.

Tuesday, January 24, 2006

புனிதராவது எப்படி?

கத்தோலிக்க திருச்சபை, போப் தலைமையில் இயங்கிவருகிறது. இவர்களின் முக்கியமான நம்பிக்கைகளில் 'புனிதர்களின் உறவு' (Communion of Saints) ஒன்று. அதாவது, கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்ந்து இறந்து போனவர்கள், மோட்சத்தில் நமக்காக கடவுளிடம் பரிந்து பேச இயன்றவர்கள், புனிதர்கள், என நம்பப்படுகிறார்கள்.

எப்படி கத்தோலிக்க திருச்சபை ஒருவரை புனிதராக அங்கீகரிக்கிறது?

10ஆம் நூற்றாண்டுவரை பொதுமக்களே, தாங்கள் புனிதராகக்கருதும் ஒருவரை புனிதராக அறிவித்தனர். பொதுவாக, இயேசுவின் பேரில் கொல்லப்பட்டவர்களே (Martyrs) இதில் அடக்கம். அதன்பின் சில வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது ஒழுங்கு படுத்தப்பட்டு பல மாற்றங்களுக்குப் பிறகு, 1983ல் கீழ் விவரிக்கப்படும் முறைக்கு வந்துள்ளது.

புனிதமாக வாழ்ந்தவர் எனக் கருதப்படும் ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகளாவது ஆன பிறகுதான் புனிதராக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். இந்த விதியை அன்னை தெரசாவிற்காகவும் 2005ல் இறந்த போப் இரண்டாம் அருள் சின்னப்பருக்கும் தளர்த்தியுள்ளனர்.

இதன்பின் அவரின் வாழ்க்கை குறிப்பையும், அவர் புனிதராவதற்கான வாதங்களையும் அவர் வாழ்ந்த பகுதியின் ஆயர்(Bishop) தொகுத்து வத்திக்கானுக்கு அனுப்புகிறார்.

வத்திக்கானில் இறையியல்(Theology) நிபுணர்கள் இதை ஆராய்கிறார்கள். இந்தக்குழுவின் அங்கீகாரமும் புனிதராக்கும் முயற்சிகளை மேற்பார்வையிடும் கர்தினால்களின் குழுவின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் அவர் 'வணக்கத்துக்குரியவர்' (Venerable) எனும் பட்டத்தை பெறுகிறார். இது முதல் படி. இந்தக்குழுக்கலில் எதிர்வாதம் செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கும். பரிந்துரைக்கப்பட்டிருப்பவர் புனிதராகத் தகுதியில்லாதவர் என இவர்கள் வாதாட வேண்டும் 'சாத்தானின் வழக்குரைஞர்கள்' (Devil's Advocates) என இவர்களை அழைப்பது வழக்கம்.

அடுத்தாக, இவர் ஏதாவது புதுமை செய்கிறாரா என பார்க்கிரார்கள். ஏதாவது ஒரு நபர், புனிதராக கருதப்படுபவரிடம், முறையிட்டு புதுமை நிகழ்த்தப்பட்டால் அது ஆராய்சிக்கு உட்படுத்தப்பட்டு, புதுமைதான் என னிலப்படுத்தப்படுகிறது. பொதுவாக தீராத நோய்கள் தீர்ந்து போன புதுமைகள் இதில் அடக்கம்.

இதுபோல, தன் இறப்புக்குப் பிறகு இவர் ஒரு புதுமையாவதுசெய்திருந்தால் அவரை 'அர்சிக்கப்பட்டவர்' (Blessed), என பட்டமளிக்கிறார்கள். பொதுவாக இந்த அறிவிப்பு இந்த நபர் வாழ்ந்த ஊர், நாட்டு மக்களுக்கே வழங்கப்படுகிறது.

அன்னை தெரசா அர்சிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார், அதற்காக அறியப்பட்ட புதுமை பற்றிய சுட்டி(ஆங்கிலத்தில்).

இந்த இரு கட்டங்களையும் தாண்டியபின் இன்னுமொரு புதுமை செய்தால் புனிதராக(Saint), அந்த நபர் அறிவிக்கப்படுகிறார்.

'புனித' (St.) எனும் அடைமொழி வைத்து இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். புனித அந்தோனியார், புனித சவேரியார், புனித அருளானந்தர்(தமிழகத்தில் இறந்தவர்) போன்றோர் மேற்கோள்.

பாதிரியார், கன்னியர்கள்(Sisters) தவிர பொது மக்கள் பலரும் புனிதர்களாகியிருக்கிறார்கள்.

1969ல் புனிதர்களின் பட்டியல் ஆராயப்பட்டு பல புனிதர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. புத்தரின் கதை மேற்கில், கிறித்துவ புனிதரின் கதையாக திரிக்கப்பட்டு அறியப்பட்டதால் அவர் பெயரும் பட்டியலில் இருந்ததாம். இதுபோல வெறும் வாய்வழி பெயர் பெற்று புனிதர்களாக அறிவிக்கப்பட்டிருந்த பலரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன, இதில் பெயர்போன (nice pun)பயணிகளின் காவலர் கிரிஸ்டோபரும் அடக்கம்.

இப்போதுள்ள முறயின்படி ஒருவரை புனிதரென்று அறிவித்தால் அதை மாற்றமுடியாது. அது போப்பின் 'தவறாத்தன்மை' (Infallibility) படி அறிவிக்கப்படுகிறது.

எல்லா மதங்களிலும் புனிதர்கள் இருக்கிறார்கள், எல்லா மதங்களிலும் புதுமைகளும் அற்புதங்களும் தினம் தினம் நடக்கின்றன என்பது உண்மை. 'நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியடா' என்கிற கண்ணதாசனின் வரிகளில் நம்பிக்கை கொள்கிறேன்.

மதங்களை விட கடவுள் பெரியவர், மந்திரத்தைவிட நம்பிக்கயே பெரியது.

டூ மச் பிலாசபி..

அன்னை தெரசாவை புனிதரென்று கூற நாம் யாரையும் கேட்கத்தேவையில்லை. அவரிடம் மதத்தைவிட மனிதமே மிஞ்சியிருந்தது என்பது என் கருத்து.

4 comments:

Anonymous said...

hi
your blogs r good and interesting.ur writings r simple and elegant....ur latest blog about saints is informative..congrats...
kavian

சிறில் அலெக்ஸ் said...

Thanks Kavian, please continue reading and supporting.

Anonymous said...

Hi cyril

I liked this very much.Good analysis, simple and well said.

சிறில் அலெக்ஸ் said...

Thanks Jude

சிறில் அலெக்ஸ்