.

Thursday, March 23, 2006

தடங்களை பதிக்கிறார்

கல்வி நிறுவனங்களில் தலமைப் பதவிக்கு சண்டை போட்டுக்கொண்டும், எப்ப வெளிநாடு போகலாம் என எண்ணிக்கொண்டும், தன் மந்தைகளை மட்டுமே மேய்த்துக்கொண்டும் பல பாதிரியார்கள் தம்மைச் சுர்றி வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே வாழ்நாளைக் கழித்துவிடுகிறார்கள்.

பாதர் - தமிழில் அருட்தந்தை - அடைக்கல ராசா மேற்சொன்ன விதிகளுக்கு விலக்காகத் தெரிகிறார்.

தான் இலங்கைத் தமிழர்களோடு வாழ்ந்த காலத்தில் கண்ட ஈழப் போரின் விளைவுகளைப் பற்றியும், போரின் சமூக (அரசியல்?) கூறுகள் பற்றியும் பதிவு ஒன்றை எழுதுகிறார்.

ஈழப் போர் பற்றி முழுமையான அறிவோ உணர்வோ எனக்குக் கிடையாது. இலங்கைத் தமிழ் நண்பர்களின் பதிவைப் படித்துப் பல தகவல்கள் அறியமுடிகிறது. இதோ இன்னுமொரு 'வெளியாள்' கோணத்தில் தமிழ் ஈழப் போராட்டத்தின் ஒரு முகம் காணக் கிடைப்பது பற்றி மகிழ்ச்சி.

தந்தை அடைக்கல ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தடங்கள் படிக்க இங்கே சுட்டவும்.

1 comment:

Arulvakku said...

தங்களின் அறிமுக பதிவிற்கு மிக்க நன்றி.

சிறில் அலெக்ஸ்