.

Thursday, January 19, 2006

என்பும் உரியர்..

உங்கள் உடம்பிலிருந்து ஒரு உயிருள்ள எலும்புத்துண்டை எடுத்து அதன் வளர்ச்சியை நிறுத்திவிட்டு அதில் மோதிரமோ, வளையலோ மற்ற ஆபரணங்களோ செய்யும் முறை பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமணமோதிரமாக இதை செய்துதர ஒரு தம்பதி ஆர்டர் செய்துள்ளனர்.

இதுவரை இறந்துபோனவர்களின் எலும்புகளிலிருந்த்துதான் ஆபரணங்கள் செய்யப்பட்டன. இப்போ உயிருள்ள அதுவும் உங்க சொந்த எலும்பில் ஆபரணம்.

இதைத்தான் வள்ளுவர் "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"ன்னு சொன்னார்போல.

உங்க காதலி அப்பா "எலும்ப உருவிடுவேன்னு" சொன்னா, "தங்கம் வாங்க காசில்லையா?" ன்னு கேக்கலாம்.

2 comments:

ஜோ/Joe said...

சிறில்,
உங்கள் முட்டம் பற்றிய வலைப்பதிவு குறித்து இன்றைய தினமலரில் வந்துள்ளது
http://www.dinamalar.com/2006jan20/flash.asp

வாழ்த்துக்கள்!

சிறில் அலெக்ஸ் said...

நன்றி ஜோ.
பார்த்தேன் மகிழ்ந்தேன். உங்கள் ஊக்கமும்தான் என்னை மேலும் எழுதவைத்தது. நன்றி.

சிறில் அலெக்ஸ்