.

Thursday, June 21, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் - 9

9 எனக்கு ராசி நம்பர். அதான் 9வது பாகம் எங்கிட்ட வந்திருக்கு. சிந்தாநதி சிம்பிளா ஒரு ஆரம்பத்தப் போட்டு நடையக் கட்டிட்டாரு அதன் பிறகு கதையின் கேரக்டர்கள போட்டு பதிவர்கள் பொம்மலாட்டம் நடத்திட்டு வர்றாங்க. எங்க போய் முடியப் போகுதோ. கதையின் முந்தைய பாகங்கள் இதோ..

சிந்தாநதி'யின் ஞாபகம் -1
வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2
CVR'ன் ஞாபகம் 3
ஜி'யின் ஞாபகம் - 4
இம்சை அரசியின் ஞாபகம் - 5
வைகை ராமின் ஞாபகம் - 6
தேவின் ஞாபகம் - 7
ஜி. ராவின் ஞாபகம் - 8

முன்கதை சுருக்கம்
ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற...நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.
கதை மீண்டும் காத்திருக்கும் பொன்னுசாமிக்கு திரும்புகிறது. அவரை வினோத் சந்திக்கிறான். காவேரியும் அவர் பேத்தியும் இருக்குமிடத்தொற்கு கூட்டிச் செல்வதாக அவரை காரில் அழத்துச் செல்கிறான் வினோத்.

பார்த்த நியாபகம் இல்லையோ பாகம் - 9

கார் வயல்வெளிச் சாலையத் தாண்டி பிரதான சாலைக்கு வந்தது. குளிரூட்டியை இயக்கினான் வினோத். காருக்குள் மின் விசிறியின் மெல்லிய சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எண்ணற்ற கேள்விகள் நிறைந்த மௌன இடைவெளியில் வினோத்தும் பொன்னுசாமியும் வெகுதொலைவில் பிரிந்திருந்தனர்.

"மாமா." மௌன இடைவெளியின்் மோனக் கூக்குரலாய் அவன் விளிப்பு ஒலித்தது. சின்னசாமி அதற்குள் உறங்கிவிட்டிருந்தார். 'இரவு தூங்கியிருக்க் மாட்டார்' வினோத் நினைத்தான். நினைவுகள், தன் வாழ்வை மாற்றிப்போட்ட அந்த நாளை நோக்கித் திரும்பின.

"வினோத் என் ஃப்ரெண்ட் காவேரிகிட்ட வசந்த் ப்ரொப்போஸ் பண்ணப் போறான்."

"நிஜமாவா? வாவ்."

"என்ன நல்ல பொருத்தம் தெரியுமா. நம்ம விட அவங்கதான் ஐடியல்."

"அது எனக்கு அப்பவே தெரியுமே." சிரித்தான்.

"டேய். இப்ப நல்ல மூட்ல இருக்கேன் சண்டைய கெளப்பாத. நாளைக்கு ஒரு காதல் உருவாகப் போகுது. வசந்தப் பாத்தாவது ரொமாண்டிக்கா இருக்கிறது எப்டீன்னு கத்துக்க."

"ரொமான்ஸ் ஃபார் இடியட்ஸ் புக் எழுதியிருக்காரா அவரு?"

"இடியட்டுன்னு ஒத்துகிட்டியே."

"இல்லண்ணா ஒன்ன கா.... ஏ கிள்ளாத? நாம நாலு வரி பேசுனா அஞ்சாவது வரி சண்டதான்."

"நாளைக்கு ஈவினிங் ஷோ. சத்யம் காம்ப்ளெக்ஸ். காதலன். மறக்காம வா."

"ரெண்டுபேர் அசடு வழியுறதப் பாக்க கட்டாயம் வருவேன்."

அடுத்த நாள்.

"டேய் மச்சான் நான் லெட்டுடா ஏற்கனவே. உமாவப் பத்தி ஒனக்குத் தெரியும்ல. ப்ளீஸ் மச்சான் வண்டி வேணும்டா."

"டேய் பக்கத்துலதான் இருக்கேன் வந்துருவேண்டா?"

'என் பைக்க கேக்குறதுக்கே கெஞ்ச வேண்டியிருக்குது!'. இரவல் வாங்கிப்போன பைக் வந்து கிளம்புவதற்குள் லேட் ஆகியிருந்தது. உமா சொன்ன இடத்திற்கு வரும்போது அங்கே...அது... 'இவளா! இந்தக் காவேரியா உமா சொன்ன காவேரி?'

உமா காவேரி புராணம் பாடும்போதெல்லாம்... அவள் கவிதைகளை வாசித்தபோதெல்லாம் எப்படி புரியாமல் போனது என நொந்துகொண்டான் வினோத். தன் தோழியை மீண்டும் கண்டுகோண்டதில் மகிழ்ந்தான். 'உமாவுக்கு செம சர்ப்ரைஸ் இண்ணைக்கு.'

வசந்த் தந்த பூவைக் கையில் ஏந்தியபடி வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் காவேரி. வினோத்தா வசந்தா யாரிடம் முதலில் பேசுவது?
"வினோத்... ஏ வினோத்...எப்டி இருக்க ஆளே மாறிட்ட."

எதிரே வரும் வினோத்தை நோக்கி அடியெடுத்து வைத்தாள். கையிலிருந்த பூ ரோட்டில் விழுந்தது. எடுக்க கீழே குனிந்தவள் செருப்பு தடுக்கி ரோட்டில் விழுந்தாள். "காவேரீ..." வசந்த, உமா, வினோத்தின் கூக்குரலின் மத்தியில் தண்ணி லாறி காவேரியை இடித்து தூக்கிப் போட்டது.

ஐ.சி.யுவில் ஒரு வாரம் கழிந்தது. காவேரி சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தாள்.

டாக்டர் வசந்த், உமா, வினோத்தை அழைத்திருந்தார். அறையில் இரு டாக்டர்களும் நண்பர்கள் மூவரும் உட்கார்ந்திருந்தனர்.
"உங்கள்ல யாராவது காவேரியோட ரிலேட்டிவா?" டாக்டர் கேட்டார்.

"இல்ல. நான் ரூம் மேட். க்ளோஸ் ப்ரண்ட். வினோத் அவளோட ஸ்கூல் ஃபிரெண்ட். வசந்த் அவளோட பாய் ஃப்ரண்ட்." உமா சொன்னாள்.

"ம். பைத வே. இவர் டாக்டர் மாயன். சைக்கியாட்ரிஸ்ட். பொதுவா தலையில அடி பட்டவங்களுக்கு சைகியாட்ரிக டெஸ்ட் செய்வோம்."

"எனிதிங் ராங்்்? அவ நார்மலாத் தெரியுறாளே?" வசந்த் சொன்னான்.

"ஆமா. உடல் ரீதியா ஷீ லுக்ஸ் நார்மல்."

"அப்டீன்னா?"

"ஷீ ஹாஸ் பார்ஷியல்் அம்னீஷியா."

மூவரும் உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர்.

"பழசு பலதும் அவங்களுக்கு நியாபகமில்ல. அவங்க அப்பா பேரக் கூட ஒரு சில நேரந்தான் நியாபகம் வச்சிருக்காங்க. கொஞ்சம் டிபிக்கல்ட் கேஸ்தான்."

"கடவுளே." உமா கண்கள் நிறைந்திருந்தன.

"அவ நினைவுல இருக்கிற ஒரே ஆள் வினோத்தான்."

"வினோத்தா?" வசந்த் அதிர்ந்துபோனான்.

"யெஸ். பள்ளித் தோழன் வினோத். சின்ன வயசுல அவளோட அப்பாவுக்கடுத்ததா நெருங்கிப் பழகிய முதல் ஆண் வினோத். அது அவளுக்குள்ளால ஆழமான பாதிப்ப ஏற்படுத்தியிருக்கு. வினோத்தோட காதல ஏத்துக்காமப் போனதப் பத்தி ரெம்ப பீல் பண்ணியிருக்கா. அவளோட கவிதகள்ல அவ ஏங்கி அழக்கூடிய நட்பு வினோத்துடையதுதான்." டாக்டர். மாயன் தொடர்ந்தார்்.

"ஆனா பிரச்சன வினோத்த பிரிஞ்சதோ அவனோட நினைவுகளோ இல்ல? இப்ப அவ வினோத்தான் தன் காதனண்ணு நம்பிகிட்டிருக்கா. சொல்லப்போனா வினோத்த பிரிஞ்சதுலேர்ந்தே அவனோட ஒரு கற்பனை உலகத்துல வாழ்ந்துகிட்டிருக்கா. இப்ப அந்த கற்கனைகள் நிஜமாயிடுச்சு. வினோத் இஸ் ஹெர் பாய் ஃப்ரெண்ட். இத அழமா நம்புறா."

"வசந்தோட நல்லா பழகினாளே டாக்டர்." உமா குழப்பத்துடன் கேட்டாள்.

"ம். அது வினோத்துடைய குணங்கள் வசந்த்கிட்ட இருந்ததால இருக்கலாம். அல்லது வசந்த வினோத்தா அவ கற்பனை செய்திருக்கலாம். ஷி இஸ் எ க்ரியேட்டிவ் பெர்சன். சிலருக்கு கற்பனைசக்தி தங்களோட தினசரி பிரச்சனைகளை சமாளிக்கவும், மனத ஸ்திரமா வச்சிருக்கவும் உதவுது."

"உங்க மூணுபேரப் பத்தியும் ஓரளவு எனக்கு தெரிஞ்சதால டாக்டர் மாயன வச்சி பேசலாம்ணு முடிவு செஞ்சேன்."

"இதுக்கு ட்ரீட்மெண்ட்."

"லாங் டெர்ம். ரெம்ப நாள் ஆகலாம். ஆனா அதுவரைக்கும் காவேரியோட கற்பனை உலகத்த கலைக்கக் கூடாது. உண்மைகள அவளால ஜீரணிக்க முடியாமப் போயிடுச்சுண்ணா. இட் மைட் பி ஃபேட்டல். உயிரே கூடப் போகலாம்".

"அப்ப..?"

"அவள வினோத்தால.. வினோத்துடைய காதலால மட்டுந்தான் காப்பாற்ற முடியும். காவேரிக்கு இப்ப இருக்கிற முழுமையான நினைவு அல்லது கனவுண்ணும் சொல்லலாம், வினோத்த பத்தினதுதான்."

உமா வினோத்தின் கையைப் பற்றி அழ ஆரம்பித்தாள். வினோத் அவளை மெலிதாய் அணைத்திருந்தான். வசந்த் கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்திருந்தது.

==================================================>>>>>>>>

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்ததாக பத்தாவது பகுதியை எழுத சேவியரை அழைக்கிறேன்.

அன்புடன்,
சிறில் அலெக்ஸ்

3 comments:

CVR said...

ஆகா!!!
ரொம்ப நல்ல திருப்பம் கதையில!
இந்த கதை மேல மேல விருவிருப்பாயிட்டே போகுது!!
வாழ்த்துக்கள் சிறில் அண்ணா!! :-)

Anonymous said...

:)

Kathayai vechu ellaarum Zig Zag vilayaadareengappaa...

10m part itho !!!

http://xavi.wordpress.com/2007/06/22/10/

G.Ragavan said...

என்ன சிறில் காவேரிய லாரிக்குள்ள தள்ளி விட்டுட்டீங்க :)))) இருங்க நீங்கதான் தள்ளி விட்டீங்கன்னு எந்தக் கோர்ட்டுல ஏறியும் சாட்சி சொல்வேன். :)

கதை பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்கு.

சிறில் அலெக்ஸ்