.

Friday, March 03, 2006

கீதாஞ்சலி - பூ

கீதாஞ்சலியிலிருந்து இன்னொரு பாடல்..


பூ.

இந்தப் பூவை பறித்து எடுத்துக்கொள்ளும்,
தாமதம் வேண்டாம்!
துவண்டு மண்ணில் விழுந்துவிடும்
என பயப்படுகின்றேன்.
நான் உன் பூமாலையில் இடம்பெறாமல் போகலாம்
ஆனால்,
உம் கரங்களால் நான் வலியேர்க்கும்
பெருமை பெறும் பொருட்டு என்னை ப் பறியும்

நான் உணரும் முன் இந்த நாள் முடிந்துவிடுமோ,
காணிக்கை தரும் நேரங்கள் ஓடிவிடுமோ
என பயப்படுகிறேன்
அதன் வண்ணங்கள் ஆழமானதாயில்லாதபோதும்,
குறைவாகவே மணம்வீசியபோதும்
இந்த மலரை
உம் பணிபுரியும்படி,
நேரம் இருக்கும்போதே, பறித்துவிடும்.

No comments:

சிறில் அலெக்ஸ்