Friday, July 27, 2007
Tuesday, July 17, 2007
லில்லி மலருக்கு கொண்டாட்டம்...
நம்ம நண்பர்கள் நடத்தும் புகைப்படப் போட்டிக்காக சில படங்கள். (போட்டிக்கான படங்கள் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளன).
போட்டிக்கான முதல் படம்.
இரண்டாம் படம்
கொசுறு...


போட்டிக்கான முதல் படம்.

இரண்டாம் படம்

கொசுறு...



Thursday, July 12, 2007
சுசிலாவைக் கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டேயிருங்க...
பி. சுசுலா அவர்களின் எத்தனையோ பாடல்கள மெய், பொய் எல்லாம் மறந்து கேட்டிருப்பீங்க. 'நாளை இந்த வேளை பார்த்து' எனக்கு மிகவும் பிடித்த பாடல். அவங்க பாடல கேட்டதோட இல்லாமா, கேள்வியும் கேட்க வாய்ப்பு தந்திருக்கார் நம்ம ராகவன். கீழ உள்ள படத்துல மெதுவா, அவங்களுக்கு வலிக்காம ஒரு சுட்டு சுட்டி ராகவன் என்ன சொல்றாருன்னு கேளுங்க.

வருமானவரி டிஸ்கி- இந்த விளம்பரத்துக்கு காசு வாங்கப்படவில்லை...

வருமானவரி டிஸ்கி- இந்த விளம்பரத்துக்கு காசு வாங்கப்படவில்லை...
Friday, July 06, 2007
பிறந்த நாள் பரிசு
Tuesday, July 03, 2007
வருத்தமளிக்கும் வலைப்பதிவுகள்?
அன்பு பதிவர் உலகமே..
கீழுள்ளதைப் படியுங்கள். வலைப்பதிவுகள் பற்றிய பொதுவான அபிப்பிராயங்கள் என்ன என்பதை உணர ஒரு வாய்ப்பு.
இத்தனை அருமையான சிந்தனைகளும், படைப்புக்களும் இருந்தும் நம்மை பலரும் கவனிக்காமல் இருப்பதன, வெறுப்பதன்் காரணங்களை ஆராய ஒரு வாய்ப்பு. கருத்துக்கும் எழுத்துக்கும் தொடர்பில்லாமல் நாம் பலநேரங்களில் செயல்படுவதன் விளைவு இது.
நாயே பேயே எனத் திட்டுபவர் சமத்துவம் பேசுவது நகை முரணா இல்லை வெறும்் முரணா?
இனி நண்பரின் ஆதங்கம்.
இணையத்தில் அடி வாங்காமல் இருக்க.....
2. திமுகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் - நீங்கள் தமிழின துரோகி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.அல்லது நீங்கள் அதிமுக என்று சொல்லி மேலும் அவமானப்படுத்திவிடுவார்கள்.
3. நதி நீர் பிரச்சனை கிருஷ்ணா - ஆந்திர பக்கமும் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் ஆந்திராகாரர் என்று முத்திரை இடப்படுவீர்கள். முல்லைபெரியாறு - கேரள பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் மலையாளக்காரர் என்று அடி வாங்குவீர்கள் காவிரி - கர்நாடக பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதவும் வேண்டுமா. அடி வாங்க ஆசையா
4. ஹிந்தி ஹிந்தி படித்தால் நல்லது பயனுள்ளது இப்படியெல்லாம் எழுதினால் நீங்கள் வடநாட்டுக்காரர். தமிழை அழிக்க முயலுபவர். வடநாட்டவரின் கைக்கூலி.
5. எழுத்தாளர் ஒரு எழுத்தாளரை பாராட்டி பதிப்போ வலைப்பூவிலோ எழுதுவதற்கு முன்பு அவர் என்ன சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அது தெரியாமல் எழுதி மாட்டிக் கொள்ளாதீர்கள். அவர் சாதி பெரும்பான்மையாக இருந்தால் அவர் கதை நல்ல கதை என்று எழுதி தப்பித்துக் கொள்வது நல்லது.
6. திரைபடம் எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர் ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம்
7. இதிகாசம்-புராணம் ராமாயணம் மஹாபாரதம் பற்றி முடிந்த அளவு தவிர்க்கவும். அது ஆரியர்கள் எழுதியது. அதனால் திராவிடர்களுக்கு பிடிக்காது. ஏன் வம்பு. நீங்கள் ஐயோ நான் திராவிடன் தான் இருந்தாலும் ராமாயணம் பிடிக்கும் என்று சொன்னால் உங்கள் Birth Certificate ஐ இணையத்தில் போடுமாறு கேட்பார்கள்.
8. பிறப்பாலா வளர்ப்பாலா நீங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதற்கு முன்பு வலைப்பதிவர் பிறப்பால் தமிழரா வளர்ப்பால் தமிழரா என்று பார்த்து பிறகு பின்னூட்டம் இடவும். ஒருவேலை வளர்ப்பால் தமிழராக இருந்தால் உங்களுக்கும் ஆப்புதான்.
9. ஷ ஜ ஸ க்ஷ இது போன்ற வடமொழி எழுத்துக்களை எழதினால் நீங்கள் தமிழில் கலப்படம் செய்கிறீர்கள். சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறீர்கள். தமிழ் ஆவலர்களால் உங்களுக்கு கண்டனம் வரலாம். அதனால் ஷாஜஹானை சாசகான் என்றும் கமலஹாசனை கமலகாசன் என்றும் ரஹ்மானை ரகுமான் என்றும் கிருஷ்ணனை கிருட்டிணன் என்றும் குறிப்பிடுவது நல்லது.
10. அடிவாங்காமல் தப்பிக்க எல்லா இடத்திற்கும் போய் வாருங்கள். படித்து வாருங்கள். அநாவசியமாக கருத்தை எழுதி கெட்ட பேர் வாங்காதீர்கள்.
11. பின்னூட்டம் பின்னூட்டம் இடவேண்டும் என்று கை அரித்தால்- ஒருவேளை நீங்கள் கருத்துக்களங்களில் உறுப்பினராக இருந்தால் விவாகாரமான தலைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை. அந்த தலைப்பிற்கு சுமார் 10 பின்னூட்டம் வரை காத்திருங்கள். பிறகு அதில் பெரும்பான்மை அந்த தலைப்பிற்கு ஆதரவாக பேசினால் நீங்களும் அதற்கு ஆதரவாக எழுதிவிட்டு போவது நல்லது. நடுநிலையுடன் பேசுகிறேன் பேர்வழி என்று எதையாவது எழுதி வம்புக்கு ஏன் போகிறீர்கள்.
12. தினமலர் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை மேற்கோள் காட்டினால் நீங்கள் ஆரிய கைக்கூலி. தினகரன் தமிழ் முரசு மேற்கோள் காட்டினால் நீங்கள் திராவிட கைக்கூலி. இணையத்தில் எது பெரும்பான்மை என்பதை பார்த்து நடந்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்
13. சோ என்று தெரியாமல் கூட எழுத வேண்டாம். அச்சோ என்று எழுத நினைத்தால் அச் என்று நிறுத்திக் கொள்ளுதல் நல்லது
14. முடிந்த அளவு தமிழ் நாடு செய்வதெல்லாம் சரி தமிழர்கள் செய்வது எல்லாம் சரி என்றே எழுதுங்கள். நம் பக்கமும் தவறு இருக்கிறது என்று சொல்லி துரோகி என்று முத்திரைக்கு ஆளாகாதீர்கள்.
15. கடவுள் கடவுளை பற்றி எழுத நினைத்தால் சைவ மதத்தை பற்றி மட்டும் எழுதினால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. சிவனை பற்றி மட்டும் எழுதினால் நல்லது. வேறு கடவுள்களை எழுதினால் அவர்கள் ஆரிய கடவுள் என்பதனால் நீங்கள் ஆரியர் என்ற அவபெயருக்கு ஆளாக நேரிடலாம். முடிந்தால் கடவுளை பற்றி எழுதுவதையும் மதங்களை பற்றி எழுதுவதை பற்றியும் தவிர்க்கலாம். கேட்கமாட்டேன் என்றால் அனுபவியுங்கள்
16. ஆக நீங்கள் அரசியல் எழுதினால் கட்சிக்காரர் என்றும் நீங்கள் இந்தியராக நினைத்து எழுதினால் பிற மாநிலத்தவர் என்றும் நீங்கள் கடவுளை பற்றி எழுதினால் இந்த மதத்தவர் என்றும் அதிலும் குறிப்பிட்ட கடவுளை பற்றி எழுதினால் இந்த இனத்தவர் என்றும் பார்த்து பார்த்து தாக்குதல் நடத்த ஒரு கூட்டம் கணினி படித்து தமிழ் பயின்று இணையத்தில் அலைகிறது. அவர்களுக்கு வேலையே இது போன்ற பதிவுகளை தேடிப்பிடித்து அசிங்கப்படுத்துவது தான்.
17. போகக்கூடாத இடங்கள் 1. மறைந்த தலைவர்களை பற்றி அசிங்கமாக எழுதும் வலைப்பூக்கள் 2. தமக்கு பிடிக்காத கருத்தை கூறும் வலைஞர்களின் பிறப்பை பற்றியும் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக எழுதும் வலைப்பூக்கள் 3. தமிழை எத்தனை கேவலப்படுத்தமுடியுமோ அத்தனை கேவலமான வார்த்தைகளை வரிக்கு நாலாக பயன்படுத்தும் தளங்கள்.
18. நான் செய்த தவறு நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். முதலில் தமிழ் இணையதளங்களை கண்ட மகிழச்சியில் எல்லா இடங்களிலும் நிஜ பெயர் விபரம் கொண்டு பதித்துக் கொண்டேன். தமிழ் இணைய உலகம் மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பதால் Anoymous ஆக இருப்பதே நல்லது. எனக்கு இப்போது முழுவதும் நனைந்துவிட்டதால் முக்காடு எதற்கு என்று விட்டுவிட்டேன். 19. மதநல்லிணக்கமா - ஹா ஹா நீங்கள் ஒரு மதத்ததில் இருந்து மற்ற மதத்தையோ பாராட்டி பேசினால் உங்களுக்கு இருமுனை தாக்குதல் தங்கள் மதத்திலிருந்தும் மற்ற மதத்தவர்களிடமிருந்தும் வரும். உங்கள் மதத்தவர்கள் - மத துரோகி என்றும் மற்ற மதத்தவர்கள் - உளவாளி என்றும் உங்களை சொல்லக்கூடும். இதே ஃபார்முலா சாதிக்கும் பொருந்தும்.
19.. கொசுறு - எதை செய்தால் இணையத்தில் பிரபலம் அடையலாம். நீங்கள் ஏதோ நல்ல கவிதை கட்டுரை கதைகள் எழுதினால் இணையத்தில் பிரபலம் அடையலாம் என்று எண்ணியிருந்தால் நீங்கள் ஒரு முட்டாள். வலைப்பூவை துவங்கி மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகள் அதிகம் கொண்ட பதிப்புகளை இடவேண்டும். அதை தமிழ் வலைப்பூ திரட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். பிறகு அவர்களே அதை பிரபல படுத்திவிடுவார்கள்.
பரிமாற்றம் தொடரும்.....
பி:கு - நண்பரின் அனுமதியின்றி இதை வெளியிடுகிறேன். அவருக்கு ஆட்சேபமிருப்பின் மின்னஞ்சல் செய்யலாம்.
மேலும் சில ஆதங்கங்களை அவரது பக்கத்திலேயே சென்று படியுங்கள்
கீழுள்ளதைப் படியுங்கள். வலைப்பதிவுகள் பற்றிய பொதுவான அபிப்பிராயங்கள் என்ன என்பதை உணர ஒரு வாய்ப்பு.
இத்தனை அருமையான சிந்தனைகளும், படைப்புக்களும் இருந்தும் நம்மை பலரும் கவனிக்காமல் இருப்பதன, வெறுப்பதன்் காரணங்களை ஆராய ஒரு வாய்ப்பு. கருத்துக்கும் எழுத்துக்கும் தொடர்பில்லாமல் நாம் பலநேரங்களில் செயல்படுவதன் விளைவு இது.
நாயே பேயே எனத் திட்டுபவர் சமத்துவம் பேசுவது நகை முரணா இல்லை வெறும்் முரணா?
இனி நண்பரின் ஆதங்கம்.
இணையத்தில் அடி வாங்காமல் இருக்க.....
தமிழ் இணைய உலகத்தில் சுமார் 9 மாதங்கள் சுற்றிய பிறகு கற்றுக் கொண்ட சில விஷயங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் அடி வாங்காமல் இருக்க இதை பின்பற்றலாம்.
2. திமுகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் - நீங்கள் தமிழின துரோகி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.அல்லது நீங்கள் அதிமுக என்று சொல்லி மேலும் அவமானப்படுத்திவிடுவார்கள்.
3. நதி நீர் பிரச்சனை கிருஷ்ணா - ஆந்திர பக்கமும் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் ஆந்திராகாரர் என்று முத்திரை இடப்படுவீர்கள். முல்லைபெரியாறு - கேரள பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் மலையாளக்காரர் என்று அடி வாங்குவீர்கள் காவிரி - கர்நாடக பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதவும் வேண்டுமா. அடி வாங்க ஆசையா
4. ஹிந்தி ஹிந்தி படித்தால் நல்லது பயனுள்ளது இப்படியெல்லாம் எழுதினால் நீங்கள் வடநாட்டுக்காரர். தமிழை அழிக்க முயலுபவர். வடநாட்டவரின் கைக்கூலி.
5. எழுத்தாளர் ஒரு எழுத்தாளரை பாராட்டி பதிப்போ வலைப்பூவிலோ எழுதுவதற்கு முன்பு அவர் என்ன சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அது தெரியாமல் எழுதி மாட்டிக் கொள்ளாதீர்கள். அவர் சாதி பெரும்பான்மையாக இருந்தால் அவர் கதை நல்ல கதை என்று எழுதி தப்பித்துக் கொள்வது நல்லது.
6. திரைபடம் எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர் ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம்
7. இதிகாசம்-புராணம் ராமாயணம் மஹாபாரதம் பற்றி முடிந்த அளவு தவிர்க்கவும். அது ஆரியர்கள் எழுதியது. அதனால் திராவிடர்களுக்கு பிடிக்காது. ஏன் வம்பு. நீங்கள் ஐயோ நான் திராவிடன் தான் இருந்தாலும் ராமாயணம் பிடிக்கும் என்று சொன்னால் உங்கள் Birth Certificate ஐ இணையத்தில் போடுமாறு கேட்பார்கள்.
8. பிறப்பாலா வளர்ப்பாலா நீங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதற்கு முன்பு வலைப்பதிவர் பிறப்பால் தமிழரா வளர்ப்பால் தமிழரா என்று பார்த்து பிறகு பின்னூட்டம் இடவும். ஒருவேலை வளர்ப்பால் தமிழராக இருந்தால் உங்களுக்கும் ஆப்புதான்.
9. ஷ ஜ ஸ க்ஷ இது போன்ற வடமொழி எழுத்துக்களை எழதினால் நீங்கள் தமிழில் கலப்படம் செய்கிறீர்கள். சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறீர்கள். தமிழ் ஆவலர்களால் உங்களுக்கு கண்டனம் வரலாம். அதனால் ஷாஜஹானை சாசகான் என்றும் கமலஹாசனை கமலகாசன் என்றும் ரஹ்மானை ரகுமான் என்றும் கிருஷ்ணனை கிருட்டிணன் என்றும் குறிப்பிடுவது நல்லது.
10. அடிவாங்காமல் தப்பிக்க எல்லா இடத்திற்கும் போய் வாருங்கள். படித்து வாருங்கள். அநாவசியமாக கருத்தை எழுதி கெட்ட பேர் வாங்காதீர்கள்.
11. பின்னூட்டம் பின்னூட்டம் இடவேண்டும் என்று கை அரித்தால்- ஒருவேளை நீங்கள் கருத்துக்களங்களில் உறுப்பினராக இருந்தால் விவாகாரமான தலைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை. அந்த தலைப்பிற்கு சுமார் 10 பின்னூட்டம் வரை காத்திருங்கள். பிறகு அதில் பெரும்பான்மை அந்த தலைப்பிற்கு ஆதரவாக பேசினால் நீங்களும் அதற்கு ஆதரவாக எழுதிவிட்டு போவது நல்லது. நடுநிலையுடன் பேசுகிறேன் பேர்வழி என்று எதையாவது எழுதி வம்புக்கு ஏன் போகிறீர்கள்.
12. தினமலர் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை மேற்கோள் காட்டினால் நீங்கள் ஆரிய கைக்கூலி. தினகரன் தமிழ் முரசு மேற்கோள் காட்டினால் நீங்கள் திராவிட கைக்கூலி. இணையத்தில் எது பெரும்பான்மை என்பதை பார்த்து நடந்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்
13. சோ என்று தெரியாமல் கூட எழுத வேண்டாம். அச்சோ என்று எழுத நினைத்தால் அச் என்று நிறுத்திக் கொள்ளுதல் நல்லது
14. முடிந்த அளவு தமிழ் நாடு செய்வதெல்லாம் சரி தமிழர்கள் செய்வது எல்லாம் சரி என்றே எழுதுங்கள். நம் பக்கமும் தவறு இருக்கிறது என்று சொல்லி துரோகி என்று முத்திரைக்கு ஆளாகாதீர்கள்.
15. கடவுள் கடவுளை பற்றி எழுத நினைத்தால் சைவ மதத்தை பற்றி மட்டும் எழுதினால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. சிவனை பற்றி மட்டும் எழுதினால் நல்லது. வேறு கடவுள்களை எழுதினால் அவர்கள் ஆரிய கடவுள் என்பதனால் நீங்கள் ஆரியர் என்ற அவபெயருக்கு ஆளாக நேரிடலாம். முடிந்தால் கடவுளை பற்றி எழுதுவதையும் மதங்களை பற்றி எழுதுவதை பற்றியும் தவிர்க்கலாம். கேட்கமாட்டேன் என்றால் அனுபவியுங்கள்
16. ஆக நீங்கள் அரசியல் எழுதினால் கட்சிக்காரர் என்றும் நீங்கள் இந்தியராக நினைத்து எழுதினால் பிற மாநிலத்தவர் என்றும் நீங்கள் கடவுளை பற்றி எழுதினால் இந்த மதத்தவர் என்றும் அதிலும் குறிப்பிட்ட கடவுளை பற்றி எழுதினால் இந்த இனத்தவர் என்றும் பார்த்து பார்த்து தாக்குதல் நடத்த ஒரு கூட்டம் கணினி படித்து தமிழ் பயின்று இணையத்தில் அலைகிறது. அவர்களுக்கு வேலையே இது போன்ற பதிவுகளை தேடிப்பிடித்து அசிங்கப்படுத்துவது தான்.
17. போகக்கூடாத இடங்கள் 1. மறைந்த தலைவர்களை பற்றி அசிங்கமாக எழுதும் வலைப்பூக்கள் 2. தமக்கு பிடிக்காத கருத்தை கூறும் வலைஞர்களின் பிறப்பை பற்றியும் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக எழுதும் வலைப்பூக்கள் 3. தமிழை எத்தனை கேவலப்படுத்தமுடியுமோ அத்தனை கேவலமான வார்த்தைகளை வரிக்கு நாலாக பயன்படுத்தும் தளங்கள்.
18. நான் செய்த தவறு நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். முதலில் தமிழ் இணையதளங்களை கண்ட மகிழச்சியில் எல்லா இடங்களிலும் நிஜ பெயர் விபரம் கொண்டு பதித்துக் கொண்டேன். தமிழ் இணைய உலகம் மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பதால் Anoymous ஆக இருப்பதே நல்லது. எனக்கு இப்போது முழுவதும் நனைந்துவிட்டதால் முக்காடு எதற்கு என்று விட்டுவிட்டேன். 19. மதநல்லிணக்கமா - ஹா ஹா நீங்கள் ஒரு மதத்ததில் இருந்து மற்ற மதத்தையோ பாராட்டி பேசினால் உங்களுக்கு இருமுனை தாக்குதல் தங்கள் மதத்திலிருந்தும் மற்ற மதத்தவர்களிடமிருந்தும் வரும். உங்கள் மதத்தவர்கள் - மத துரோகி என்றும் மற்ற மதத்தவர்கள் - உளவாளி என்றும் உங்களை சொல்லக்கூடும். இதே ஃபார்முலா சாதிக்கும் பொருந்தும்.
19.. கொசுறு - எதை செய்தால் இணையத்தில் பிரபலம் அடையலாம். நீங்கள் ஏதோ நல்ல கவிதை கட்டுரை கதைகள் எழுதினால் இணையத்தில் பிரபலம் அடையலாம் என்று எண்ணியிருந்தால் நீங்கள் ஒரு முட்டாள். வலைப்பூவை துவங்கி மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகள் அதிகம் கொண்ட பதிப்புகளை இடவேண்டும். அதை தமிழ் வலைப்பூ திரட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். பிறகு அவர்களே அதை பிரபல படுத்திவிடுவார்கள்.
பரிமாற்றம் தொடரும்.....
பி:கு - நண்பரின் அனுமதியின்றி இதை வெளியிடுகிறேன். அவருக்கு ஆட்சேபமிருப்பின் மின்னஞ்சல் செய்யலாம்.
மேலும் சில ஆதங்கங்களை அவரது பக்கத்திலேயே சென்று படியுங்கள்
Monday, July 02, 2007
ஷங்கரின் அடுத்த படம் கதை தயாராகிவிட்டது
இயக்குநர் ஷங்கர் சிவாஜிக்கு அடுத்ததாக எடுக்கப்போகும் படத்தின் கதை இப்போதே லீக் ஆகிவிட்டது.
ஒன் லைனர்: தேவைக்கதிகமாக காசு போட்டு சினிமா எடுக்கும் சினிமாக் காரர்களை ஒரு 'பாதிக்கப்பட்ட' உதவி இயக்குநர் 'தட்டிக்' கேட்டால் எப்படி இருக்கும்.
திரக்கதை: எடுத்த உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரையில் தோன்றுகிறார். 'நான் ஆணையிட்டால்' பாட்டுக்கு சாட்டையை சுழற்றுகிறார். அதே செட், கொஞ்சம் பழையதாயிருக்கிறது. தூணில் ஒருவரை சங்கிலியில் கட்டிவைத்திருக்கிறார்கள். அவரை சரமாரியாக சாட்டையால் அடிக்கிறார். பாடல் பாதியிலேயே நிற்க. புரட்சித் தலைவர் வசனம் பேச ஆரம்பிக்கிறார்.
"டேய் மூதேவி. இதுவரைக்கும் எத்தன படம் எடுத்திருக்க?"
கட்டிவைக்கப்பட்டிருப்பவர் வலியால் முனகுகிறார்.
"சொல்லமாட்ட?" எம்.ஜி.ஆர் முகம் சிவக்கிறது. சிவப்பு வெளிச்சம் முகத்தில் அடிக்கிறது. சாட்டை சுழல்கிறது.
"நாலு.. நாலு படம் எடுத்திருக்கேன்"
"ம்.. ஒவ்வொண்ணும் எவ்வளவு செலவு?"
"முதல் படம் 10 கோடி, ரெண்டாவது 25, முணாவது 40 4வது 60 கோடி."
சாட்டை சுழல்கிறது.
"இல்ல 70.. 70"
"எத்தன கோடி லாபம் பாத்த?"
"நூறு கோடிக்கும் மேல."
"எத்தன கோடி கணக்குல காமிச்ச"
"25"
"அடப்பாவி."
"ஊர்ல ஒலகத்துல இல்லாததயா நான் செஞ்சுட்டேன். ஒவ்வொரு எம் எல் ஏவும் எவ்வளவு சம்பாதிக்கிறான், மந்திரி, எதிர்கட்சி, வட்டம், மாவட்டம்ணு அரசியல்ல என்னவெல்லாமோ நடக்குது."
"டேய் அதெல்லாம் தட்டிக்கேக்க அன்னியன், இந்தியன் தாத்தா, முதல்வன் எல்லாம் இருக்காங்கடா ஆனா உன்னப்போல அநியாயம் செய்யுற சினிமாக்காரங்கள தண்டிக்கத்தாண்டா நான் இருக்கேன்."
"நீ யாரு"
"இயக்குனன் ஹா ஹா ஹா" சிரிப்போடு சீன் மறையுது. பெயர் போட ஆரம்பிக்கிறாங்க.
படம் பேரு 'இயக்குனன்'
இயக்குனனோட ஸ்டைல் என்னண்ணா அளவுக்கதிகமா காசப்போட்டு படம் எடுக்கிற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அவங்களுக்கு பணம் குடுக்கிற கந்துவட்டிக்காரர்கள் எல்லோரையும் போட்டுத்தள்ளி ஒரு 'மெசேஜ்' சொல்ல வர்றாரு. ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு வேஷத்துல வருவாரு. அதாவது முதல்ல எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் மாதிரி வந்தார்ல அதுபோல 16வயதினிலே கமல், பாட்சா ரஜினி, கடலோரக் கவிதைகள் சின்னப்பதாஸ், கட்டபொம்மன் சிவாஜின்னு பல வேஷங்களில் வந்து கொலை செய்வார்.
ஏன் இயக்குனனுக்கு இந்தக் கொல வெறி?
வழக்கம்போல ஒரு கிராமத்துப் பின்னணி ஃப்ளாஷ் பேக்.. எடுத்துக்காட்டு.
கிராமத்துல சினிமாக் கொட்டக முன்னால இட்லிக் கட வச்சிருக்கிறாங்க இயக்குனனோட அம்மா. அவங்க எவ்வளவு சினிமா பைத்தியம்ணா, ஊர்ல இருக்கிற அவங்க பண்ண வீட்ட வித்துட்டு சினிமா தியேட்டர் முன்னால கட வச்சிருக்காங்க. பாட்டுக்குள்ளாக அவங்க இட்லிக்கடையில எப்படி சந்தோஷமா இருக்காங்கண்ணு காமிக்கிறாங்க. பிரமாண்டத்துக்காக தங்க இட்லித் தட்டுல அவங்க இட்லி அவிக்கிறதா காமிக்கிறாங்க. பண்ண வீட்ட வித்த காசையெல்லாம் வச்சி கலக்குறாங்க. ரெண்டு ரூபா வடையிலேந்து எண்ணைய பிழிஞ்சு எடுக்கிறதுக்கு 100 ரூபா நோட்ட குடுப்பாங்க. அம்மாவோட சினிமா பைத்தியத்துல சொத்தெல்லாம் கரைஞ்சுடுது. அப்பா குடிக்கிறதுக்குண்ணு வச்சிருந்த காச எடுத்து சினிமாவுக்குப் போறாங்க. அப்பா துக்கம் தாங்காம சினிமா கட் அவுட்ல தூக்குல தொங்கி எறந்து போறாரு. ஒரு கட்டத்துல அம்மாவுக்கு சினிமா பைத்தியம் முத்திப் போயி பசங்களோட பாடப் புத்தகங்கள கிழிச்சி ஹீரோ அறிமுகக் காட்சியில பேப்பர் தூவுறதுக்கு எடுத்துட்டுப் போறாங்க. இதுனால பசங்க படிப்பு கெடுது. இயக்குனன் குறைஞ்ச படிப்ப வச்சிட்டு நிறைய சம்பாதிக்க என்ன வழின்னு யோசிக்கிறான்.
அவன் அம்மா தலைவர் படத்துக்கு வச்சிருந்த முதல் ஷோ டிக்கெட்ட ப்ளாக்ல வித்து 'சென்னைக்குப் போய் ஒரு பெரிய இயக்குநர் ஆயிடுப்பான்னு அனுப்பி வைக்கிறாங்க'. மிகவும் சோகமான காட்சி. "அம்மா ஒன்னோட டிக்கெட்ட வித்து...?" உருகுகிறார் ஹீரோ. அம்மா ஒரு சி.டிய எடுத்துக் காமிக்கிறாங்க. "திருட்டு வி.சி.டில நேத்தே பாத்துட்டேன்பா."
சினிமாவால பாழான தன் வாழ்க்கைய சினிமாவாலயே மீட்டெடுக்க கனவோடு சென்னைக்கு வர்றான்.
சினிமா உலகத்துல இவனோட சிம்பிள் கிராமத்து கதைகளை படமா எடுக்க யாரும் முன்வரல. எல்லாரும் ஹீரோவ பச்சையா காமிக்க முடியுமா?, இந்துமா சமுத்திரத்த செட்டிங் போட்டு பாட்டு செய்ய முடியுமா? நிலாவுல லொக்கேஷன் பண்ணலாமாண்ணு இவன டார்ச்சர் பண்ணுறாங்க.
ஒரு கட்டத்துல இயக்குனன் இது வேலைக்காகாது ஏதாவது பிசினஸ் பண்ணலாமாண்ணு பேங்க்ல போய் லோன் கேக்கிறான். பேங் மேனேஜர் இவனத் திட்டி வெளிய விடுறார். இவன் ஜன்னல்வழியா பாக்கும்போதே ஒரு ப்ரொட்யூசருக்கு கோடிக்கணக்குல காச அள்ளிக்குடுக்கிறாரு மேனேஜர். இதேபோல ஒரு கந்து வட்டிக்காரரும் சினிமாவுக்கு காசு குடுக்கிறாரு ஆனா இவனுக்கு மறுக்கிறாரு. அதுலேந்து சூடாகிறான் இயக்குனன்.
சுஜாதா டையலாக் சூடு பறக்குது.
"இண்ணைக்கு இந்தியாவுல ஒரு வருஷத்துக்கு இத்தன படம் எடுக்கிறாங்க. தமிழ்ல எடுக்கிற படங்கள் இத்தன, அதுக்கு ஆகிற செலவு இத்தன, இதுல பேங்க் லோன் இவ்வளவு, சேட்டு இவ்வளவு, கந்து வட்டி இவ்வளவு, ப்ரொட்யூசர் சொத்த வித்தது இவ்வளவு. படத்துக்கு A செண்டர்ல 10% வருமானம், Bல 10% மீதி 80% C, D செண்டர்லேந்து வருது. ஏண்ணா திருட்டு சிடி அவங்களுக்கு கிடைக்கிறதில்ல. இந்த C,D செண்டர்ல உள்ளவனுக்கு மாத வருமானம் இவ்வளவு, அவனுக்காக அரசாங்கம் செலவு செய்யுறது இவ்வளவு கோடி, அங்க நடக்குற தோழில் முதலீடு இத்தனகோடி... அப்படி பாக்கும்போது கிராமங்கள்ல நடக்கிற தொழில் முதலீட்ட விட அவங்க பாக்குற சினிமாவ்ல முதலீடு அதிகமாயிருக்குது.." அப்படியே புள்ளிவிபரங்கள அடுக்குறார் சுஜாதா.
"சினிமாவுல முதலீடு குறஞ்சா வங்கிகள் என்ன மாதிரி தொழில் செய்யுறவங்களுக்கு கடன் தரலாம்ல, ்தரலாம்லதொழில் முதலீட்டுக்கு கந்துவட்டிக் காரன் குறஞ்ச வட்டியில கடன் தருவான்ல?" இதுதான் படத்தின் மையமா இருக்குது.
க்ளைமேக்ஸ்ல 'இயக்குனன்' சீர்திருத்தத்த கொண்டு வர்றான். மக்களெல்லாம் சினிமாவுக்கு ஒருதரம் போய் பாத்துட்டு அவங்கவங்க வேலையப் பாக்குறாங்க. ரசிகர் மன்றங்கள் ஒவ்வொண்ணா குறையுது, எல்லாரும் வங்கி, தனியார்கிட்ட கடன் வாங்கி சிறப்பா தொழில் செய்யுறாங்க.
அதோட படம் முடியல.. கடைசியா ஒரு ட்விஸ்ட் பண்ணுறார் டைரக்டர். டி.வி.யில வரக்கூடிய செல்வி, செல்வி, செல்வி பாட்டு கேக்குது, திரையில செல்வியா ராதிகா வர்றாங்க. "நீதானேடா சீரியல் டைரக்டர்? சீரியல எப்ப முடிப்ப?" கத்திய ஓங்க. 'சினிமா கில்லர சீரியல் கில்லராக்கிட்டீங்களே'. படம் முடியுது.
ஒன் லைனர்: தேவைக்கதிகமாக காசு போட்டு சினிமா எடுக்கும் சினிமாக் காரர்களை ஒரு 'பாதிக்கப்பட்ட' உதவி இயக்குநர் 'தட்டிக்' கேட்டால் எப்படி இருக்கும்.
திரக்கதை: எடுத்த உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரையில் தோன்றுகிறார். 'நான் ஆணையிட்டால்' பாட்டுக்கு சாட்டையை சுழற்றுகிறார். அதே செட், கொஞ்சம் பழையதாயிருக்கிறது. தூணில் ஒருவரை சங்கிலியில் கட்டிவைத்திருக்கிறார்கள். அவரை சரமாரியாக சாட்டையால் அடிக்கிறார். பாடல் பாதியிலேயே நிற்க. புரட்சித் தலைவர் வசனம் பேச ஆரம்பிக்கிறார்.
"டேய் மூதேவி. இதுவரைக்கும் எத்தன படம் எடுத்திருக்க?"
கட்டிவைக்கப்பட்டிருப்பவர் வலியால் முனகுகிறார்.
"சொல்லமாட்ட?" எம்.ஜி.ஆர் முகம் சிவக்கிறது. சிவப்பு வெளிச்சம் முகத்தில் அடிக்கிறது. சாட்டை சுழல்கிறது.
"நாலு.. நாலு படம் எடுத்திருக்கேன்"
"ம்.. ஒவ்வொண்ணும் எவ்வளவு செலவு?"
"முதல் படம் 10 கோடி, ரெண்டாவது 25, முணாவது 40 4வது 60 கோடி."
சாட்டை சுழல்கிறது.
"இல்ல 70.. 70"
"எத்தன கோடி லாபம் பாத்த?"
"நூறு கோடிக்கும் மேல."
"எத்தன கோடி கணக்குல காமிச்ச"
"25"
"அடப்பாவி."
"ஊர்ல ஒலகத்துல இல்லாததயா நான் செஞ்சுட்டேன். ஒவ்வொரு எம் எல் ஏவும் எவ்வளவு சம்பாதிக்கிறான், மந்திரி, எதிர்கட்சி, வட்டம், மாவட்டம்ணு அரசியல்ல என்னவெல்லாமோ நடக்குது."
"டேய் அதெல்லாம் தட்டிக்கேக்க அன்னியன், இந்தியன் தாத்தா, முதல்வன் எல்லாம் இருக்காங்கடா ஆனா உன்னப்போல அநியாயம் செய்யுற சினிமாக்காரங்கள தண்டிக்கத்தாண்டா நான் இருக்கேன்."
"நீ யாரு"
"இயக்குனன் ஹா ஹா ஹா" சிரிப்போடு சீன் மறையுது. பெயர் போட ஆரம்பிக்கிறாங்க.
படம் பேரு 'இயக்குனன்'
இயக்குனனோட ஸ்டைல் என்னண்ணா அளவுக்கதிகமா காசப்போட்டு படம் எடுக்கிற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அவங்களுக்கு பணம் குடுக்கிற கந்துவட்டிக்காரர்கள் எல்லோரையும் போட்டுத்தள்ளி ஒரு 'மெசேஜ்' சொல்ல வர்றாரு. ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு வேஷத்துல வருவாரு. அதாவது முதல்ல எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் மாதிரி வந்தார்ல அதுபோல 16வயதினிலே கமல், பாட்சா ரஜினி, கடலோரக் கவிதைகள் சின்னப்பதாஸ், கட்டபொம்மன் சிவாஜின்னு பல வேஷங்களில் வந்து கொலை செய்வார்.
ஏன் இயக்குனனுக்கு இந்தக் கொல வெறி?
வழக்கம்போல ஒரு கிராமத்துப் பின்னணி ஃப்ளாஷ் பேக்.. எடுத்துக்காட்டு.
கிராமத்துல சினிமாக் கொட்டக முன்னால இட்லிக் கட வச்சிருக்கிறாங்க இயக்குனனோட அம்மா. அவங்க எவ்வளவு சினிமா பைத்தியம்ணா, ஊர்ல இருக்கிற அவங்க பண்ண வீட்ட வித்துட்டு சினிமா தியேட்டர் முன்னால கட வச்சிருக்காங்க. பாட்டுக்குள்ளாக அவங்க இட்லிக்கடையில எப்படி சந்தோஷமா இருக்காங்கண்ணு காமிக்கிறாங்க. பிரமாண்டத்துக்காக தங்க இட்லித் தட்டுல அவங்க இட்லி அவிக்கிறதா காமிக்கிறாங்க. பண்ண வீட்ட வித்த காசையெல்லாம் வச்சி கலக்குறாங்க. ரெண்டு ரூபா வடையிலேந்து எண்ணைய பிழிஞ்சு எடுக்கிறதுக்கு 100 ரூபா நோட்ட குடுப்பாங்க. அம்மாவோட சினிமா பைத்தியத்துல சொத்தெல்லாம் கரைஞ்சுடுது. அப்பா குடிக்கிறதுக்குண்ணு வச்சிருந்த காச எடுத்து சினிமாவுக்குப் போறாங்க. அப்பா துக்கம் தாங்காம சினிமா கட் அவுட்ல தூக்குல தொங்கி எறந்து போறாரு. ஒரு கட்டத்துல அம்மாவுக்கு சினிமா பைத்தியம் முத்திப் போயி பசங்களோட பாடப் புத்தகங்கள கிழிச்சி ஹீரோ அறிமுகக் காட்சியில பேப்பர் தூவுறதுக்கு எடுத்துட்டுப் போறாங்க. இதுனால பசங்க படிப்பு கெடுது. இயக்குனன் குறைஞ்ச படிப்ப வச்சிட்டு நிறைய சம்பாதிக்க என்ன வழின்னு யோசிக்கிறான்.
அவன் அம்மா தலைவர் படத்துக்கு வச்சிருந்த முதல் ஷோ டிக்கெட்ட ப்ளாக்ல வித்து 'சென்னைக்குப் போய் ஒரு பெரிய இயக்குநர் ஆயிடுப்பான்னு அனுப்பி வைக்கிறாங்க'. மிகவும் சோகமான காட்சி. "அம்மா ஒன்னோட டிக்கெட்ட வித்து...?" உருகுகிறார் ஹீரோ. அம்மா ஒரு சி.டிய எடுத்துக் காமிக்கிறாங்க. "திருட்டு வி.சி.டில நேத்தே பாத்துட்டேன்பா."
சினிமாவால பாழான தன் வாழ்க்கைய சினிமாவாலயே மீட்டெடுக்க கனவோடு சென்னைக்கு வர்றான்.
சினிமா உலகத்துல இவனோட சிம்பிள் கிராமத்து கதைகளை படமா எடுக்க யாரும் முன்வரல. எல்லாரும் ஹீரோவ பச்சையா காமிக்க முடியுமா?, இந்துமா சமுத்திரத்த செட்டிங் போட்டு பாட்டு செய்ய முடியுமா? நிலாவுல லொக்கேஷன் பண்ணலாமாண்ணு இவன டார்ச்சர் பண்ணுறாங்க.
ஒரு கட்டத்துல இயக்குனன் இது வேலைக்காகாது ஏதாவது பிசினஸ் பண்ணலாமாண்ணு பேங்க்ல போய் லோன் கேக்கிறான். பேங் மேனேஜர் இவனத் திட்டி வெளிய விடுறார். இவன் ஜன்னல்வழியா பாக்கும்போதே ஒரு ப்ரொட்யூசருக்கு கோடிக்கணக்குல காச அள்ளிக்குடுக்கிறாரு மேனேஜர். இதேபோல ஒரு கந்து வட்டிக்காரரும் சினிமாவுக்கு காசு குடுக்கிறாரு ஆனா இவனுக்கு மறுக்கிறாரு. அதுலேந்து சூடாகிறான் இயக்குனன்.
சுஜாதா டையலாக் சூடு பறக்குது.
"இண்ணைக்கு இந்தியாவுல ஒரு வருஷத்துக்கு இத்தன படம் எடுக்கிறாங்க. தமிழ்ல எடுக்கிற படங்கள் இத்தன, அதுக்கு ஆகிற செலவு இத்தன, இதுல பேங்க் லோன் இவ்வளவு, சேட்டு இவ்வளவு, கந்து வட்டி இவ்வளவு, ப்ரொட்யூசர் சொத்த வித்தது இவ்வளவு. படத்துக்கு A செண்டர்ல 10% வருமானம், Bல 10% மீதி 80% C, D செண்டர்லேந்து வருது. ஏண்ணா திருட்டு சிடி அவங்களுக்கு கிடைக்கிறதில்ல. இந்த C,D செண்டர்ல உள்ளவனுக்கு மாத வருமானம் இவ்வளவு, அவனுக்காக அரசாங்கம் செலவு செய்யுறது இவ்வளவு கோடி, அங்க நடக்குற தோழில் முதலீடு இத்தனகோடி... அப்படி பாக்கும்போது கிராமங்கள்ல நடக்கிற தொழில் முதலீட்ட விட அவங்க பாக்குற சினிமாவ்ல முதலீடு அதிகமாயிருக்குது.." அப்படியே புள்ளிவிபரங்கள அடுக்குறார் சுஜாதா.
"சினிமாவுல முதலீடு குறஞ்சா வங்கிகள் என்ன மாதிரி தொழில் செய்யுறவங்களுக்கு கடன் தரலாம்ல, ்தரலாம்லதொழில் முதலீட்டுக்கு கந்துவட்டிக் காரன் குறஞ்ச வட்டியில கடன் தருவான்ல?" இதுதான் படத்தின் மையமா இருக்குது.
க்ளைமேக்ஸ்ல 'இயக்குனன்' சீர்திருத்தத்த கொண்டு வர்றான். மக்களெல்லாம் சினிமாவுக்கு ஒருதரம் போய் பாத்துட்டு அவங்கவங்க வேலையப் பாக்குறாங்க. ரசிகர் மன்றங்கள் ஒவ்வொண்ணா குறையுது, எல்லாரும் வங்கி, தனியார்கிட்ட கடன் வாங்கி சிறப்பா தொழில் செய்யுறாங்க.
அதோட படம் முடியல.. கடைசியா ஒரு ட்விஸ்ட் பண்ணுறார் டைரக்டர். டி.வி.யில வரக்கூடிய செல்வி, செல்வி, செல்வி பாட்டு கேக்குது, திரையில செல்வியா ராதிகா வர்றாங்க. "நீதானேடா சீரியல் டைரக்டர்? சீரியல எப்ப முடிப்ப?" கத்திய ஓங்க. 'சினிமா கில்லர சீரியல் கில்லராக்கிட்டீங்களே'. படம் முடியுது.
Subscribe to:
Posts (Atom)
சிறில் அலெக்ஸ்






















