.

Tuesday, September 19, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்














'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.

சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.

பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.

மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.

ஆகாயம் ஒரு மாயை.

மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.

11 comments:

Sivabalan said...

சிறில்

சூப்பர்.. கலக்கிடீங்க..

ஜோ/Joe said...

சிறில்,
கவிதை கலக்கல்!

Anonymous said...

அருமையான கவிதை!
நீங்கள் எழுதினீர்களா?
பாராட்டுக்கள்.

அன்பரசன்.

சிறில் அலெக்ஸ் said...

பாராட்டுக்களுக்கு நன்றி.

கோவி.கண்ணன் [GK] said...

//ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.//

சிறில்...!
காகம் பறந்தாலும், மேகம் மிதந்தாலும் ஆகாயம் தான் அழுக்காக ஆகிப்போனதில்லை என்று தலைவர் பாடி இருக்கிறார்.

ஆகயத்தில் ஆவி உண்டு எனில் அது பரிசுத்த ஆவியாகத்தான் இருக்கும்.

//மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம். //

நல்லா முடிச்சிருக்கிங்க !

ஆனால் மடமை பூசிய மனங்களில் ஆகயம் இருக்கிறது என்று சொல்வது அவர்களுக்கு பெரிய மனசு இருப்பது போல் பொருள்படுகிறது.

சிறில் அலெக்ஸ் said...

//ஆகயத்தில் ஆவி உண்டு எனில் அது பரிசுத்த ஆவியாகத்தான் இருக்கும்.//

இன்னைக்கு சூழல்ல ஆகாயம் அழுக்காகிக் கிடப்பது உங்க தலைவருக்குத் தெரியலியா? :)

நான் சொல்லவந்தது மதம் சார்ந்த ஆகாயம்/சொர்க்கம் கடவளர் வாழும் இடம் எனும் பொருளில்..

அந்தமாதிரியான ஆகாயம் மடமை பூசிய மனங்களில்தான் இருக்கு... உங்க லேட்டஸ்ட் மதம் பற்றிய பதிவுக்கு ஏற்ற கவிதைன்னு நினைக்கிறேன்.

:)

கோவி.கண்ணன் [GK] said...

//இன்னைக்கு சூழல்ல ஆகாயம் அழுக்காகிக் கிடப்பது உங்க தலைவருக்குத் தெரியலியா? :)//

சிறில்...!
முதல் பின்னூட்டத்தில்
டிஸ்கி [:)] போட மறந்துட்டேன், சீரியஸ் ஆக சொல்லவில்லை :))

நீங்க செல்வனை சீண்டுகிறீர்கள் !
:)

இராம்/Raam said...

சிறில்,

உங்கள் இக்கவிதை முதல் பரிசுப் பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ராம்.
லேட்டா வந்தாலும் லேட்டச்ட்டா வந்த ரிசல்ட்.
தமிழ் சங்கத்துக்கு நன்றி.

மதுமிதா said...

மனமார்ந்த வாழ்த்துகள் சிறில்

சிறில் அலெக்ஸ் said...

மனமார்ந்த நன்றிகள் மதுமிதா

:)

சிறில் அலெக்ஸ்