.

Showing posts with label டி.வி. Show all posts
Showing posts with label டி.வி. Show all posts

Monday, January 29, 2007

இயேசு சொன்ன கதைகள் - 3

மருத்துவன் நோயுற்றவனுக்கேயன்றி நலமாயுள்ளவனுக்கல்ல." இயேசு தன்னைப்பற்றி கூறிய உவமை இது."பாவிகளை மீட்கவே வந்தேன்." என்பது அவரது பொன்மொழி. கடவுள் பாவிகளையே தேடுகிறார், நீதிமான்களையல்ல என வெளிப்படையாகச் சொன்னவர் இயேசு.

பாவி ஒருவனின் மனதிருத்தம் எத்தகையது?

"உங்களில் யார் ஒருவன் தன் நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான்? அதை அவன் கண்டதும் குதூகுலத்துடன் தன் தோள்களில் போட்டுக்கொள்வான். வீட்டுக்கு வந்ததும் தன் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு கொண்டாடுங்கள், தொலைந்துபோன என் ஆட்டை கண்டெடுத்தேன்" என்பான். விண்ணுலகம், மனம் திருந்திய ஒரு பாவியின் நிமித்தம் அடையும் மகிழ்ச்சி, தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பற்றிய மகிழ்ச்சியைவிட அதிகமானது"

இயேசு தன்னை 'நல்ல மேய்ப்பன்' என்று சொல்வது இதனால்தான். இயேசுவை மேய்ப்பனாக சித்தரிக்கும் படங்கள் இந்தக்கருத்தையே சொல்கின்றன.

மேய்ப்பன் கதைக்குத் தொடர்ச்சியாக இன்னுமொரு கதை சொல்கிறார் இயேசு,"எந்தப் பெண் தன் பத்து வெள்ளிக்காசுகளில் ஒன்று காணாமல் போக, விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதை தேடாமலிருப்பாள்? அவள் அதை கண்டபோது அவள் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,"என்னோடு மகிழுங்கள், நான் தொலைத்ததை கண்டெடுத்தேன்" என்பாள். மனம் திருந்தும் பாவியை முன்னிட்டு கடவுளின் தூதர்கள் மகிழ்வார்கள்" என்றார்.

ஒரு வெள்ளிக் காசு ஒரு நாள் ஊதியத்துக்கு சமமானதாம்.

சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கக்கூடாதென்பார்கள். அண்மையில் அரட்டை அரங்கம் சிறுவயதில் தொலைந்துபோன ஒரு சிறுமியை அவளின் குடும்பத்தாரோடு சேர்த்துவைத்த நிகழ்ச்சியைக் கண்டேன். அந்தக் குடும்பம் அவளை கட்டித் தழுவி கொண்டாடியது. அரட்டை அரங்கக் குழுவின் முகத்தில் ஒரு அசாதரணப் பெருமிதமும் மகிழ்ச்சியும். சொந்தக்காரர்களும் பக்கத்துவீட்டுக்காரர்கலும் சந்தோஷித்தனர், பார்வையாளர்களின் கண்களில் ஆனந்தத்துளிகள்.

மனம் திருந்தி வாழும் மனிதன் பொருட்டு கடவுளும் இத்தகைய மகிழ்ச்சிகொள்கிறார்.


நன்றி: தமிழோவியம்

Thursday, January 18, 2007

நடையிழந்த கால்கள்தன்னில்...

'நடையிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன்'. டி. ராஜேந்தரின் இந்த வரிகளை நியாபகப் படுத்தியது (நடன)இயக்குநர் லாறன்ஸ் இராகவேந்திரா தந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி. ஊனமுற்றவர்கள் ஆடிய நடன நிகழ்ச்சி. ஊனம் உடலிலேதான் மனதிலல்ல என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்தனர். 'காலுக்கு செருப்பில்லை எனக் கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும்வரை' என்பதுபோல, இத்தனை குறைகளுக்கு மத்தியுலும் வென்றுகாட்டும் இவர்கள்தான் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமருந்து.

ஊனம் தெரியும்படியாய் உடையணிந்திருந்ததை என் மனைவி சுட்டிக் காட்டினார். ஒருவகையில் அதுதான் அவர்கள் தரும் செய்தி. கீழ்நிலைகளிலிருந்து வெற்றிபெறுபவர்கள் தங்கள் பின்புலங்க்களை வெளிப்படுத்துவதே ஒரு புரட்சிகரமான வெளிப்பாடுதான். இதை எல்லோரும் செய்வதன்மூலமே கீழே இருக்கும் யாரும் என்றைக்கும் கீழே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல என்பது எல்லோருக்கும் உறைக்கும்.

முழுக்கால்சட்டை போடுவது கிறீத்துவக் கலாச்சாரமா? சேலை உடுத்துவது இந்து கலாச்சாரமா? (வாட் ய சில்லி கொஸ்டின்) இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் பொங்கல் தமிழர் திருநாளா இல்லையான்னு கண்டுபிடிச்சிரலாம்னு நினைக்கிறேன். கலாச்சாரக் கூறுகளை எடுத்தாழ்வது அந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை. இவற்றை விலக்கிவைக்கக் கூட உரிமை இருக்கிறது. இந்துப் பண்டிகையை கிறீத்துவர்கள் கொண்டாடும்போது அதில் இந்துமதக் கூறுகளை அகற்றிவிட்டே அதை கொண்டாடுகிறார்கள். 'கலாச்சார உள்வாங்கல்' எனவே இதை வகைப் படுத்தலாம்.

சாதி அமைப்பை கிறீத்துவர்கள் பின்பற்றுவதும் ஒரு கலாச்சார தாக்கமே. இதை இந்துப் பழக்கம் என உரிமைகொண்டாட யாரும் முன்வரமாட்டார்கள் என நினைக்கிறேன்.
லாரன்ஸ் இராகவேந்திரா கிறீத்துவரா இந்துவா? (அவரையே கேழுங்க)

இன்னொரு நிகழ்ச்சியில் மதுரைப்புயல் வடிவேலு தன் மாமியார் ஊரை சுறிக்காண்பித்தார். மண்ணின் மணம் வீசிய நிகழ்ச்சி.

வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகளிர் கூட்டத்தோடு தரையில் அமர்ந்து அவர்கள் வைத்திருந்த மீனை சுவைத்தார். அந்தம்மா பசங்க வெளிநாட்ல படிக்குதாம். இட ஒதுக்கீடுக்காக சண்டைபோட்டுக்கொள்பவர்களுக்கு ஒரு தெளிவான பாடம்.

வெட்டிமன்றம் 'வாழ்க்கைக்கு மிகவும் உதவுவது....' எனும் தொடரில்(Series) இந்தமுறை 'படிப்பறிவா? பட்டறிவா?' என காமெடி செய்தனர். ரசிக்கும்படியாகவே இருந்தது. வழக்கம்போல ராஜா அணி தோல்வியைத் தழுவியது.

நடிகர், நடிகைகளின் பேட்டிகள் சலிப்படையச் செய்கின்றன. ஓவர் டோஸ் என்றே சொல்லவேண்டும்.

சரி நீ பொங்கல் கொண்டாடினியா?

என் மனைவி வைத்த சர்க்கரைப் பொங்கலை நான் சாப்பிடவில்லை. அவரே அதை சாப்பிடல. ஏன்னா அது சரியா வரல. ஆனா வெண்பொங்கலை வயிறு(பாதி கேஸில்) நிரம்ப கொட்டிக்கொண்டேன்.

பக்கத்து வீட்டுக்கும் தூங்கிக்கொண்டிருந்த என் மகனுக்கும் கேட்காதபடி மெதுவாக 'பொங்கலோ பொங்கல்' சொல்லிவிட்டு என் மனைவி பொங்கிய பொங்கல். கடல்கடந்து பொருள்தேடும் மக்களின் பேரிழப்பு கலாச்சாரம்தான். இதில் கொடுமை என்னண்ணா இந்த இழப்பை பலரும் உணர்வதே இல்லை.

என் பக்கத்து வீட்ல கலை கிரிஷ்னு தம்பதிங்க இருக்காங்க. ரெண்டுபேரும் அமெரிக்காவிலேயே பிறந்துவளந்த மாதிரி நடந்துக்கிறாங்க. அவரு ஐயாராம் கலை கொஞ்சம் தாழ்ந்த சாதியாம். ஆனா பாத்தா எந்த வித்தியாசமும் தெரியல. இவங்க அமெரிக்க வாழ்க்கையோட ஐக்கியமாயிட்டதால இங்க கோவில்ல வேலை செய்ய வாய்ப்பிருந்தும் க்ரிஷோட அப்பாவ கூட்டிட்டுவரலியாம். அவங்க அப்பாவுக்கு ஒரு எழுத்தாளர் பால்ய ஸ்னேகிதராம்.

Wednesday, September 27, 2006

பாக்கிஸ்த்தானில் புஷ் பின்லாடன்

பர்வேஷ் முஷ்ராஃப் ஜான் ஸ்டேவர்ட்டின் டெய்லி ஷோவில் சிறப்பு விருந்தினராய் நேற்று (9/26/2006) தோன்றினார்.

ஜான் ஸ்டிவர்ட்டின் டெய்லி ஷோ தினசரி செய்திகளை நகைச்சுவையோடு விவாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. Fake செய்தி விவரணைகளும், செய்திப்படங்களும் சுவாரஸ்யமாகத் தருவார்கள். ஜார்ஜ் புஷ்தான் இவர்களின் ஹீரோ. ஹீரோன்னா பாட்ஷா ரஜினிமாதிரியில்ல இம்சை அரசன் வடிவேலுமாதிரி.

பாக்கிஸ்தான் வழக்கப்படி (?) தேனீர் கொடுத்து வரவேற்றார் ஜான் ஸ்டிவர்ட்.

முதல் கேள்வியே பின் லாடன் எங்கே இருக்கிறாரரென்றுதான்.

அடுத்து பர்வேஷ் முஷ்ரஃபின் சுய சரிதையான 'In the line of Fire' பற்றிய விவாதம்.

9/11 முடிந்ததும் அமெரிக்கா பாக்கிஸ்த்தானை, தங்களோடு செராவிட்டால் பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுக்கப்படும் என மிரட்டியிருந்ததைப் பற்றி பேச்சு தொடர்ந்தது.

கடைசியில் ஜான் ஸ்டிவர்ட் ஒரு கேள்வி கேட்டார்.

"பாக்கிஸ்த்தானில் ஒரு தேர்தலில் புஷ்ஷும் பின் லேடனும் எதிரெதிர் போட்டியிட்டால் யார் ஜெயிப்பார்கள்?"

முஷ்ரப் சிரித்தபடியே,"இருவருமே படுதோல்வியடைவார்கள்." ("They will both lose miserabily").

உரையாடலைக் காண

சிஃபி செய்தி

Thursday, February 02, 2006

"அம்மா, இந்த ஸ்பைடர்மேனப் பாரேன்..."

சன் டி.வியின் சிறப்புப்பார்வையில் 'கணிணியில் விளையாடுவது குழந்தை, சிறுவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு' போன்றதொரு தொகுப்பைப் பார்த்தேன்.

ஒரு அம்மாவும் அவர் மகளை கையில் வைத்துக்கொண்டு கணிணி விளையாட்டுக்கள் எப்படி பள்ளியில் விவாதிக்கப்பட்டு வீட்டில் கெஞ்சலோ கூச்சலோ போட்டு வாங்கப்பட்டு விளையாடப்படுகின்றன என்றும், இதை விளையாடுவதால் வரும் அறிவு வளர்ச்சி பற்றியும் பேட்டி கொடுத்தார்.

ஒரு தலமை ஆசிரியையும் இதைப்பற்றி உயர்வாகப் பேசினார்.

தொகுப்பாளர், 'இனிமேல் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லாமல் வீட்டிலேயே பொழுது போக்கவைக்கலாம்' என ஏதோ 'அப்படியே சாப்பிடலாம்' தொனியில் பேசினார்.

மாறனின் மலிவு விலை கணிணி திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கணிணிவிளையாட்டுக்கள் மூளை/அறிவு வளர்ச்சிக்கு சிறந்ததா? பெரிய கேள்வி.

இந்த சுட்டியில் இது பற்றிய ஆராய்ச்சியின் முடிவுகளை ஆங்கிலத்தில் பார்க்கலாம். இதற்குப் பதிலடியும் அதிலேயே இடுக்கிறது

என்ன சொல்கிறது ஆராய்ச்சி - அதீத கணிணி விளையாட்டுப் பழக்கம் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்று.

எனக்குத்தெரிந்த சில தகவல்கள் கீழே,

கணிணி விளையாட்டுப் பழக்கமுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில் அதிக விருப்பம் காட்டுவதில்லை, இரவு தூங்க நேரம் எடுத்துக்கொள்கிரார்கள், இவை உடல் நலனை பாதிக்கிரது.

பெற்றோருக்கும் குழந்தைகளூக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.

பொதுநல எண்ணங்கள் போய் தான் தனது என்ற மனநிலை வந்துவிடுகிறது குழந்தைகளுக்கு.

உலகைப்பற்றிய அறிவை வெறும் ஒளிப்புள்ளிகளை(Pixel?) பார்த்தே தெரிந்துகொல்கிறார்கள். சிங்கத்தை பார்த்து லயன் கிங் என்கிறான், கொரில்லாவை கிங் காங் என்கிறார்கள். ஒரு மாய உலகத்தையே மென் விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்துகின்றன.

குறைந்த பட்ச நண்பர்களையே கொண்டுள்ளனர்.

வெளியே, ஊருக்கோ, சுர்றிப்பார்க்கவோ போக மறுக்கிறார்கள். இதை சில பெற்றோர்கள் நல்லதுதான், நாம தனியா என்ஜாய் பண்னலாம் என நினைக்கிரார்கள். என் ஜாய் மட்டுமே முக்கியம் ஒன் ஜாய்க்கு கம்புயூட்டர் இருக்குதே என்பது தான் இவர்களின் போக்கு.

கம்பூட்டர் கேம்ஸ் - நம் வாழ்க்கைகளை ஊடுறுவப்போவது உறுதிதான். ஆனால் இவற்றை தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியம். எல்லா விளையாட்டுக்களும் எல்லாருக்கும் உகந்தல்ல. இதற்கென வார இறுதிகளில் நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். பெற்றோரும் சேர்ந்து விளையாடலாம். குறைந்தபட்சம் ஒரு கண்காணிப்பு போன்ற ஈடுபாடாவது தேவை. அவர்கள் விளையாடும்போது அந்த அறையிலிருந்தபடி நீங்கள் ஏதாவது படித்துக் கொண்டிருக்கல்லாம்.

அறிவு வளர்ச்சிக்கான, கணிதம் மற்றும் மொழி பாடங்களின் அடிப்படையில் சில மென் விளையாட்டுக்களுளன இவை அறிவு வளர்ச்சிக்கு கொஞ்சம் உதவலாம். ஆனால் படிப்பறிவு மட்டும் ஒரு முழுமனிதனை உருவாக்க முடியாதே.

சன் டி.வி எதற்கு திடீரென இப்படி ஒரு தொகுப்பைத் தரவேண்டுமென்பதற்கு உள் அர்த்தமிருக்கலாம். இப்பெல்லாம் இவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தமிருக்கிறது. இதே தொகுப்பில் கணிணி விளையாட்டுக்களால் வரும் தீங்கையும் அதை சரிசெய்யும் முறைகளையும், கவனமாயிருக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறியிருந்தால் தொகுப்பு முழுமையானதாயிருக்கும்.

பிள்ளைகள் விளையாட இடமில்லாதபடி ஊரமைப்பும், பள்ளிகளும் இருக்கின்றன என்பது மறுக்க முடியாதது. பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டுக்கு ஓடிவந்து கம்பூட்டர் கேம்ஸ் ஆடிக்கொண்டிருகின்றனர் பிள்ளைகள். குழந்தைகள் பலர் ஊரிலிருந்துவரும் நம் சொந்தக்காரர்கள்கூடப் பழகவே தயங்குகிறார்கள்.

முன்பெல்லாம்,"அம்மா சுப்ரமணியன் என்ன கிள்ளிட்டான் என அழுது வரும் பிள்ளைகள் இனி,"அம்மா, சூப்பர்மேன் என்ன சுட்டுட்டான்னு" வந்து நிக்குமோ என்னவோ?

More Links on CGs
http://www.timesonline.co.uk/article/0,,2-1976339,00.html
http://news.bbc.co.uk/2/hi/technology/3485918.stm
http://news.bbc.co.uk/2/hi/health/4594376.stm

மிச்சத்தத கூகிளில் தெடுங்களேன்...:)

Wednesday, January 18, 2006

படுக்கை அறையில்...


சி. என். என் டாட் காமில் (CNN.COM) சில மாதங்களாக இலவச வீடியோ செய்தித்தொகுப்புகள் வழங்கப் படுகின்றன, அமெரிக்காவில் வசிப்பவரானால் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாகும்.

இதில் ஜெனீ மூ (JEANNE MOOS) வழங்கும் சுவையான செய்தித்தொகுப்பு வந்தவுடன் பார்த்துவிடுவேன். சில எளிய செய்திகளை, நகைச்சுவையோடும் சிலசமயம் நக்கலோடும் தொகுத்து அற்புதமாய் வழங்குகிறார்.

இவர் ஒவ்வொரு தொகுப்பையும் முடிக்கும் போது சொல்லும் பஞ் லைன்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

'படுக்கை அறையில் டி. வி பார்ப்பது கலவியைக் குறைக்கிறது' என்பது கடைசியாக பார்த்த வீடியோ. ஒரு இந்தியப் பெண்ணும் இதில் பதில் கூறுகிறார், குஷ்பு அல்ல.


http://www.cnn.com/video/

Tuesday, January 17, 2006

ஒரு ஊர்ல ஒரு இளையராஜா

இளையராஜாவின் சமீபத்திய இன்னிசை நிகழ்ச்சி ஒரு ஆத்மார்த்த அனுபவமாக இருந்தது. 'ஜனனி ஜனனி' என ராஜா பாட ஆரம்பித்ததும் எழுந்த கரகோஷங்களைவிட கண்ணீர்த்துளிகள் அதிகம். சில தலைமுறைகளை தன் ஆர்மோனிய விரல்களில் கட்டிப்போட்டிருக்கிறார் ராஜா. இவர் வேண்டுகோளுக்கிணங்கி கூட்டம் குறைவாகவே கைதட்டியது என்றால் பாத்துக்கொளுங்கள். இளையராஜாவின் எத்தனையோ பாடல்களில் ஏதோ ஒரு மலையாளப்பாடலின் ஹம்மிங் தலைப்பு இசையாகப் பயன்படுத்தியிருந்தது எரிச்சலாகவே இருந்தது.

பாரதிராஜா வந்து ஏன் இளையராஜா கர்வம்பிடித்தவராக இருகிறார் என்பதற்கு விளக்கம் அளித்துச்சென்றார். இந்த நிகழ்சிக்கும் அவர் கூறியதற்கும் சம்மந்தமில்லயோ எனத்தோன்றியது.

கமல் ஓரிரு வரிகளாவது பாடியிருக்கலாம்.

ஷ்ரேயா கோஷல், சாதனா சர்க்கம் குரல்கள் அபாரம். சாதனா சர்கம் போனபிறவியில் தமிழச்சியாயிருந்திருக்கணும், இந்த பிறவியில் தமிழ்பாடும் பல தமிழச்சிகளுக்கு பாடம். அருமையான தமிழ் உச்சரிப்பு.

ஷ்ரேயா , "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தோடுதே" எனப் பாடினார், நம்ம ரசிகர்கள் வழக்கம்போல கைதட்டி சரியாப் பாடச் சொன்னார்கள்.

எஸ்.பி.பி வழக்கம்போல மெருகேற்றிக்கொண்டிருந்தார். இந்த சின்னக்குயில் சித்ரா ஏந்தான் இப்படி அனியாயத்துக்கு பெர்பெக்டா பாடுறாங்கண்ணே தெரியல.. மேடைப்பாடகர்களின் மீதான நம் எதிர்பார்ப்பு இவர்களால் அதிகமாகிறது.

இன்றய பாடகர்களில் கார்திக் அபாரமாகப் பாடினார். பல வருடங்களுக்குப் பிறகு 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' கேட்டது சுகம்.

இருபது ஆண்டுகளாய் இளையராஜா தமிழ் மக்களின் இசை ரசிப்பையே நிர்ணயித்திருக்கிறார். வெறும் சோறு சாபிட்றவங்களுக்கு சப்பாத்தி எப்படி வெறுக்குதோ அதுபோலத்தான் ராஜாவைக் கேட்டவர்களுக்கும் மற்றவை கசக்குது.

தன் காம்பட்டீஷனை அவர் குறைத்து பேசுவதும், "எங்க காலத்துல,," எனத்துவங்கி அவர் பேசும் கருத்துகளும் புலம்பலாகத்தான் படுகின்றன.
ரஹ்மான் காலத்தில் ராஜா இசை மீண்டும் எழுச்சியடைந்திருக்கிறதப் பார்த்தால் இவருக்கு 70, 80களில் போட்டி இருந்திருந்தா இன்னும் கலக்கியிருப்பார்னு தோணுது.

கச்சேரியில் பார்த்திபனின் நச்சரிப்பு தாங்கமுடியல. தமிழ் மக்கள் சார்பில் ஒத்துக்கிறோம் நீங்க கிரியேட்டிவான ஆள்தான் அதுக்காக இப்படியா? கச்சேரியில அடக்கி வாசிப்பதும் ஒரு அழகுதான் பார்த்திபன். இவர் பேச்சை குறைத்திருந்தால் இன்னும் சில பாடல்கள் கேட்டிருக்கலாம்போல.
ஜெயாவில், தொகுப்பில் தொலைந்து போனவையோ என்னவோ, இளையராஜாவின் பல பழைய சூப்பர்ஹிட்கள் மிஸ்ஸிங்.

எஸ். பி. முத்துராமன் ராஜா எப்படி தன்முயற்சிக்கு உதாரணம் எனக்கூறினார். மேடையிலிருந்த இசைக்கலைஞர்களுக்காக கைதட்டச் சொன்னார். எவ்வளவு பணிவாக இருக்கிறர் இவர். எத்தனை சூப்பர்ஹிட் படங்கள் தந்திருக்கிறர். கமல், ரஜினியின் அடையாளங்களாக விளங்கும் சில படங்களைத் தந்திருக்கிறார். இவரும் எளிய துவக்கமே கொண்டிருந்தவர் என்பதை மறக்கமுடியுமா?

பவதாரிணி ஏனோ மேடையில் பாடும்போது நல்லா பாடுறதில்லை. சித்ரா போன்றவர்கள் ஏன் இத்தனை வருஷம் பீல்டுல இருக்காங்கன்னு இப்பத்தான் புரியுது.

மொத்ததில் அருமயான ஒரு நிகழ்ச்சி. வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிஸ் பண்ணாதீங்க. இணையத்திலோ சி.டி களிலோ கிடைக்கலாம்.

பழைய ஞாபகங்கள் சில வந்து போவது நிச்சயம்.

சிறில் அலெக்ஸ்