.

Monday, July 30, 2007

மைதாஸ் - திண்ணையில் வந்த சிறுகதை

மைக்கேல் தாஸ் பங்களாவிலிருந்து வெளிவந்தார் ஜேசுராஜன். 'இங்கேர்ந்து ஆட்டொவுல போணும்னா நாப்பது அம்பது ரூவாயாது ஆவும்' யோசித்தார்.

"தம்பி ரிக்சா வருமா?"

"எங்க சார்?"

"எக்மோர்."

"ஸ்டேசனுக்கா?"

"ம்."

"வாங்க."

அதுவரை சைக்கிள் ரிக்சாவிலேயே ஏறியதில்லை ஜேசுராஜன். துருபிடித்த பாகங்களில் எண்ணை வைத்து தேய்த்ததில் தீபாவளி காலையில் ஜட்டியுடன் சுற்றும் சிறுவர்களைப் போல ரிக்சா முழுவதும் எண்ணை வழிந்துகொண்டிருந்தது. ரிக்சாவின் இருக்கையில் போடப்பட்டிருந்த 'மெத்தை'யின் ஓட்டைவழியே தேங்காய் நார்த்தும்புகள் குத்திவிட்டதில் எரிச்சல் அதிகமானது. சில அரசு பேருந்துகளின் இருக்கைகளை நியாபகப் படுத்தியது. பார்க்க மெத்தைபோலத் தெரியும் ஒரு பொருள் இத்தனைத் திடமாக இருப்பது ஏமாற்றமளித்தது.

'விழாக் கமிட்டிக்காரனுவளுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாது. ஆட்டோ செலவுக்கு காசு தந்தா என்னா? டொனேசனக் கொண்டு குடுத்தா மட்டும் வாயப் பொழப்பானுவ' நொந்துகொண்டார்.

"இன்னா வெயிலு சார்?" ரிக்சாக்காரர் உரையாடலை ஆரம்பித்தார்.

"ஆமாப்பா."

'இவனோடு என்ன பேசுவது?' சலிப்புடன் நினைத்தார் ஜேசுராஜன்.

"எங்க ஊர்ல நல்ல மழ." ஏதாவது பேசலாமெனத் தொடர்ந்தார்.

"இன்னா ஊரு சார்?"

"தூத்துக்குடி பக்கத்துல..."

"மைக்கேல்தாஸ் ஊரா நீங்கோ?"

"ஆமா. மைக்கேல்தாசத் தெரியுமா?"

"ஆமா சார். அவர் வீட்டாண்டதான் நம்ம குடிச கீது. எம்பொஞ்சாதி மைக்கில்தாஸ் வூட்லதான் வேலைக்குப் போவ்து. ஒரு பத்து வர்சமாத் தெரியும் சார். அல்லாரும் ஒரே கோயில்தானே."

"நீ க்ரிஸ்டீனா?"

"ஆமா சார்." கழுத்திலிருந்த செபமாலையை இழுத்துக் காண்பித்தான். அதில் நூல் முழுவதும் அழுக்காயிருந்தது. சில மணிகள் உடைந்திருந்தன. சிலுவையில் பாதியில்லாமல் இருந்தது. "பேரு சிலுவப்பிச்ச. மாதாக் கோயில்ல வெள்ளக்கார சாமியாரிருந்தப்பவே எங்க தாத்தாவெல்லாம் க்ரிஸ்ட்டீனாயிட்டாங்க."

ஜேசுராஜனுக்கு கொஞ்சம் சலிப்பாயிருந்தது. வெயிலா, சாக்கடை நாற்றமா, வாகனப் புகையா, விழாக்கமிட்டியா அல்லது சிலுவைப்பிச்சையா எனத் தெரியவில்லை, ஏனோ அவருக்கு எரிச்சலாயிருந்தது.

"இன்னும் எவ்ளோ நேரமாவும்பா?"

"ஒரு பாஞ்சு நிமிஷமாகும் சார்."

'பதினஞ்சு நிமிஷம்ணா ஆட்டோவுலேயே போயிருக்கலாமே?' யோசித்தார்.

"மைக்கில் தாச இன்னா விஷ்யமா பாக்காந்த சார்?"

"எங்க ஊர் மாதாவுக்கு தங்கக் கிரீடம் செய்யுறோம். நன்கொடை வாங்கலாம்ணு வந்தேன். மகராசம்பா மைக்கில,் அள்ளிக் குடுக்கிறாரே"

மைக்கில் தாசைப் பற்றிய பேச்சு அவருக்கு திடீர் உற்சாகத்தை தந்தது.

"மாதாவுக்கு தங்க கிரீடமா?" பீடியை பற்றவைத்துக்கொண்டு சிறிது இருமினான் சிலுவைப்பிச்சை.

"ஆமா. எங்க ஊர் கோயிலக் கட்டி 30 வருசமாவப்போது. அதுக்குத்தான். ஊருக்குண்ணா அள்ளிக் குடுப்பாரு மைக்கிள்தாஸ். எங்க ஊர்ல அவர மைதாஸ்னுதான் சொல்வோம்."

"மைதாஸ்னா?"

"மைதாஸ் தெரியாதா?"

"இதெல்லாந் தெரிஞ்சா எதுக்குசார் நானு ரிச்சாவ்ல கெடந்து சாவ்றேன்?"

"மைதாஸ் கதை தெரிஞ்சுட்டா கலெக்டர் வேலையா கெடைக்கும்?"

"சர்தான். கலாஞ்சுட்ட போ". சப்தமாய் சிரித்தான் சிலுவைப் பிச்சை. பேச்சின் சுவாரஸ்யத்தில் மூலத்தைக் குத்தும் எரிச்சல்கள் மறக்க ஆரம்பித்திருந்தன ஜேசுராஜனுக்கு.

"மைதாஸ்ண்றது ஒரு கதையில வர்ற ஆளு."

"ஓகோ."

"அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்."

"எப்டி அது?"

"ஒரு தேவத மைதாசுக்கு என்ன வரம் வேணும்னு கேட்டுச்சாம்.. அவன் தான் தொட்டதெல்லாம் பொன்னாகணும்னு கேட்டானாம். அதுபோல சாதாரண ஒரு ஏழக் குடும்பத்துல பொறந்த மைக்கேல் தாஸ் இண்ணைக்கு இத்தன பிசினஸ், காரு பங்களான்னு கொடிகட்டி பறக்குறாண்ணா அவன் தொட்டதெல்லாம் பொன்னாகுதுண்ணுதானே அர்த்தம். இங்க்லீஸ்ல இத மைதாஸ் டச்னு சொல்வாங்க."

"நீ வாத்தியாரா சார்."

"ஹெட்மாஸ்டர்."

"அதான் சோக்கா கத சொல்ற. அப்பால என்னாச்சு?"

"ம். அப்புறம் என்னாச்சு மைதாஸ் தொட்டதெல்லாம் பொன்னாச்சு."

"என்ன கத பாத்தியா சார்? கஷ்டப்பட்டு ஒழச்சு சம்பாதிக்கிறமாதிரி எவ்னாவது கத எய்தி வெச்ருக்கானா சார். அல்லாம் ஏதோ மேஜிக்ல ஒசந்துரலாம்ணுதான் கத வெச்ருக்கான் சார்."

இப்படி ஒரு கோணத்தில் மைதாஸ் கதையை ஜேசுராஜன் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

"நான் முழுசா ஒனக்கு கத சொல்லலியே? வரம் வாங்குன மைதாஸ் தோட்டம், வீடுன்னு எல்லாத்தையும் தொட்டான். எல்லாம் தங்கமாயிடுச்சு. இன்னும் இன்னும்ணு என்னவெல்லாம் அவங் கண்ல பட்டுச்சோ எல்லாத்தையுந் தொட்டான் எல்லாமே தங்கமாய்ச்சு. சந்தோசத்துல சாப்ட உக்காந்தான்."

"புரியுது சார்? சாப்பாட்ட தொடங்காட்டியும் சாப்பாடும் அப்டியே தங்கமாயிருக்கும்."

"ஆமா. சாப்பாடு தங்கமானா எப்டி சாப்டுறது? பட்டினியாயிருந்தான். அவன் பொண்டாட்டியத் தொட்டான் அவ தங்கச் செலையானா, அவன் மகளத் தொட்டான் அவளும் தங்கமாயிட்டா. அப்புறந்தான் மைதாசுக்கு வாழ்க்கையில எது முக்கியம்ணு தெரிஞ்சுது."

சென்னையின் சேரியிலிருக்கும் ரிக்சாக்காரனுக்கும் நல்லொழுக்கப் பாடம் சொல்லித் தந்ததில் பெருமிதம் கொண்டார் ஜேசுராஜன்.

கொஞ்ச நேரம் மௌனமானான் சிலுவைப் பிச்சை.

'ஹ்க்கும் ஹா' கிண்டலாய் சிரித்தான்.

"என்னப்பா சிரிக்க?"

"நீ சொன்னது சர்தான் சார்."

"என்னது?"

"மைக்கில்ராஜ் மைதாசேதான்."

"ஆமா சொன்னேன்ல. அவர் தொட்ட.."

"அதச் சொல்லலா சார். மைக்கில்தாஸ் ஒயிஃப் தெரியுமா?"

"ப்ரின்ஸ் டீச்சர். நல்லாவேத் தெரியும். அத்தப் பொண்ணத்தான் கட்டிப்பேன்னு கட்டிகிட்டாரு."

"ம். அந்தம்மா எப்டி செத்துச்சு?"

"தூக்கு போட்டுகிச்சு."

"எப்டின்னு தெரியுமா?"

அத்தனை விபரமாகத் தெரிந்திருக்கவில்லை ஜேசுராஜனுக்கு.

"பணம் இருந்த சூட்கேஸ் ஒண்ண எடுத்துப் போட்டு அதுக்குமேல ஸ்டூல வெச்சி தூக்கு மாட்டிகிச்சு."

"அப்டியா?"

"நாந்தான்சார் போலீஸ் வரக்குள்ள அந்தப் போட்டிய தூக்கிவச்சேன்."

ஊரில் கேள்விப்பட்டிருந்தாலும் சிலுவைப் பிச்சை சொல்வதை முழுவதாக நம்ப இயலவில்லை.

"அப்புறம் அவர் பொண்ண?" சிலுவை கேட்டான்.

"அவளுக்கு என்னாச்சு ."

"அவர் பொண்ண யாருக்கு கட்டிக் குடுத்தாரு தெரியுமா?"

"அற்புதம் டிராவல்ஸ் பையனுக்கு."

"அந்த நேரத்துல மைக்கில்தாஸ் பிசினஸ் படுத்துட்டதால அந்தப் பையனுக்கு கெட்டி வச்சாரு. காசு சார். காசு. அற்புதத்தோட பையன் ஊதாரி சார். மைக்கில்தாசுக்குந்த் தெரியும் ஆனா அற்புதம் பிசினஸ்ல பைசா போடுறேன்னு சொன்னாங்காட்டியும் கல்லாணம் நடந்துச்சு."

"ஓகோ."

"மாதா செல மாறி இருக்கும் சார் அந்தப் பொண்ணு. கல்யாணத்துக்கப்பால ஒரு நாகூட சந்தோசமாயில்ல சார். எம் பொஞ்சாதி எங்கிட்ட வந்து அழும்.

நீ சொன்னது சர்தான் சார். மைக்கில்தாஸ் மைதாஸ்தான். பணம் சேக்குறதுலேயே குறியா இருந்தான்.. குடும்பத்த முள்சா மறந்துட்டான்."

அதற்குப்பின் அவனோடு பேச இயலவில்லை ஜேசுராஜனால். சிலுவைப் பிச்சையும் தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தான். வாகன இரைச்சலுக்கிடையே அவர்களுக்குள்ளிருந்த மௌனம் தெளிவாகக் கேட்டது.

"சார். ஸ்டேசன் வந்தாச்சு."

ரிக்சாவிலிருந்து இறங்கினார் ஜேசுராஜன்.

"எவ்வளவுப்பா?"

"வழக்கமா இர்வது ரூபா வாங்குறது. பாஞ்சு ரூபா தாங்க சார். ஒங்க ஊர் மாதாவுக்கு எம் பேர்ல 5 ரூபாய் டொனேசன்." சிரித்தான்

மைக்கிள்தாசின் ஐம்பதாயிரம் ரூபாய் செக் இருந்த கவர் கைப்பையில் இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டார் ஜேசுராஜன். அந்த வெள்ளைக் கவரில் இருந்த அழுக்கு அப்போதுதான் அவர் கண்ணில் பட்டது.

============================================


நன்றி: திண்ணை

Friday, July 27, 2007

சிகாகோ படங்கள் - Bubble at the Millenium Park - 2




Posted by Picasa

சிகாகோ படங்கள் - Bubble at the Millenium Park - 1




Posted by Picasa

சிகாகோ படங்கள் - தெருக்கள் 3




Posted by Picasa

சிகாகோ படங்கள் - தெருக்கள் 2




Posted by Picasa

சிகாகோ படங்கள் - தெருக்கள் 1




Posted by Picasa

சிகாகோ படங்கள் - Sears Tower மேலிருந்து




Posted by Picasa

சிகாகோ படங்கள் - Sears Tower 2




Posted by Picasa

சிகாகோ படங்கள் - Sears Tower




Posted by Picasa

சிகாகோ படங்கள் - நேவி பியர் (Navy Pier)




Posted by Picasa

Tuesday, July 17, 2007

iphoneல் சுட்டது

Apple iPhoneல சுட்ட சில படங்கள்.





iPhonல பாக்கிறதுக்கு இன்னும் அழகாகத் தெரியும் .. :)))

லில்லி மலருக்கு கொண்டாட்டம்...

நம்ம நண்பர்கள் நடத்தும் புகைப்படப் போட்டிக்காக சில படங்கள். (போட்டிக்கான படங்கள் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளன).

போட்டிக்கான முதல் படம்.
இரண்டாம் படம்
கொசுறு...



சிறில் அலெக்ஸ்