.

Sunday, February 04, 2007

தேன்200:ஜோ, தேவ், வெட்டிப்பயல்

பதிவுகளுக்குள் காலடி வைக்க உதவிய அருமை நண்பர். எங்க (பக்கத்து) ஊர்க்காரர். என்றைக்கும் ஊக்கம் தருபவர்.. கடற்புறத்தான் ஜோ ..

தேன் கூட திகட்டி விடும். ஆனால் சிறிலின் வலைத் தேன் திகட்டியதில்லை. தமிழ்மண முகப்பில் சிறில் அலெக்ஸ் என்று பார்த்தவுடன் தன்னையறியாமலேயே எலிக்குட்டி அதனை நோக்கி நகர வைத்தவர் நீங்கள். உங்கள் வலைத்தேனுண்ணும் வண்டாக இருப்பவர்களில் நானும் ஒருவன் என்பது மட்டுமல்ல, இந்த தேன் கூட்டுக்கு முதல் நாளிலிருந்து வரும் மூத்த வண்டுகளில் நானும் ஒருவன்.

அலைகள் பாறைகள் மணல்மேடுகள் என்ற வலைப்பக்கம் ஜெயமோகனையே இழுத்து வந்தது. அதன் பின் கதை, கவிதை, புனைவு, கட்டுரை, நகைச்சுவை என்று உங்கள் தளங்கள் விரிந்தது. இயல்பாகவே சிறிலுக்கு அமைந்த எழுத்துக் காய் பழமாக கனிந்தது. தனிப்பட்ட முறையில் நானும் உங்கள் போல அலைகள் பாறைகள் மணல்மேடுகளுக்கு நடுவில் வளர்ந்தவன் என்பதால் எனக்கும் சேர்த்துத் தான் நீங்கள் எழுதியது போல உணர முடிந்தது.

பல்வேறு போட்டிகளில் வென்று வந்து நாஞ்சில் நாட்டின் பெருமை காத்தீர். புதிது புதிதாக நீங்கள் தளங்களில் நுழைந்து முத்திரை பதிக்கும் போது 'அட! சிறில் இப்படியும் எழுதுவாரா?" என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பெருகியது.

சில தளங்களில் உங்களோடு கருத்து மோதியதுண்டு. தமிழ் மேல் நான் கொண்ட அதீதப்பற்றால் அது நிகழ்ந்தது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு பகிர்வை தொடர்ந்தது உங்கள் முதிர்ச்சியைக் காட்டியது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை நான் மறந்தவனில்லை என்றாலும் ,நம்மூர் காரர் பெருமையடையும் போது மகிழ்வதை மறைக்கத் தெரியவில்லை.

200 பதிவுகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

அன்பன்,
ஜோ

====================================

இணைய பார்ட்னர் தேவ்

தேன் பதிவு பற்றி சுருக்கமாய் சொல்லுவது என்றால்...
சிறிலின் மன ஓட்டங்களைப் பதிவு செய்யுமிடம் அது.. சில நேரங்களில் மனம் வருடும் காற்றாய் அமைந்திருக்கும் அவரது சில பதிவுகள்.. சில நேரங்களில் பெருங்காற்றாய் வீசும் அவர் கருத்துக்கள்.. இன்னும் சில நேரங்களில் புயலாய் கூட வீசும் விவாதங்களைக் கிளப்பும் அவர் பதிவுகள்...
எனக்குப் பிடித்தமானவை சிறிலின் நகைச்சுவைப் பதிவுகளே..

தேன் மழை இன்னும் பொழியட்டும்.. நனையக் காத்திருக்கிறோம்.. பார்ட்னர் 200க்கு என் வாழ்த்துக்கள்

====================================

வெட்டிப்பயல் பாலாஜி

பொதுவாக ஒரு புது பதிவை திரட்டியில் பார்க்கும் பொழுது அதில் என்னஎழுதியிருக்கும் என்று மனதில் ஒரு எண்ணம் எட்டி பார்க்கும். அது பொதுவாகஒரே மாதிரி பதிவாக கொடுக்கும் வலைப்பூவாக இருக்கும் பட்சத்தில் அந்தவலைப்பூ தொடர்ந்து படிக்க முடியாமல் போய்விடுகிறது. அல்லது ஒத்திபோடப்படுகிறது.

'தேன்'என்னை கவர்ந்து இழுப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அதுதான். உள்ளேவரும் பொழுது எந்த வகையான பதிவு என்று ஒரு எண்ணத்துடன் உள்ளே வரமுடியாது. ஆனால் எந்த வகையிலும் நம்மை ஏமாற்றாத பதிவாக இருக்கும். என்னைபெரும்பாலும் கவருவது நகைச்சுவை பதிவுகளும், கதைகளுமே.அந்த வகையில் தேன் இது வரை என்னை ஏமாற்றவில்லை.பொதுவாக அதிக சர்ச்சையில்லாத பதிவுகளை தருவதும் 'தேனின்' சிறப்பு.

எதிர்பார்ப்பு:எளிதாக ஆங்கிலம் பேச சொல்லி தர உதவிய இந்த பதிவு தொடராமல் போனது ஒரு வருத்தம்.பைபிள் கதைகளும் அதிக இடைவெளி இல்லாமல் கொடுத்தால் நலம்.மேலும் தங்களிடமிருந்து பல நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்!!!

3 comments:

ஜோ/Joe said...

உணர்வுகளை சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி சிறில்!

சிறில் அலெக்ஸ் said...

ஜோ,
உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். நன்றி நன்றி நன்றி.

:)

வெட்டிப்பயல் said...

நம்மையும் மதிச்சி கேட்டதுக்கு ரொம்ப நன்றிங்கோ :-)

பட்டையை கிளப்பவும்...

(இப்படி புதுமை எல்லாம் நீங்களே பண்ணா நாங்க எல்லாம் எப்படி பண்றதுனே தெரியலையே ;))

சிறில் அலெக்ஸ்