகவே (உரையாடல்) செல்கின்றன. டீக் கடை பெஞ்சில் சதாம் உசைனுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் என்ன சந்ம்பந்தம் என்பதுபோன்ற உரையாடல்கள்.ஆவணப் படத்தில் பங்குபெற்ற 'அறிவியல்' வல்லுனர்கள் பலரும் தங்கள் முடிவுகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருப்பதாக 'டிஸ்கவரிக்கு' தெரியப்படுத்தியுள்ளனர். புள்ளியியல் முடிவுகளைச் சொன்ன டொராண்டோ பல்கலையின் பேராசிரியர் ஆண்ட்ரே, அகழ்வாராய்ச்சித் துறையிலோ, பைபிள், கிறீத்துவ வரலாற்றின் ஆராய்ச்சியிலோ எள்ளவும் அனுபவமில்லாதவர். அவரின் முடிவின்படி இந்தக் கல்லறையில் உள்ள பெயர்கள் இயேசுவின் குடும்பமாக இருக்க அறுநூற்றில் ஒரு சாத்தியம் இருக்கிறது. (1 in 600 probability). இந்த சாத்தியமும் மரியம்னெ எனும் பெயர் மரிய மதலேனாளின் பெயர் என்பது உண்மை என எடுத்துக்கொள்வதால் வருவது. அந்த வாதம் பொய்த்துப் போவதால் 600ல் ஒன்று எனும் சாத்தியம் இல்லாமல் போகிறது.

மரியமதலேனாளின் உடல் இயேசுவின் உடலோடு கண்டுபிடிக்கப் பட்டிருப்பதைவிட இயேசுவின் உடல்(எலும்புகள்) கண்டுபிடிக்கப்பட்டது என்பதே கிறீத்துவர்களின் பெருங்கவலையாக இருக்கும். இயேசு உடலோடு பரலோகத்துக்குச் சென்றார் என்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை.

இந்த ஆவணப் படம் வியாபார நோக்கில், பரபரப்புக்காகவே எடுக்கப்பட்டிருப்பதை பல பத்திரிகைகளும், டிஸ்கவரியின் வல்லுநர் குழுவுமே சொல்கின்றன. டாவின்சி கோட் நாவல் ஏற்படுத்திய பரபரப்பு அலையில் சறுக்கி விளையாடும் அவசரம் தெரிகிறது.
டைம் இதை 'அவசர, விளையாட்டுத் தனமான அறிவியல்' என்கிறது. இதுபோன்ற அவசர அறிவியல்கள் சொன்ன பல கருத்துக்களும் குழப்பத்தை ஏற்படுத்தவே தவிர வேறொன்றுமில்லை.

கடவுளை நம்ப அறிவியல் தேவயில்லை. கடவுள் நம்பிக்கைக்கு அறிவியல் மாற்று இல்லை என்பதை புரிந்துகொண்டிருக்கும் வரையில் இதுபோன்ற வெற்றுத் தகவல்கள் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தும். கடவுள் இல்லாத வாழ்க்கையை மனித இனம் பரவலாகத் தேர்ந்தெடுக்கும் நாள் வரலாம். அப்போது கல்லறைகளைத் தோண்டும் அவசியங்கள் இருக்காது. (அதுவரைக்கும் ஆயிரம் கல்லறைகளைத் தோண்டினாலும் நம்பிக்கைகளை அசைக்க முடியாது)

நன்றி: தமிழோவியம்

அண்ணாச்சி ஒலகம் என்னாச்சி?

இந்த வார தமிழோவியத்தில்...


பெர்னாண்டஸ் - வாஜ்பாய் தமாஷ் செய்வது யார் ?
தமாஷு தமாஷு
ரஜினி கணபதி - இவர் வழியும் தனி வழிதான்
5 போலீச சுட்டது எந்தா அண்ணாச்சி?"
இயேசுவின் கல்லறை
இந்தியா வெல்லுமா ?
அட்மிஷன் அவலங்கள்
யாரோ !
மடப்பள்ளி
காங்கிரஸ் - கோஷ்டி பூசல்
தீபாவளி

Sunday, March 11, 2007

6 வார்த்தை கதைகள்...

வரவர வார்த்தைக்குப் பஞ்சமாயிடுச்சு. ஆறு வார்த்தை கதைகள்.

நிலவை அடைந்தோம். திரும்பிப் பார்த்தேன். உலகம் உருண்டைதான்.

எட்டுப்பட்டி கிராமம். ஆலமரத்தடி கூட்டம். தூக்கில் நாட்டாமை.

.E.D.E.N. விண்கலம் தரையிறங்கியது. ஆதாம் ஏவாள் வெளிவந்தனர்.

'டேய் விடுடா விடுடா'
'இருடீ'
'துரோகி விடுடா'

கால எந்திரம். தவறான கட்டளை. 'நாளையை சென்றடை'.

'அம்மா'
'மகனே!'
'போரில் தோற்றுவிட்டேனம்மா'
'என்ன?'
'அம்மா...!'

போரில் மரணம். நெஞ்சில் தோட்டா. அம்மா அழுகிறாள்.

வரப்பை திருத்தினான். நீர் பாய்ந்தது. சிவப்பாய் என்னது?

இன்னொரு வெர்ஷன்
வரப்பை திருத்தினான். நீர் பாய்ந்தது. செந்நீர் பாய்ந்தது.

Saturday, March 10, 2007

உதவி தேவை

அன்பு நண்பர்களே உங்கள் உதவி ஒருவருக்கு மிக மிகத் தேவையாயுள்ளது. கொஞ்ச நாளா இவர் பயங்கர அடிபட்டு நோயானவர் பொலத் தோற்றமளிக்கிறார்.

இவருக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டியது நம்ம கடமை. இவர் பெயருக்கு ஏற்படுகின்ற களங்கத்தை துடைப்பதுவும் நம் கடமை. இத சேர்ந்து செய்ய ஒரு புது முயற்சியா கீழ்கண்ட தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படியுங்க. குழுவில் இணைந்து இவருக்கு உதவுங்கள்.

அது வேற யாரும் இல்லீங்க 'கடவுள்தான்'.

போய் படியுங்க 'கடவுள் வாழ்த்து'

திரட்டிகளில் இன்னும் சேர்க்காததால் இந்தப் பதிவு

Thursday, March 08, 2007

என் சமையலறையில்...

ஒரு மாசம் ஒண்டிக்கட்டையா கழிக்கிறதே இத்தன கஷ்டமாயிருக்குதே...

என் சாப்பாடு சுவையா இருக்கணுங்கிறதுல நான் கவனாமாயிருப்பேன். பசி இல்லைன்னா இப்படித்தான், சுவையாயிருந்தாத்தான் சாப்பிடத் தோணும். ஹ்ம். கூடவே கொஞ்சம் 'கொழுப்பும்' சேர்ந்துட்டா? மனைவியோடு சண்டை, அது இல்லியா இது இல்லியான்னு டிமாண்ட்.

இப்ப ஒருமாதமா கண்டதையும், கார்ப்பெட்ல விழுந்ததையும் எடுத்து சாப்பிட்டதுல கொஞ்சம் ஞானோதையம் பிறந்திருக்கு. இனிமே டிமாண்ட்கள் விண்ணப்பமாகவும், 'பரவாயில்லை' என்பது பாராட்டுக்களாகவும் மாறும் என வாக்களிக்கிறேன்.

முந்தா நேத்து பரோட்டாவ கரிச்சிட்டேன், பால் எக்ஸ்பையர் ஆயிடுச்சு, ஆரஞ் ஜூஸ் ஒயினா(Wine) மாறிடுச்சு, சிப்செல்லாம் பொரிக்காத அப்பளமாயிடுச்சு, காலி'ப்ளவர்' வாடிப் போச்சு என் சமையலறை மெஸ்(mess) ஆயிடுச்சுங்க. மெஸ்னா சாப்புடுற மெஸ் இல்ல சாப்பிட முடியாத மெஸ்(Messy).

வீட்டில இருக்கிற பெண்கள் 24மணி நேரமும் வேல செய்யுராங்க அதுவும் சீரியல் பாக்க பிடிக்காத பெண்கள் (என் மனைவிபோல). :) மகளிர்தினமும் அதுவுமா.. சில திருத்தங்கள் செய்யணும்னு ஆசைப்படுறேன்.

நான் ஒலி FMல சொன்ன மாதிரி, சமத்துவம், பெண்ணியம், அடிமைத்தனம் அது இதுன்னு என்ன பேசினாலும் அடிப்படையில மனிதனை மனிதனாய் பாக்கும் பண்பு வேணும். 'அன்பு' ஒன்றைத்தான் எல்லா மனிதனும் மனுஷியும் எதிர்பார்க்கிறாங்க. நம் பார்வையில் அன்பிருந்தா சமத்துவம் சகோதரத்தூவம் எல்லாமே வந்துரும்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

.

ஜீன்ஸ் - சிறுகதை

"இன்னைக்கும் காலெஜ்லேந்து வர லேட்டு. என்னான்னு கேளுங்க."

"என்னடா? என்ன லேட்டு?"

"ரெம்பெல்லாம் லேட்டில்லப்பா. அம்மா இருக்காங்களே..."

"எத்தன மணிக்கு வந்த?"

"7 மணிக்கு."

"ம்"

"பைக் வாங்கி மூணுமாசத்துல இது எத்தனாவது முறை?"

"அம்மா! கார்த்தி பர்த்டேமா. அப்பவே சொன்னேன்ல?"

"எங்க போனீங்க?"

"ஸ்பென்சர் ப்ளாசா. சப்வே."

"ஓ. வெளிய சாப்பிட்டாச்சா?"

"பார்டின்னா சாப்பிடாமலாம்மா?"

"நீங்க பாட்டுக்கு டூர் போயிடுங்க. இவங்கள வச்சுகிட்டு, வயித்துல நெருப்ப கட்டினமாதிரி.. எப்ப வருவாங்கன்னு பாத்துட்டிருக்கவேண்டியிருக்குது. ஊர்லயே இருந்திருக்கலாம்."

"வந்து வருஷம் நாலாச்சு. இப்ப சொல்ற."

"அம்மா இப்ப என்ன ஆச்சு. என் ஃப்ரெண்ட்செல்லாம் நைட் ஷோ முடிச்சுட்டுதான் வீட்டுக்குப் போறாங்க. நாந்தான் வீட்டுக்கு வந்துட்டேன் தெரியுமா?"

"ஓ அதுவேறயா? ஏன் போயிருக்கவேண்டியதுதானே."

"விஜி. நம்ம ஃபீலிங்க புரிஞ்சுகிட்டு நடந்துக்கிறாங்க குழந்தைங்க. பெருமைதானே."

"என்னங்க சொல்றீங்க? இந்த விஷயத்துல ரெம்ப செல்லம் குடுக்குறீங்க. அவங்கள கெடுக்கிறதே நீங்கதான். சனி ஞாயிறானா பைக் எடுத்துட்டு காலையில போனா சாயங்காலந்தான் வர்றாங்க. பெருச பாத்து சின்னதும் கெட்டுப்போகுது."

"எங்க போறாங்க? கோயிலுக்குப் போயிட்டு. ஹோம்ல போய் பாட்டிய பாத்துட்டு வர்றாங்க."

"இல்லண்ணு சொல்லல கொஞ்சம் வீட்ல இருந்தா என்னங்க? நாளைக்கே ஒரு.."

"நாளைக்குள்ளத அப்புறம் பாத்துக்கலம் விஜிம்மா"

"இப்ப தெரியாதுங்க காதல் கீதல்னு வந்து யாரையாவது கூட்டிட்டு வரும்போது தெரியும்."

"என்னடா? லவ் பண்றியா?"

"இன்னும் இல்ல."

"என்னடா இப்டி சொல்லிட்ட.. ஹ ஹா"

"சிரிங்க நல்லா சிரிங்க. என்ன கிண்டல் செய்றதா நினச்சுகிட்டு அவங்கள ஸ்பாயில் பண்றீங்க."

"விஜி.. பல தடவ சொல்லிட்டேன். அவங்களுக்குன்னு சில உரிமைகள் இருக்குதும்மா. அவங்க கடமையெல்லாம் ஒழுங்கா செஞ்சுட்டு உரிமைய பக்குவமா பயன்படுத்துற வரையிலும் அதுல நாம தலையிடுறது நல்லால்ல."

"நீங்க ஏதோ அமெரிகாவுல இருக்குறீங்கன்னு நினைக்காதீங்க. நம்ம ஊர்ல குழந்தைங்கள சரியா வளக்கலைன்னா நாலு பேர் நாலு விதமா சொல்வாங்க"

"அடுத்தவங்க என்ன சொல்வாங்கன்னே வாழ்க்கையில எல்லா முடிவையும் எடுத்துகிட்டிருந்தா அது வாழ்க்கையில்ல விஜி. சீரியசா யோசிச்சா அது அடிமைத்தனம்."

"தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டீங்களா? அவங்கள முன்னால வச்சுகிட்டு இதையெல்லாம் சொல்லித்தாங்க. நம்ம காலத்துல இப்டியா வெளிய சுத்திகிட்டும், ப்ரெண்ட்ஸ் வச்சுகிட்டும் இருந்தோம்."

"நம்ம காலத்துலன்னு நீ சொல்லுறத வச்சே அது கொஞ்சம் பழசாயிடுச்சுன்னு சொல்லலாம்ல. அப்ப இந்த வசதியெல்லாம் இல்ல அதனால நாம பயன்படுத்தல. இருந்த வசதிகள வச்சுத்தான் வாழ்க்கையும் இருந்துச்சு. தூர்தர்ஷன் போயி கேபிள் வந்துச்சில்லையா? எவ்வளவு பெரிய மாத்தம்."

"கேபிள் வந்ததுக்கும் இப்ப நான் சொல்றதுக்கும் என்ன சம்பந்தங்க?"

"எனக்கு இன்னொரு தோச போதும். இருக்கு விஜி. காலம் மாறுது. பல ஆப்ஷன்ஸ் கிடைக்குது. ஊடகம் சொல்லிக் குடுக்குது. பார்ட்டிக்குப் போறது சரின்னுது, ஃபேஷன் ஷோ நல்லதுங்குது, டேட்டிங்க்னா என்னன்னு உனக்கு முன்னால தெரியுமா? இன்னும் என்னென்னெல்லாமோ. நல்லதப் பார்த்து அனுபவிக்கிற வசதிய நம்ம குழந்தைகளுக்கு செய்துதரணும். காலம் மாறுது நாம மாறிக்கிறோமோ இல்லையோ. நம்ம காலம் போயிடுச்சு விஜி. மனுசனுக்கு வயசாகிறது நாம செல்லுபடியாகமப் போறோங்கிறதத்தான் குறிக்குதில்லையா? நான் ஜீன்ஸ் போட்டதயே ஒன்னால ஏத்துக்க முடியல. எவ்வளவு கம்ஃபர்டபிள் தெரியுமா?. நீ சுடிதாருக்கு மாறினப்ப கல்யாணமான பொண்ணுக்கு ஏன் சுடிதார்னு யோசிச்ச. இப்ப? இதப்போலத்தான் புது கலாச்சாரமெல்லாம். பழகிடுச்சுன்னா நாம விரும்ப ஆரம்பிச்சுடுவோம். நம்ம காலத்துல இப்டி இல்லையேங்கிறது கவலையாயிரும்."

"இந்தக் காலம் ஒங்களுக்குத்தான் ஒத்துப்போகும். ரெண்டு பொம்பளப் புள்ளைங்கள வளர்த்து ஆளாக்குறது எவ்வளவு கவனமா செய்ய வேண்டியது? உங்களுக்கேது இந்தக் கவலையெல்லாம். அவள்கள வாடா போடான்னு கொஞ்சிகிட்டு எடுத்ததுக்கெல்லாம் வளஞ்சு குடுக்குறீங்க."

"பொண்ணுங்களுக்கும் தங்களப் பத்தி முடிவெடுக்க உரிமையிருக்குதும்மா. உன்னோட பாயிண்ட்படி பாத்தாலுமே இவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாமே பொண்ணுங்கதானே. கார்த்திகா மட்டும் பாக்க ஆம்புள மாதிரி இருக்கா ஆனா எவ்வளவு நல்ல பொண்ணுங்க."

"எனக்கு என்னன்னா.."

"...கவலப்படாத விஜி. நான் இருக்கேன்ல."

"எங்க இருக்கீங்க?"

"இனிமேல் இருப்பேன். சென்னையில ரீஜனல் மேனேஜர் ப்ரமோஷன். பாஸ் ஊர்லேந்து வந்ததும் லெட்டர் தருவார். நோ மோர் டூரிங்."

"ஐயோ! நிஜமாப்பா?"

"ஆமாண்டா செல்லம்."

.
==~~~~~~~~~~~==
நன்றி: தமிழோவியம்
==~~~~~~~~~~~==

Wednesday, March 07, 2007

இப்பவே கேளுங்க ஒலிFM-மகளிர் தின நிகழ்ச்சி-சிறப்பு விருந்தினராக ஒரு பதிவர்

Olifm.com போயி நடக்கிற நிகழ்ச்சிய கேளுங்க (இந்திய நேரம் 7:30Am).

மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சியில் தேனான* பதிவர் ஒருவர் தோன்றி பேச இருக்கிறார் கூடவே சக பதிவர்கள் நிர்மல், அருட்பெருங்கோவின் கவிதைகளுடன்.

* நாந்தாங்க அது

சென்னை வருகிறேன் + நாகர்கோவில் சந்திப்பு

சரியாக இரண்டு வருடங்கள் கழித்து சென்னை வருகிறேன். வலப்பக்கத்தில் ஒரு Countdown ஓடுது பாருங்க. :))

மார்ச் 31 சென்னை வந்து சேர்கிறேன். ஒரு மாதம் விடுமுறை.

இயன்றவரை சென்னை பதிவுலக நண்பர்களை சந்தித்துவிட ஆசை. எப்படிப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏப்ரல் 14 துவங்கி வரும் வார இறுதியில் நாகர்கோவில் பகுதிக்கு உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன். நாகர்கோவில் பகுதி பதிவர்கள் சிலர் ஒரு பெரிய அளவு சந்திப்பை செய்யலாம் என நினைக்கிறோம். நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்ட பதிவாளர்கள் நாகர்கோவிலில் பதிவர் கூட்டத்துக்கு ஒப்புக்கொண்டால் ஒரு பெரிய அளவில் சந்திப்பை ஒருங்கிணைக்கலாம். நாகர்கோவில் இலக்கிய வட்டத்திற்கும், பொதுமக்களுக்கும் பதிவுலகை அறிமுகம் செய்யும் விதமாக பெரிதான கூட்டம் ஒன்றை செய்யலாம்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தனிமடலில் தொடர்புகொள்ளவும். cvalex @ yahoo .com. இதை ஒருங்கிணைக்க விருப்பம் உள்ளவர்களும் தெரியப் படுத்துங்கள்.

சென்னை கவுண்ட்டவுன் நம்ம பாபா கவுண்ட்டவுனாட்டம் ஒடிக்கிட்டிருக்குது.
ஒரு வினாடிண்றது இவ்வளவு நேரமா? :)

.

Tuesday, March 06, 2007

மேதா பட்கர், ஜெயந்தி சங்கர் பேட்டியுடன்...

தமிழோவியத்தில் இந்த வாரம்...

: பந்த் பயன் தருமா? [மீனா]
நெய்வேலி விஷயத்தில் மத்திய அரசு தங்களுக்குச் சாதகமான முடிவை
எடுக்காவிட்டால் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒப்புக்காவது
ஒரு அறிக்கை வெளியிட்ட முதல்வர் காவிரி விவகாரத்தில் மறந்தும் கூட வாயைத் திறக்கவில்லை.

: மேதா பட்கர் பேட்டி - வேண்டாம் அணு உலை வேண்டாம் [திருமலை கோளுந்து]
நீங்கள் முகத்தை துடைக்கும் பொழுது கூட, இங்கு கிராமத்து பெண்கள்
செய்வது போல் சேலையின் முந்தனையால் தான் துடைத்துக் கொள்கிறீர்கள். அதே போல் முகத்தை தண்ணீரால் கழுவும் பொழுது, கையால் தரையில் இருக்கும் மண்ணை தொட்டு அதனை கொண்டு முகத்தில் தேய்த்து முகத்தை கழுவுகிறீர்கள். இவ்வளவு எளிமையை எப்படி கடைபிடிக்க முடிகிறது?


: உறுதிகொள் தமிழா!! [கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்]

நீ வளர்ந்த மொழியை நீ வளர்க்க
மறுத்தல் நியாயமோ? சொல் தமிழா!

: எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஒரு இ-நேர்காணல் [திருமலை கோளுந்து]
புத்தகங்களை நண்பர்களா ஆக்கிக் கொண்ட இந்த 17 வருடங்களில்
புத்தகங்களும் அதற்கு இணையாக நான் சந்திக்கும் மனிதர்களும் என்று இன்றைய வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. தினமும் கற்றுக்கொள்ள எனக்கு ஏதாவது இருந்து கொண்டேயிருக்கிறது. இதுதான் நான் உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளம் என்று நான் நினைக்கிறேன்

: முதல் சுற்றில் இந்தியாவின் வாய்ப்பு [மணிகண்டன் அழகப்பன்]
எல்லா க்ரூப்புமே ரெண்டு பலமான அணி, ரெண்டு சற்றே அனுபவம் குறைந்த
அணின்னு பிரிக்கப்பட்டிருக்கு. நம்ம க்ரூப்புல இந்தியாவும் இலங்கையும் பலம் வாய்ந்த அணிகள்.

: தாமிரபரணி [மீனா]
ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்யும் விஷால் மற்ற படங்களிலிரிந்து வேறு
பட்டு இதில் நன்றாக நடிக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.
: மனசாட்சி சொன்னது [குகன்]
2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து,
அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது.

: காதலே, என் கணவனே! [சுரேஷ், சென்னை]

துப்பட்டாவின் வீழ்ச்சியும் சேலையின் விலகலும் கண்டு மகிழ்ந்ததாமே
உந்தன் கண்காட்சி!

: ஜீன்ஸ் [சிறில் அலெக்ஸ்]
"நீங்க பாட்டுக்கு டூர் போயிடுங்க. இவங்கள வச்சுகிட்டு, வயித்துல
நெருப்ப கட்டினமாதிரி.. எப்ப வருவாங்கன்னு பாத்துட்டிருக்கவேண்டியிருக்குது. ஊர்லயே இருந்திருக்கலாம்."
"வந்து வருஷம் நாலாச்சு. இப்ப சொல்ற."

: அத்தை பெண்கள் என்னும் அழகிகள் [கார்த்திக் பிரபு]

நம் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளின் இறுதியில் எடுக்க பட்ட
புகைப் படங்களிலும் என்னை பார்த்துக் கொண்டே நிற்கிறாய் நீ.

Monday, March 05, 2007

ரவுசு மச்சீ...

மொதல்ல கீழ உள்ள பதிவக் கேளுங்க, ஒரு 'Pin'ஊட்டம் போடுங்க அப்புறமா 'ரவுசு மச்சி' தலைப்புல ஒரு பதிவு போடுறேன். சரியா?

:))

'பாடல் கேளீரோ?'


யாருயா அங்க 'பதிவுக் கயமைன்னா' என்னான்னு கேட்டது?
:))
.

.

'பாடல்' கேளீரோ?

பாடல்கள், இசையுடன் கூடிய குரல் பதிவு. கேட்டு மகிழுங்கள்.


paadal final.mp3



தமிழோவியம் சுட்டி


'மொழி' விமர்சனம் படிச்சிட்டீங்களா?

Sunday, March 04, 2007

'வார்த்தையில்லாமலே பாஷை உண்டாகலாம்'

'மொழி'. வாவ்.

தமிழ் திரையுலகம் இயக்குனர் இமயங்களையும், மலைகளையும் கடந்து வெகுதொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது என என்னை நம்பவைத்த இன்னுமொரு படம் 'மொழி'.

பின்னிரவில் தூங்கிய அசதியோடு, இப்படி ஒரு 'சோகமான' படத்துக்குப் போகிறோமே என சலித்துக்கொண்டேன். படம் துவங்கியதிலிருந்து வீடு வந்து இதை எழுதிக்கொண்டிருக்கும்வரை ஏதோ மூளையை சலவை செய்து வைத்ததுபோல ஒரு புத்துணர்ச்சி. படம் சோகமா? இருக்கலாம் இந்தப் படத்தில் வரும் பாத்திரங்களைப்போல நாம் மகிழ்ச்சியா இருக்கிறோமா என எண்ணினால் நிச்சயம் சோகம் வரலாம்.

அழுத்தமான ஒரு கதைக்கு எதார்த்தமான, கதையோடு இழையோடும் இரசிக்கத்தக்க நகைச்சுவையோடு கூடிய காட்சியமைப்பை செய்வித்து பாத்திரங்களை வாழவிட்டிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன்.

அமெரிக்காவில் USA என ஒரு தொலைக்காட்சி சேனல் உண்டு . அவங்களோட விளம்பரக் குறிப்பா 'Characters Welcome' எனச் சொல்வாங்க. '(வித்தியாசமான)கதாபாத்திரங்களை வரவேர்க்கிறோம்' எனப் பொருள் கொள்ளலாம். அந்த சேனலில் வரும் நிகழ்ச்சிகள்பல வித்தியாசமான பாத்திரங்களை முன்வைத்திருக்கும்.

'மொழி', 'Characters Welcome'.

தமிழ் சினிமாக்களில் எளிதில் பார்த்துவிட இயலாத பாத்திரங்களை படைத்திருக்கிறார்கள்.

உலகையே அன்பொழுகப் பார்க்கும் ஹீரோ. முன்னாலெல்லாம் Angry young man ஹீரோக்கள பாக்கலாம். இப்போ well balanced young man தான் ஹீரோ(நான் போக்கிரி இன்னும் பாக்கல :). இந்தப் படத்து ஹீரோவும் அப்படித்தான்.

ஹீரோவ விடுங்க அவரவிட அவரது நண்பர் ரெம்ப சூப்பர். எப்போதும் சிரித்துக்கொண்டே, சிரிப்பூட்டிக்கொண்டே. பொதுவாக பலரும் சீரியசா எடுத்துக்கிற விஷயங்கள கொஞ்சம் சிரிப்பு கலந்த பார்வையில் எடுத்துக்கிறதுல கெட்டிக்காரர்.

காது கேளாத, வாய் பேச இயலாத ஹீரோயின். ஆனா இவரது இயலாமை இதுவல்ல. உடலின் இயலாமையை அவர் வென்றுவிட்டார். அது ஒரு பொருட்டே அல்ல. எல்லா உடற்திறனும் கொண்டவர்கள் சாதித்திராததையெல்லாம் இவள் சாதித்திருக்கிறாள். ஆனால் சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு அனுபவம் இவள் மனதை ஊனமாக்கிவிடுகிறது.

ஹீரோயினின் நண்பி. இவரின் பாத்திரம் ரெம்ப இயல்பா படைக்கப்பட்டிருக்குது. இவரின் வாழ்வில் ஏற்படும் ஒரு திருப்பம் கதாநாயகிக்கு மனமாற்றத்துக்கு வழிவகுக்குது.

இந்த நாலுபேரும் முக்கிய பாத்திரங்கள். இன்னும், கடுகடுப்பான காலனி செக்ரட்டரி, அவர் மகன் சாப்பாட்டு பிரியன், ஹீரோவை ஒருதலையா காதலிக்கும் காலணிப் பெண், 1984லேயே மனது உறைந்துபோன ஒரு மன நோயாளி பேராசிரியர்(டி.வி புகழ் பாஸ்கர்), ஹீரோவிடம் பூ விற்க வரும் வாய்பேச இயலாத, காது கேளாத சிறுமி இன்னும் பல பாத்திரங்கள் திரையில் மிளிர்கின்றன. Characters Welcome.

அன்னியர்களோடு நாம் கொள்ளும் உறவுகளில் அதிகபட்ச ஆழமானது என்ன? காதல்? திருமணம்? ஒரு மாற்று சிந்தனையாக சோதித்துப் பாருங்கள், நம் உறவுகள் அனைவருமே அன்னியர்கள்தான். இப்போதில்லை என்றாலும் ஒரு காலத்தில நமக்கு அன்னியர்களாய்த்தானிருந்திருக்கிறார்கள், நம் பெற்றோர்கள் உட்பட. ஆக நம் உறவுகள் எல்லாமே அன்னியர்கள், இதே பார்வையை கொஞ்சம் திருப்பினால் அன்னியர்கள் எல்லாருமே நம் உறவினர்களாயிருவாங்க. இதுபோன்ற சிந்தனையில் பின்னப்பட்டிருக்கும் உறவு வலைகளில் பாத்திரங்கள் பரிமளிக்கின்றன. அன்னியர்கள் என்பதைவிட, நாம் இன்னும் நண்பர்களாகாதவர்கள் என்பதே பொருத்தமானதாயிருக்கும்.

நிச்சயம் பார்க்கவேண்டிய படம் 'மொழி'. சோகமான படமல்ல இது. காட்சிக்கு காட்சி இயக்குனரின் brilliance தெரிகிறது. கடைசியில் வரும் பாடல் கொஞ்சம் சோர்வையளித்தாலும் படத்தின் மற்ற நல்ல அம்சங்களுக்காக இதை மன்னிக்கலாம்.

குறிப்பிடத்தக்கவகையில் வசனம் எழுதியவரை பாராட்டாமல் இருக்கமுடியாது. அருமையான வசனங்கள். பின்னணி இசையிலும், சில பாடல்களிலும் முத்திரை பதிக்கிறார் வித்யாசாகர். திடீரென கவனித்தேன் பின்னணியில் அழகிய ஜாஸ் இசை அளித்திருந்தார். வைரமுத்துவின் வரிகளில் 'காற்றின் மொழி' பாடல் மிகவும் அருமை.

இதுவரை நீங்கள் தமிழ் படமே பாத்திருந்ததில்லையென்றாலும் இந்தப் படத்த பார்க்காம இருக்காதீங்க. I highly recommend it. இந்தப் படத்த தவறா விளம்பரம் செய்யுறாங்கன்னு படுது. விளம்பரத்த பார்த்துட்டு சோகமான படம்னு நினச்சுட்டேன்.

சிகாகோவில் ரஜினி படத்துக்கு அடுத்ததாக அரங்கு நிறைந்து, அடுத்த காட்சிக்காக காத்திருந்து படம் பார்த்த மக்கள் கூட்டத்தை முதன் முதலில் பார்க்கிறேன்.

படம் முடிந்ததும் கைதட்டினேன், எல்லோரும் தொடர்ந்தனர்.

'வார்த்தயில்லாமலே பாஷை உண்டாகலாம்'. இது இசைக்கும் காதலுக்கும் மிகவும் பொருந்தும். மொழியில் இந்த இரண்டுமே அழகாக கையாளப்பட்டிருக்கின்றன.

இயக்குனருக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள். இப்படி ஒரு படத்தை தயாரித்து மிகவும் வித்தியாசமான நடிப்பில் ஒளிர்ந்திருக்கும் ப்ரகாஷ் ராஜுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். ஜோ, இத்தனை வருடம் நடித்ததின் பலன் மொத்தமும் இந்தப்படத்தில் தெரிகிறது.

'மொழி', பேசாம போய் பாருங்க (pun intended).

.

சிறில் அலெக்ஸ்