.

Friday, September 08, 2006

மீண்டும் அலைகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் அலைகள் பாறைகள் மணல்மேடுகளை மறுவிஜயம் செய்தேன். சில பெரிய தலைகளின் பழைய பின்னூட்டங்களை படித்து மகிழ்ந்தேன். புதிதாய் வந்த வலைப் பதிவர்கள் பார்த்திருப்பார்களோ எனும் சந்தேகத்தின்பேரில் இதோ மீண்டும் அறிமுகம்.

அலைகள்...பாறைகள்...மணல்மேடுகள்

முதல் அத்தியாயத்திலிருந்து துவங்கவும்.

முட்டத்தை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதலாம் என நினைக்கிறேன். கதத விவாதத்தில் பங்குபெற யாருக்கேனும் விருப்பமுண்டா?

6 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//முட்டத்தை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதலாம் என நினைக்கிறேன். கதத விவாதத்தில் பங்குபெற யாருக்கேனும் விருப்பமுண்டா?//

ரொம்ப ரொம்ப நல்ல விதயம்!

கதைவிவாதம் பற்றியெல்லாம் ரொம்பத் தெரியாது. ஆனா, படிச்சுக் கருத்து சொல்ல நான் தயார். :)

மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

-மதி

ஜோ/Joe said...

//முட்டத்தை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதலாம் என நினைக்கிறேன். கதத விவாதத்தில் பங்குபெற யாருக்கேனும் விருப்பமுண்டா?//

விருப்பம் நிறைய இருக்கிறது .ஆனால் நேரம் தான் இல்லை .இருந்தாலும் வேறு ஏதாவது விதத்தில் உங்களுக்கு உதவி செய்ய முடியுமென்றால் கண்டிப்பாக முயல்வேன்.

நாவல் எழுதும் முயற்சிக்கு ஆதரவும் வாழ்த்துக்களும்.

ஆவி அம்மணி said...

// சில பெரிய தலைகளின் பழைய பின்னூட்டங்களை படித்து மகிழ்ந்தேன்.//

இதற்கும் மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

சிறில் அலெக்ஸ் said...

மதி, ஜோ,
ஆதரவுக்கு நன்றி. நிச்சயம் உதவி கேட்பேன் இன்னொருவரும் உதவ முன்வந்துள்ளார். நிச்சயம் நாடுவேன். நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

ஆவி,
இது பெரிய தல மட்டுமில்ல அழுகின தல கூட..

'கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?' கதைகளுக்கு ஏற்ற படம்.

:)

ஆவி அம்மணி said...

கோ.வி 65 வேணும்னா இங்க வாங்க!

சிறில் அலெக்ஸ்