.

Friday, June 23, 2006

மதமாற்றமா? மனமாற்றமா?

மதமாற்றம் பற்றிய சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. சில பின்னூட்டவாதங்களையும் (பின்னூட்டம் + வாதம்) படிக்க நேர்ந்தது. இதைப் பற்றி சில எண்ணங்கள்.

ஒரு குட்டிக்கதை.

அழகான இளைஞியும் இளைஞனும் சந்தையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் வேறு யாருமில்லை.
அந்தப் பெண் இளைஞனிடம் "எனக்குப் பயமாயிருக்கிறது." என்றாள்.
இளைஞன் "என்ன பயம்?" என்றான். "நீ எனக்கு முத்தம் கொடுத்திருவியோன்னு பயமாயிருக்கு" என்றாள் பெண்.
"அதெப்படி முடியும் என் தலையில அரிசி மூட்ட இருக்குது, கையில ஆட்டை பிடிச்சுருக்கேன், இந்த இடுக்குல காய்கறி கூட வச்சுருக்கேன். நான் எப்படி ஒன்ன இப்ப முத்தம் கொடுக்கிறது?". இளைஞன் வெகுளியாய் கேட்டான்.
"அரிசி மூட்டைய இறக்கி வச்சுட்டு, ஆட்டை அந்த மரத்துல கட்டிபோட்டுட்டு, காய்கறிக் கூடைய அரிசிமூட்டை மேல வச்சுட்டு வந்து என்னை கட்டி பிடிச்சு முத்தும் தருவியோன்னு பயமாயிருக்கு" என்றாள் அந்தப் பெண்.




கருத்து : நாம் பயத்துல சொல்லும் விஷயங்கள் பல
நேரங்களில் நம் எதிரிக்கு சாதகமாய் அமைகின்றன அல்லது
நாம்தான்
நம்ம எதிரிகளுக்கு பல நேரங்களில் ஆலோசனைகளை தருகிறோம்.


'கட்டாய மதமாற்றம்' எனும் பதம் இப்போ பழக்கத்தில் வந்துள்ளது. மிஷனரிகள் எனப்படும் மதம் பரப்பும் கிறீத்துவ போதகர்கள் 'கட்டாயமாய்' மதம் மாற்றுவதாக பலர் நம்புகிறார்கள்.

உண்மையில் இது சாத்தியமா?

'கட்டாயம்' என்றால் என்ன? பலவந்தமாகவா? அது நிச்சயம் சாத்தியமில்லை. கிறித்துவர்கள் 2%மைனாரிட்டி என்பது ஒருபக்கமிருக்க, பலவந்தத்தம் செய்வதற்கு சரியான (அடிதடி) அரசியல் பின்னணி வேண்டும் என்பதும் அடிதடியில் இறங்கி கிறித்துவத்தில் மக்களை சேர்ப்பது, அதுவும் இந்தியா போன்ற சர்வதேச அரங்கில் எப்போதும் பேசப்படுகின்ற நாட்டில் செய்வது இன்றைய சூழலில் சாத்தியமில்லை. சுதந்திர இந்தியாவில் பலவந்தமாக யாரும் மதம் மாற்றப்பட்டதாக நான் இதுவரைக் கேள்விப் பட்டதில்லை.

பணம் தந்து மதம் மாற்றுகிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு? ஒருவருக்கு ஒரு நாள் 1000 கொடுக்கலாம் ஆனா எல்லா நாளும் கொடுக்க முடியுமா? உண்மையில் மதம் மாறினால் காசு கிடைக்குமென்றால் இந்தியாவில், ஏழ்மை அதிகமிருக்கிறபடியால், கிறித்துவர்கள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கவேண்டுமென நினைக்கிறேன். அதுவுமில்லை. ஒரு மிதமான வளர்ச்சியையே கிறித்துவம் கொண்டுள்ளது, மற்ற சில மதங்களைவிட குறைவான வளர்ச்சியே இது.

கிறித்துவராகிவிட்டால் பணக்காரனாகிவிடலாம் என்கிறது யாரோ கனவிலிருந்து விழித்துவிட்டுச் சொன்னது. செயராமன் பதிவைப் படிக்கவும். (இவர் சொல்லும் சில விபரங்கள் சரியானதாக இல்லை என்றாலும்...)

இன்னுமொரு குற்றச்சாட்டு நன்மை செய்வதுபோல ஊருக்குள் வந்து மெதுவாக மதம் மாற்றுகிறார்கள் என்பது. இதற்கு எப்படி விளக்கம் சொல்வதென்று புரியவில்லை.

நல்லது செய்வதில் உள் அர்த்தம் கற்பித்துக்கொண்டு பலருக்கு கிடைக்கும் உதவியை தடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் எத்தனை கிறித்துவ கல்விக்கூடங்கள், சமூக சேவை நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருக்கின்றன, மதம் மாறினால்தான் சேர்த்துக்கொள்வோமென்கிறதாய் எந்த நிறுவனமும் கூறியதாயில்லையே. அப்படியே மக்கள் தங்களுக்கு நல்லது செய்பவர்கள் பின்னால் சென்றால் என்னதான் தவறு? அன்னை தெரசா எத்தனைபேரை 'கட்டாய' மதமாற்றம் செய்தார்? அவர் செய்யாத சேவையா?

மதமாற்றம் நடப்பதேயில்லை எனச் சொல்வதற்கில்லை. நிச்சயம் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும். ஏன் கிராமங்களுக்குப்போகவேண்டும்? , சென்னையிலேயே ஒன்றிரண்டுபேர் ஒவ்வொரு கோவிலிலும் (பொதுவாக) ஈஸ்ட்டர் திருநாளன்று மதம் மாறக் கண்டிருக்கிறேன். இவர்கள் எந்தவித கட்டாயத்திர்கு ஆளாக்கப்படுகிறாகள் என்பது அவர்களுக்கும் அவர்கள் கும்பிட்ட, கும்பிடப் போகின்ற கடவுள்களுக்குமே வெளிச்சம்.

என் கல்லூரித் தோழி, இந்து மதம் சார்ந்தவள், கிறித்துவப் பையனை காதலித்தாள், மணமுடித்தாள். அவள் கணவனைவிட இயேசுவை பெரிதாய் நினைக்க ஆரம்பித்துவிட்டாள். நான் எடுத்துச் சொல்லியும் அவளுக்கு தன் தெய்வங்களை விடவும் இயேசுவே பெரிதாய் தோன்றினார்.

உண்மையில் அவளுக்கு என்ன நிகழ்ந்தது? தன் மதம் பற்றிய, அதன் அதிசயிக்கத்தக்க தத்துவ குணாதிசயங்கள் பற்றிய அறிவே இல்லாதிருந்தாள். நம்மில் எத்தனைபேருக்கு இந்துமதம் சொல்லும் தத்துவ இறையியல் பற்றித் தெரியும்? காப்பியங்களையே முழுமையாகத் தெரியாதவர்கள் எத்தனைபேர்.

எதையுமே எடுத்துச் சொல்லும்போது அதற்கு அதிக மதிப்பு இருக்கிறது அல்லது அதிக மதிப்பு இருப்பது போலத் தோன்றுகிறது. அதனால்தான் நல்ல பொருட்களைக்கூட கூவி விக்கவேண்டியுள்ளது. 'கட்டாயம்' என்பதை விட இந்த கூவி விற்கும் தன்மைதான் கிறித்துவ மத மாற்றத்தின் அடிப்படை வழியாக இருக்கிறது. இதற்கு ஜனநாயகத்தில் இடமுண்டு.

கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் எனப் பார்த்தால் அதை செய்பவர்கள் இரண்டுபேர். நம் தாய் தந்தை. தத்துவார்த்தமாக சிந்தித்தால் இது புரியும். பிறந்து ஒன்றுமறியா குழந்தைக்கு இதுதான் கடவுள், இவன் நம்ம மதம், இது நம்ம சாதின்னு பல வழிகள்ள எண்ணங்களை திணிக்கிறோம், அதை பின்பற்றச்சொல்லி கட்டாயப்படுத்துகிறோம். நாம் நல்லதே நினைத்து இதைச் செய்தாலும் இது ஒரு திணிப்புதான் என்பது உண்மை.

மதமாற்றம் எல்லா மதங்களும் செய்திருக்கின்றன. துவக்கத்திலுருந்தே எந்த மதமும் இப்போது இருக்கும் நிலையில் இருந்ததில்லை. கொஞ்சம் வரலாற்றை புரட்டினால் 'கட்டாய' மதமாற்றம் இல்லாமல் எந்தமதமும் இருக்கவில்லை என உணரலாம்.

மதம் மாறாதே என ஒருவரை கட்டாயப்படுத்துவதற்கும், மதம் மாறு என கட்டாயப் படுத்துவதற்கும் யாருக்கும் உரிமையில்லை.

எனக்குத் தெரிந்தவகையில் கத்தோலிக்க குருக்களும் கன்னியர்களும் மதமாற்றம் செய்ய சுய உந்துதல் உடையவர்களாகத் தெரியவில்லை. பலர் சமூக/ கல்வி நிறுவனங்களில் நமக்கு என்ன பதவி கிடைக்குமெனும் ஏக்கத்திலேயே காலம் தள்ளுகின்றனர். போய் மற்ற மதத்தினருக்கு இயேசுவை அறிவி எனச்சொன்னால் து.கா.து.கான்னு ஓட்டம்பிடிப்பவர்கள் பலர். அநேகம் பாதிரியார்களுக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையே கிடையாதென்பதுபோலத் தெரியும். இவர்கள் போய் மதம் மாற்றுகிறார்கள் என்றால் நம்பமுடியவில்லை.

போப் 'அறுவடை' எனச் சொல்கிறாரே? அறுவடை என்பது இயேசு பயன் படுத்திய பதம். அதைத்தான் இவரும் பயன்படுத்துகிறார். "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு" இது இயேசு சொன்னது. இதில் எந்தவித தவறும் உள்ளதாகத் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் அதிகம் கூவி வில்லுங்களளெனச் சொல்லுகிறார் அவ்வளவுதான். எல்லோரையும் போட்டுத்தாக்குங்க எனச் சொல்லவில்லை.

இந்தக் கூவி விற்கும் போது பல நேரங்கலில் அடுத்தவர் மனம் புண்படும்படி அவர்கள் விற்பதை (அல்லது வைத்திருப்பதை) தாழ்த்திப் பேசுகீறார்கள் என்பது கண்டிக்கப்படவேண்டியதே. இதைக் கண்டிக்க யாருக்கும் உரிமையுள்ளது. அதேபோல கூவி விற்பவர்களை அடுத்தவர் மட்டம் தட்டலாம்.

தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் நடக்கும்போது, "நீ என் கட்சியில்ல. இங்க வந்து ஓட்டுக்கேட்கக்கூடாது" என யாரையும் உங்களால் தடுக்கமுடியுமா? அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என நினைக்கிறேன்..

கொஞ்சம் தாறுமாறாகத்தான் இந்தப் பதிவு வந்துள்ளது. தோன்றிய எண்ணங்களை அப்படியே பதித்தேன்.

முடிவாக...

  • கட்டாய மதமாற்றம் என்பது இந்தக் காலத்தில் சாத்தியமில்லை.
  • மதமாற்றம் எல்லா மதங்களிலும் நடைபெற்றுள்ளன; இதில் பல கட்டாய மதமாற்றங்களும்.
  • நம் மதம் பற்றிய அறிவைப் பெற நாம் முயல வெண்டியது அவசியம்.
  • மதம் மாறு எனக் கட்டாயப் படுத்துவதற்கும் மதம் மாறாதே எனக் கட்டாயப் படுத்துவதற்கும் வித்தியாசமில்லை.
  • தன் கடவுள் யார் என்பதை தனி மனிதந்தான் நிர்னயிக்கவேண்டும்.
"ஒருவன் தன் கடவுளை பக்தியோடு வணங்க முடியாவிட்டால் எந்தக்
கடவுளையும் பக்தியோடு வணங்கமுடியாது." - இராமகிருஷ்ண பரமஹம்சர். இதுதான் மதமாற்றம் பற்றிய என் நிலைப்பாடு.

பாஷா இந்தியா - வெற்றிபெற்ற தமிழ் பதிவுகள்

பாஷா இந்தியா நடத்திய இந்திய மொழியிலான வலைப்பதிவுகளுக்கான போட்டியில் வெற்றிபெற்ற தமிழ் பதிவுகள்.


சிறந்த தமிழ் பதிவு (Best Tamil Blog) எண்ணங்கள்
சிறந்த பொழுதுபோக்குப் பதிவு (Best in Entertainment
Category)
சினிமா பாடல்கள்

சிறந்த அரசியல் பதிவு(Political) உள்ளல்

விளையாட்டு(Sports) சதுரங்கம்

தொழில் நுட்பம்(Technology) தமிழ்மணம்

எனக்கு முந்தின பறவை (Early Bird) எனப்படும் முந்திரிக் கொட்டைங்களுக்கான பரிசு கிடைத்துள்ளது. நாந்தான் 10வது பறவை.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.





Wednesday, June 21, 2006

தமிழோவியத்தில்..

இந்த வார தமிழோவியத்தில் சிறப்பாசிரியராய் நான் எழுதிய கட்டுரைகளின் அறிமுகம்

சிவந்தமண் துவங்கி சிக்காகோ வரை: சுய தம்பட்டத்தின் உச்சக் கட்டம் இந்த கட்டுரை எனினும் ஒரு எளிய கிராமத்தில் பிறந்து வளரும் ஒருவரின் வாழ்க்கை எங்கெல்லாம் பயணிக்கிறதென்பதை சொல்கிறது இது.

"நான் ஒரு அங்கீகரிக்கப்பட்டு, மூன்றுமுறை வடிகட்டப்பட்டு, ஐ
எஸ் ஐ முத்திரை குத்தப் பட்ட மீனவ கிராமத்தான். உலகின் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத மூலையில், வெளி உலகைவிட்டே ஒதுங்கி, தெற்கே முடிவில்லா கடல் நோகி வாழும் சில மனிதர்கள் மத்தியில் பிறந்தேன் வளர்ந்தேன். "

"செம்மண் அகழிகளால் பிரிக்கப்பட்ட ஒரு
குட்டித்தீவு அந்தச் 'சிவந்தமண்'."

"1993 சென்னை லொயோலாவில் சூர்யாவுக்கு ஜூனியராக வணிகவியல்
பிரிவில் இடம் கிடைத்தது."

"சிக்காகோ வந்திறங்கினேன். உலகம் ரெம்ப பெருசு என அந்த 18 மணி
நேர பயணத்தில் புரிந்தது."

எந்தையும் நானும்: தந்தையர் தினம் பற்றிய பதிவு. என் தந்தையையும் என்னையும் முன்வைத்து. ஆமாங்க நானும் ஒரு தந்தைதான்.

"இந்தியாவில் பல தந்தைகள் ஸ்மார்டை விடவும் கடினமான
நிலமைகளில் தங்கள் குடும்பங்களை வழிநடத்துகிறார்கள் அல்லது வழி நடத்த
உதவுகிறார்கள். வருடத்துக்கு இரண்டுமுறை தந்தையர் தினம் கொண்டாடலாம் நாம், தப்பில்லை"

"'தான்' என்னும் எண்ணம், (அகந்தை அல்ல), அவரிடம் அதிகமாகவே இருந்தது."

"'கட்டி வச்சு தோலை உரிப்பேன்' என்பது எனக்கு வெறும் வார்த்தைகளல்ல, அனுபவம்."


கத்தோலிக்கம் ஒரு மேலோட்டம்: கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு மற்றும் நம்பிக்கைகளைப் பற்றியது. முற்றிலும் தகவல்களாகவே அமைந்துள்ளது இந்த காட்டுரை.

"கி.பி 110 ஆன்டியொக்கின் பிஷப் இக்னேஷியச் முதன்முறை 'கத்தோலிக்க
திருச்சபை' எனும் பெயரை பயன்படுத்துகிறார், பெயர் நிலைக்கிறது. வரலாறு பல
போராட்டங்களுடன் தொடர்கிறது."

"1517ல் மார்டின் லூத்தர்(அமெரிக்கர் அல்ல) கத்தோலிக்க திருச்சபை
காணிக்கைக்கு/காசுக்கு ஆன்மீக பரிகாரங்களை(Indulgance) வழங்குவதை எதிர்க்கிறார்.
1582 போப் கிரகொரி தற்கால காலண்டரை அறிவிக்கிறார்."

"கலை, இலக்கிய, அறிவியல் படைப்புக்கள் எல்லாமே திருச்சபையின்
அனுமதியுடனேயே வெளியிடப்பட்டன. "

"சரி கிறிஸ்த்துமஸுக்கு லீவ் கிடைக்கும் ஆனா ஈஸ்டருக்கு?
யோசியுங்க."

"இரண்டாயிரம் ஆண்டுகளாக பல குறைகளை நிவர்த்திசெய்தும்,
சிலநேரங்களில் மூடிமறைத்தும் பல தடைகளையும் தாண்டி இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பிரமாண்டமான, உலகளவிலான ஒரு ஆன்மீக அமைப்பாக கத்தோலிக்க திருச்சபை வளர்ந்திருக்கிறது
என்பதை மறுக்கமுடியாது."

சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும்: சிரிப்போடு சேர்ந்து சில தகவல்களும் உண்டு. சிக்காகோவில் என்னென்ன பார்க்கலாம் என்பது பற்றிய கட்டுரை.

"எப்படீடி அந்துமதி இப்படி அவிழ்த்து விடற? சதா உன்ன மாதிரி
என்சைகக்ளோப்பீடியாவை படிச்சா நான்கூட வாசகி கேள்விக்கு பதிலெழுதலாம் போல."

"சரி. நம்ம கார்ட்டூன் மூஞ்ச வச்சி எப்படி அடையாளம் கண்டுபிடிப்பாரு?"

"மளிக ஜாமானெல்லாம் நீங்க தனியா போய் வாங்கிக்கங்க இப்ப கோவிலுக்குப்
போகலாம்.".

"முதல்ல சியர்ஸ் போகலாம். சிக்காகோ வந்துட்டு சியர்ஸ் ஸ்கை டெக் (Sky Deck)
போகலன்னா எப்பவுமே அது குறையாத்தான் இருக்கும். அது பெரிய அனுபவம்னு சொல்லமுடியாது
ஆனா சியர்ஸ் டவர் மேல போனோம்னு ஒரு பேரு அவ்வளவுதான். கிட்டத்தட்ட 15 லட்சம்பேரு வருசா வருசம் வர்றாங்க"

"ஏன் பெயர் போன இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு வர்றீங்க. பெயர் இருக்கிற இடமா
எதுவும் தெரியாதா?"

படித்துவிட்டு பின்னூட்டம் அங்கேயும் இடலாம் இங்கேயும் இடலாம்.

Tuesday, June 20, 2006

இந்த யானைக்கு ஆடத் தெரியும்.

அமெரிக்க வார இதழ் 'டைம்'ல் இந்த வாரம் இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சிபற்றி கட்டுரைகள் வந்துள்ளன. என்னை கவர்ந்த சில வரிகள்.

  • In ways big and small, Indians are changing the world.
  • (India) the second most populous nation in the world, and projected to be by 2015 the most populous...
  • Writers like to attach catchy tags to nations, which is why you have read plenty about the rise of Asian tigers and the Chinese dragon. Now here comes the elephant.
  • India's economy is growing more than 8% a year, and the country is modernizing so fast that old friends are bewildered by the changes that occurred between visits.
  • During the cold war, relations between New Delhi and Washington were frosty at best, as India cozied up to the Soviet Union and successive U.S. Administrations armed and supported India's regional rival, Pakistan.
  • Making friends with India is a good way for the U.S. to hedge its Asia bet.
  • Prosperity and progress haven't touched many of the nearly 650,000 villages where more than two-thirds of India's population lives.
  • Backbreaking, empty-stomach poverty, which China has been tackling successfully for decades, is still all too common in India. Education for women--the key driver of China's rise to become the workshop of the world--lags terribly in India.
  • The nation (India) has more people with HIV/AIDS than any other in the world, but until recently the Indian government was in a disgraceful state of denial about the epidemic.


  • Transportation networks and electrical grids, which are crucial to industrial development and job creation, are so dilapidated that it will take many years to modernize them.
  • China's key economic reforms took shape in the late 1970s, India's not until the early 1990s. But India is younger and freer than China.
  • Many of its companies are already innovative world beaters. India is playing catch-up, for sure, but it has the skills, the people and the sort of hustle and dynamism that Americans respect, to do so.
  • It deserves the new notice it has got in the U.S. We're all about to discover: this elephant can dance.

வார்ப்புருமாற்றம்

எத்தனை நாள்தான் பாஸ்ட்டன் பாலாவின் டெம்ப்ளேட்டையே பார்த்து ஜொள் விட்டுக்கொண்டிருப்பது, நாமும் கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமே என என் வார்ப்புருவை கொஞ்சம் மாற்றியமைத்துள்ளேன்.

'என்னதான் டெம்ப்ளேட் மாத்தினாலும் அதே பழைய பாணி பதிவுகள்தானே?'
என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. உங்கள் மைக்கை மியூட் செய்யவும்


தலைப்பிலிருந்த தப்பை திருத்திய பொன்ஸுக்கு நன்றி. 'வாற்ப்புரு' இல்லை 'வார்ப்புரு'

'The-MIZ' ஓவியம்

தலைப்ப ஒரு சேரப் படியுங்க... ஆமா, தமிழோவியம்தான்.

கடந்த நாலரை வருஷமா இண்டர்நெட்டுல உலவகிட்டுத் திரியுற ஒரு வார இதழ்.

'ஒரு' வார இதழ்னா அப்ப மத்த வாரம் வராதான்னு கடிக்காதீங்க, இது வாரா வாரம் வர்ற வார இதழ். அப்படீன்னா இந்த வாரமும் வந்திருக்குமே. போய் பாருங்க. சிறப்பு ஆசிரியர் ஒருத்தர் எழுதியிருக்கார்.


Monday, June 19, 2006

ஏழை நாடு - PG18


"என்னப்பா அங்க கூட்டம்?"


"பாவம் கீழே காசு விழுந்துச்சுபோல தேடிக்கிட்டிருக்கு"



"ஐயோ பாவம் துணி வாங்க கூட காசில்ல."



"ஆன ஷூ நல்லாருக்கு பாரேன்".

நியூ யார்க், டைம் ஸ்கொயரில் எடுத்த படங்கள்.

நேரம் நல்லாருக்கு

Friday, June 09, 2006

அறிவிருக்கா?

பொதுவாக பள்ளி கல்லூரியில் விளையாட்டுகளில் ஈடுபாடுள்ளவர்கள் படிப்பில் சிறப்பதில்லை. பல நேரங்களில் ஆசிரியர்கள் இவர்களை சிறுமைப் படுத்துவதை பார்க்கலாம். ஏனோ ஸ்போர்ட்ஸ் என்றால் மூளைக்கு வேலைஇல்லை எனும் நினைப்பே இதற்கு காரணம்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு வினாடிக்கும் மிகக்குறைவான மணித்துளியில் எத்தனை தகவல்களை ஆராய்ந்து இவர்கள் முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது என எண்ணத்தோன்றுகிறது. இப்படி அதிவேகமுடிவுகளை எடுக்கும் இவர்களின் மூளை எவ்வளவு கூர்மையானதயிருக்கும்? நாம் ஏனோ படிப்பறிவுதான் பெரியது என நினைக்கிறோம்.

ஈக்குயேடர் போலந்தை 2-0 என வென்றுள்ளது. துவக்கத்தில் சில நிமிடங்கள் போலந்து வேகம் காட்டியது ஆனால் போலந்தின் தடுப்பாட்டம் தப்பாட்டமானதால் ஈக்குயேடர் 2 கோல்கள் அடிக்க முடிந்தது.

போலந்து இரு முறை பந்தை கோல் போஸ்ட்டில் அடித்து வாய்ப்பை நழுவவிட்டது.

நிர்வாணா

ஒருவன் காட்டுவழியே நடக்கும்போது ஒரு காட்சியைக் கண்டான்.

புலி ஒன்று கால் முறிந்து வேட்டையாடமுடியாமல் கிடந்தது. ஆனால் ஆச்சர்யப்படும்படி ஒரு நரி அந்தப் புலிக்கு உணவு கொண்டுவந்து தந்தது.

'ஆகா கடவுளின் செயல்கள் வியக்கத்தக்கவை' என நினைத்தான் அந்த மனிதன். 'நானும் இந்தப் புலிபோல இங்கேயே படுத்திருந்தால் கடவுள் எனக்கும் இதுபோல உணவு தந்து காப்பாற்றுவார்' எனச் சொல்லி அந்த இடத்திலேயே படுத்துவிட்டான்.

சில நாட்கள் ஆயின யாரும் வரவில்லை. பசியால் வாடினான். இன்னும் சில நாட்கள் பசி மயக்கத்தில் கழிந்தன. இறக்கும் நிலையில் இறைவனை வேண்டினான். 'ஏன் கடவுளே? அந்தப் புலிக்குக் காட்டும் இரக்கம் எனக்கு கிடையாதா?', என்றான். கடவுள் அவன் முன்னே தோன்றினார்,'மகனே அந்தக் காட்சி உனக்கு கிடைத்தது அந்தப் புலியைப் பின்பற்ற அல்ல அந்த நரியைப் பின்பற்ற' என்றார்.

சிறில் அலெக்ஸ்