.

Friday, March 10, 2006

வலைப் பதிவர் பட்டி மன்றம்

மதங்கள் தேவையா தேவையில்லையா? என்கிற தலைப்பில் பட்டிமன்றமொன்று நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

அணிக்கு இருவர் என்று எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் மின்னஞ்சல் மற்றும் தன் அணியின் விவரங்களுடனும் எந்த தலைப்பில் எழுதப் போகிறீர்கள் என்றும் விவரங்களை cvalex at yahoo விற்கு அனுப்பவும்.

வெற்றிபெறும் இரு அணிகளுக்கு பரிசு உண்டு.

என்னோடு மதிப்பிட இன்னுமொரு நடுவரும் தேவை யாராவது நடுவராயிருக்க விரும்பினால் அவர்களும் மின்னஞ்சலனுப்பவும்.

முதலில் ஒவ்வொரு தலைப்பிலும் இரு அணிகள் பதிவிட அடுத்து வருபவர்கள் அதற்கு எதிர் கருத்தையும் புது கருத்துக்களையும் வைக்கலாம்.

தலைப்பு பற்றிய அபிப்பிராயங்களும் வரவேற்க்கப்படுகின்றன.

4 comments:

Nithya said...

Do the entries need to be in tamil? Can they be in english?

சிறில் அலெக்ஸ் said...

நல்ல கேள்வி.. :)
தலைப்பு தமிழ் சம்மந்தப் பட்டதாய் இல்லததால் ஆங்கிலமும் OK.

Since I do not know any other language only Tamil and English will be allowed.

ஜோ/Joe said...

"மருத்துவன் நோயற்றவனுக்கன்று ,நோயுற்றவனுக்கே தேவை"- இயேசு.

இது மதத்துக்கும் பொருந்தும்.

Anonymous said...

பட்டிமன்றமாக இல்லாது பேச்சுப்போட்டி போன்று வலைப்பதிவுப்போட்டியாக வாராவாரம் நடத்தலாம்.. பரிசு அவசியம் இல்லை..
நீங்கள் இல்லையென்றாலும் காசியாவது இதைப் பரிசீலிப்பார் என நம்புகிறேன்.
ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தலைப்புகளில் பதிவர்கள் எழுதுவதன் மூலம்
நமக்குப் பல விஷயங்கள் கிடைக்கும். தவிர, ஒரே மாதிரியான பதிவுகளுக்குப் பதிலாக வெரைட்டியாக விதவிதமாக நம் ஆட்களை எழுத வைக்கமுடியும்..ஆனால் ஒரு விஷயம்... தலைப்புகள் மறுபடியும் 'அறைத்த மாவாக' இல்லாமல் புதுமையாகவும்
விதவிதமான புலங்களைப் பற்றியதாகவும் கொடுக்கப்படவேண்டும்...
இதன் மூலம் தமிழ்மணத்துக்கு புதிய ரத்தம் பாய்ச்சமுடியும்...

சிறில் அலெக்ஸ்