.

Thursday, June 14, 2007

புதிய முயற்சி

சில பாப் பாடல்களில் அருமையான கவிதைகள் ஒளிந்திருக்கும். அவ்வப்போது இவற்றை மொழி பெயர்த்துப் பார்ப்பேன். சில, நல்ல தமிழ் கவிதைகளைப் போன்றே இருக்கும். அப்படி மொழி பெயர்த்தக் கவிதை/பாடல் ஒன்று கீழே.

இது எந்தப் பாடல் எனக் கண்டுபிடிக்க சுட்டியை சுட்டுங்க..

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

இந்த இரவின் காற்றில் அது வருவதை நீ உணர்கிறாயா?

நீ (நீரில்) 'மூழ்குகிறேன்' எனக் கூறினாலும்

நான் என் கரங்களைத் தரப்போவதில்லை.

உன் முகத்தை முன்பே பார்த்திருக்கிறேன் நண்பனே!

ஆனால் உனக்கு நான் யார் எனத் தெரியுமா தெரியவில்லை.

நான் அங்கிருந்தேன்,

நீ என்ன செய்தாய் என்பதை கண்டேன்,

என்னிரு கண்களால் கண்டேன்.

ஆதலால், உன் புன்னகையை துடைத்துவிடு.

நீ எங்கே சென்றிருந்தாய் என நான் அறிவேன்.

எல்லாமே பொய்யின் மூட்டைகள்.

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

எனக்கு நினைவுள்ளது!

எனக்கு நினைவுள்ளது, கவலைப் படாதே.

எப்படி என்னால் மறக்க இயலும்?

முதன்முதலாய், கடைசியாய் நாம் சந்தித்த கணம்.

ஆனால் உன் புன்னகையின் காரணம் எனக்குத் தெரியும்.

இல்லை.. நீ என்னை ஏமாற்ற இயலாது!

அந்தக் காயம் வெளியில் தெரிவதில்லை ஆனால்

வலி இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது

அது உனக்கும் எனக்கும் அன்னியமாயில்லை.

இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன்

இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன்.

நன்றி: தமிழோவியம்

No comments:

சிறில் அலெக்ஸ்